என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்டுப்போட வாக்காளர்கள்"
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்தும் 11 ஆவணங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய -மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் - வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாளஅட்டை
4.புகைப்படத்துடன் கூடிய வங்கி - அஞ்சலக கணக்குப் புத்தகம்
5.பான்கார்டு
6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணிஅட்டை
8.தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட்கார்டு
9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியஆவணம்
10. பாராளுமன்ற- சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
11.ஆதார் கார்டு
வாக்களிக்கும்போது இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு வாக்காளர் வேறொரு சட்ட மன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் தேர்தல்ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்கு உரியவாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls