search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 117612"

    பட்லர் ரன்அவுட் வி‌ஷயத்தில் அஸ்வின் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி கூறியுள்ளார். #IPL2019 #Ashwin #Buttler
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தார்.

    பந்துவீசும் போது கிரீசை விட்டு வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி அவரை ‘ரன்அவுட்’ செய்தார்.

    அஸ்வினின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தான் கிரிக்கெட் விதிகளின் படி தான் நடந்து கொண்டேன் என அஸ்வின் விளக்கம் அளித்தார். ஒன்று விதியை மாற்றுங்கள் அல்லது அதை சரி செய்யுங்கள் என்று அவர் காட்டமாக தெரிவித்தார்.

    அஸ்வின் ‘மன்கட்’ முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக வீரர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். வார்னே, வாகன், டீன் ஜோன்ஸ், பீட்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் அஸ்வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    கபில்தேவ், முரளி கார்த்திக் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ), நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது.

    இந்த வி‌ஷயத்தில் அஸ்வின் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய திறமைகளை தான் பந்துவீச்சாளர்கள் கையாள வேண்டும். அப்படி விளையாடினால் தான் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு முடிவு நன்றாக சென்றடையும் ஐ.சி.சி. விதிப்படி நடுவர் தீர்ப்பளித்து விட்டதால் பட்லர் சூழலை கருத்தில் கொண்டு சென்றுவிட்டார்.

    அஸ்வின் விதிகளையும், விளையாட்டின் ஆரோக்கியத்தையும் கண்டிப்பாக புரிந்து கொண்டு இரு வி‌ஷயங்களையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். மைதானத்தில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.

    ஒரு வீரர் மற்றவரை கிரிக்கெட் திறமையை வைத்து ஏமாற்றலாம். ஆனால் தனது போலியான திறமைகளை வைத்து ஏமாற்றக்கூடாது. ஒரு பேட்ஸ்மேன் கிரீசை விட்டு விலகி முன்னேறி சென்றால் அதை ஜென்டில்மேன் போல சரியான வழியில் அணுக வேண்டும்.

    போட்டி என்பது நல்லப்படியாக இருக்க வேண்டும். போட்டியில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2019 #Ashwin #Buttler
    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் #BigBashLeague
    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இனறு நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி தண்டர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், கேப்டன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    வாட்சன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 54 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். க்ரீன் 14 பந்தில் 26 ரன்கள் விளாச சிட்னி தண்டர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.


    மேத்யூ வடே

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் மேத்யூ வடே, ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். ஷார்ட் 39 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்களும், வடே 49 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 85 ரன்கள் குவித்தனர்.

    பெய்லி 10 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
    இங்கிலாந்து கடைநிலை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் சரியான வேலை செய்யவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் இந்தியாவின் அபார பந்து வீச்சால் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 181 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்திருந்தது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது டெய்ல்எண்டர்ஸ்-களை வைத்து ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கடைசி 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துவிட்டது. இதுதான் இந்தியாவிற்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. பட்லர் 89 ரன்களும், அடில் ரஷித் 15 ரன்களும், ஸ்டூவர்ட் பிராட் 38 ரன்களும் அடித்தனர்.

    இந்நிலையில் டெய்ல்எண்டர்ஸ் பெட்ஸ்மேன்களுக்கு எதிராக எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘கூடுதலாக ஒரு பந்து வீச்சாளருடன் களம் இறங்கும்போது, அது சில வசதிகளை ஏற்படுத்தும். நான்கு பந்து வீச்சாளர்களுடன் டெய்ல்எண்டர்ஸ்-க்கு பந்து வீசும்போது அதிக ஓவர்கள் வீசிய வேண்டியுள்ளது. ஏனென்றால், உடனடியாக அடுத்த ஸ்பெல் வீச வேண்டியுள்ளது.

    லோ-ஆர்டன் பேட்ஸ்மேன்களுக்கு என ஸ்பெஷல் திட்டம் ஏதும் நாங்கள் வகுக்கவில்லை. எங்களுடைய திட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை.’’ என்றார்.
    இடது கைவிரல் முறிந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

    டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது (ஆண்டர்சன் வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது இடது கை நடுவிரலை பந்து பலமாக தாக்கியது). பின்னர் மருத்துவ பரிசோதனையில் விரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    3-வது டெஸ்டிற்கும் 4-வது டெஸ்டிற்கும் இடையில் சுமார் 10 நாட்கள் இடைவெளி இருந்ததால் அவரது காயம் குணமடைந்து அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆனால், காயம் முழுமையாக குணமடைந்தால்தான் அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். இல்லையெனில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் நான் விக்கெட் கீப்பர் பணியை செய்ய ஆர்வமாக இருக்கிறேன் என்று பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘‘விக்கெட் கீப்பர் பணியை நான் நேசிக்கிறேன். கடந்த 40 டெஸ்ட் போட்டிகளில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன்’’ குறிப்பிட்டுள்ளார். பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பர் பணியை செய்யவில்லை என்றால் பட்லர் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
    பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் பரபரப்பான சூழ்நிலையை அடைந்துள்ளது#ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. குக் 9 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் நேற்றைய 13 ரன்னிலேயே இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். குக் 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் பும்ரா பந்திலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களை லோகேஷ் ராகுல், விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்கள். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். பட்லர் ஒரு ரன் எடுத்திருக்கும்போது பும்ரா பந்தில் விக்கெட் கீப்பரிம் கேட்ச் கொடுத்தார். ரிஷப் பந்த் அதை பிடிக்க தவறினார்.

    அதன்பின் இருவரும் நங்கூரம் பாய்ச்ச மாதிரி நிலைத்து நின்று விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு ஜோடி சேர்ந்த இருவரும், தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



    அதன்பின்னரும் சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் ஜோடியாக 150 ரன்களை கடந்தனர். இதனால் இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தது. ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 152 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.

    80 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 106 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றிக்கு இன்னும் 298 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த ஜோடியால் இங்கிலாந்து இந்த டெஸ்டை உயிரோட்டமாக வைத்துள்ளது. இருவரும் இணைந்து 161 ரன்கள் சேர்த்துள்ளனர்.
    இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவனை தேர்வு செய்வதில் கடும் தலைவலி ஏற்படும் என பட்லர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். 2-வது இன்னிங்சில் விராட் கோலி உள்பட முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    அதன்பின் பிரிஸ்டோல் அடிதடி வழக்க தொடர்பாக கோர்ட்டில் ஆஜரானதால் லார்ட்ஸ் டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக லார்ட்ஸ் டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்தார். இவர் சதம் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் விராட் கோலியை வீழ்த்தி இந்தியா 107 ரன்னில் சுருள முக்கிய காரணமாக இருந்தார்.



    பிரிஸ்டோல் அடிதடி தகராறில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி அல்ல என்று கோர்ட் விடுவித்துள்ளது. இதனால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.



    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து 1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. பட்லர், 6. பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), 7. கிறிஸ் வோக்ஸ், 8. சாம் குர்ரான், 9. அடில் ரஷித், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    தற்போது பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியதால் ஆடும் லெவனில் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டால் கிறிஸ் வோக்ஸ்தான் வழக்கப்படி நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் சாம் குர்ரான் நீக்கப்பட வேண்டும். இவர் முதல் டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லார்ட்ஸ் டெஸ்டிவ் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதனால் இங்கிலாந்து இருவரில் ஒருவரை நீக்க யோசிக்கும்.



    அப்படி என்றால் ஜோஸ் பட்லர், போப், அடில் ரஷித் ஆகியோர்தான் லிஸ்டில் உள்ளனர். அடில் ரஷித் சுழற்பந்து வீச்சாளர். சுழற்பந்து வீச்சாளர் வேண்டாம் என்றால்தான் அடில் ரஷித் நீக்கப்படுவார். இல்லை எனில் பட்லர், போப் ஆகிய பேட்ஸ்மேன்களில் ஒருவர்தான் நீக்கப்பட வேண்டும்.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு ஆடும் லெவனை தேர்வு செய்வதில் பெரும் தலைவலி காத்திருக்கிறது. ஜோஸ் பட்லரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விராட் கோலி அடித்த பந்தை கல்லி திசையில் நின்று பிடிக்க முயன்ற ஜோஸ் பட்லருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அஸ்வின் (4), முகமது ஷமி (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் 13 ஓவர் வரை இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    முதல் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். 2014-ம் ஆண்டு ஆண்டர்சனை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்து வீசி விராட் கோலியை அவுட்டாக்கியது போல் தற்போதும் அதே யுக்தியை கடைபிடித்தார்.



    ஆண்டர்சன் பந்தை விராட் கோலி தொட்டுவிட அது ஸ்லிப் அருகில் கல்லியில் நின்ற ஜோஸ் பட்லரின் அருகே பாய்ந்து சென்றது. பட்லர் இடது கையால் பந்தை பிடிக்க முயன்றார். அப்போது பட்லர் கைவிரலில் பந்தை பலமாக தாக்கிச் சென்றது.

    இதில் பட்லரின் இடது கையின் நடுவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில்தான் அவரது காயத்தின் வீரியம் தெரியவரும். ஒருவேளை எலும்பு முறிவு இருந்தால் தொடர்ந்து விளையாடுவது சந்தேகமே.
    குல்தீப் யாதவ் 6 விக்கெட் வீழ்த்திய போதிலும் பென் ஸ்டோக்ஸ், பட்லர் அரைசதங்களால் இந்தியாவிற்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் 32 மாதங்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னாவும், 10 மாதங்களுக்குப் பிறகு கேஎல் ராகுலும் இடம்பிடித்தனர். வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுகமானார்.

    ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து பவர் பிளேயான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.

    இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்ந நிலையில்தான் 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்த நிலையில் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட்டையும், 5-வது பந்தில் பேர்ஸ்டோவ்-ஐயும் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதன் மூலம் 10 பந்தில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து ரன் குவிப்பிற்கு தடைபோட்டார். தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதனால் இங்கிலாந்து அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினார். 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த பட்லர் மிரட்டலாக விளையாடினார். ஜோஸ் பட்டர் 45 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய பட்லர் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.



    மறுமுனையில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் விக்கெட் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்தார். அதோடு மட்டுமல்லாமல் டேவிட் வில்லியே விக்கெட்டையும் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ரன்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியாவிற்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சாஹல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
    ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இல்லாததால் தான் தோல்வி ஏற்பட்டதாக சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறியுள்ளார். #IPL2018 #RajasthanRoyals #Rahane
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் கொல்கத்தா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 50 ரன்களும், கேப்டன் ரஹானே 46 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா மைதானத்தில் ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

    தோல்வியின் மூலம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ராஜஸ்தான் கேப்டன் ரஹானே நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து அணிக்கு திரும்பிவிட்டனர்) ஆகியோர் இல்லாததால் தான் தோல்வி ஏற்பட்டதாக சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். தோல்விக்கு எந்த சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை. பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோர் முக்கியமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் தான். ஆனால் அவர்கள் இல்லாமலேயே கடைசி லீக்கில் பெங்களூரு அணியை தோற்கடித்ததை மறந்து விடக்கூடாது.

    இந்த இலக்கை எட்டிவிடலாம் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் இறுதி கட்ட ஓவர்களில் எங்களால் பெரிய ஷாட்டுகளோ, சிக்சர்களோ அடிக்க முடியாமல் போய் விட்டது. எல்லா பெருமையும் கொல்கத்தா பந்து வீச்சாளர்களையே சாரும். துரதிர்ஷ்டவசமாக 17-வது ஓவரில் சாம்சன் அவுட் ஆனதும் நெருக்கடி அதிகமாகி விட்டது. இது போன்ற ஆட்டங்களில் டாப்-4 வீரர்களில் ஒருவர் கடைசி வரை நிலைத்து நின்று ஆடுவது அவசியம். இந்த தொடரை பொறுத்தவரை எங்களது பேட்டிங் அவ்வப்போது நன்றாக இருந்ததே தவிர, சீராக இல்லை.

    இவ்வாறு ரஹானே கூறினார்.  #IPL2018 #RajasthanRoyals #Rahane
    பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து தேசிய அணிக்குச் செல்வதால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. #IPL2018 #RR #Buttler
    ஐபிஎல் 11-வது சீசன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைத் தவிர மற்ற அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறவில்லை. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

    இதனால் 13 ஆட்டங்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மே 19-ந்தேதி எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது.



    முக்கியமான ஆட்டத்திற்கு தயாராகும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வந்த செய்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை திரும்ப அழைக்கிறோம் என்று கூறியுள்ளது.



    விரைவில் பாகிஸ்தான் டெஸ்டில் இங்கிலாந்து விளையாட இருப்பதால் அதற்கான பயிற்சியை மேற்கொள்வதற்காக அவர்களை திரும்ப அழைக்கிறது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட இருக்கிறது.
    கடினமான ஆடுகளத்தை தவிர்த்து மற்ற இடங்களில் ஜோஸ் பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன் என்று ஸ்டீபன் பிளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #RRvCSK
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பட்லர் 60 பந்தில் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்.

    அவரது ஆட்டத்தை பாராட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கடினமான ஆடுகளத்தை தவிர்த்து கிளாஸ் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘பட்லருக்கு எதிராக நாங்கள் ஏராளமான திட்டம் வைத்திருந்தோம். அதில் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னும் ஒன்று. அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை. கடினமான ஆடுகளத்தை தவிர்த்து பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன். அவர் இன்னிங்ஸ் முழுவதும் பேட் செய்தார். அவரை முன்னதாகவே வீழ்த்தியிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

    நாங்கள் பென் ஸ்டோக்ஸை விரைவில் வீழ்த்திய போதிலும், பட்லரை அவுட்டாக்க முடியவில்லை. அவர் நங்கூரம் பாய்ச்ச மாதிரி நின்றுவிட்டார். முதல் ஆறு ஓவரில் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள். இது ஒரு சிறந்த ஆட்டம். நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக செய்திருக்கனும். ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது’’ என்றார்.
    ×