என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய ராணுவம்"
- 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
- பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.
'ஆபரேசன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
இதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் நிலைகள் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட ஒப்பீட்டு செயற்கைக்கோள் படங்கள் முக்கியமான இடங்களில் கணிசமான கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை காட்டுகிறது.
குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் பாகிஸ்தானின் முரிட்கே நகரத்திற்குள் குறிவைக்கப்பட்டன.
82 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த வளாகம், பாகிஸ்தானின் பஞ்சாப், ஷேக்குபுராவின் முரிட்கே, நங்கல் சஹ்தானில் அமைந்துள்ள 'அல்மா மேட்டர்' மற்றும் லஷ்கர் இ-தொய்பாவின் மிக முக்கியமான பயிற்சி மையமாக இருந்தது.
இதேபோல், பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதியும் தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் மாவட்டத்தில் உள்ள கராச்சி மோரில் பஹவல்பூரின் புறநகரில் உள்ள என்.எச்.-5 (கராச்சி-டோர்காம் நெடுஞ்சாலை) இல் சுப்ஹான் அல்லா மர்கஸ் அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் முக்கிய மையமாக இந்த இடம் இருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 9 பயங்கரவாத தளங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது.
பாகிஸ்தான் எல்லைக் குள் உள்ள 4 இடங்களில் இந்திய விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5 இடங்கள் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
சிந்தூர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களின் படங்கள் அனைத்தும் செயற்கைகோள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- பாகிஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல்
- பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளது.
- ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது.
மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசினார். இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் கவர்னர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடனும் அவர் பேசி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும்படி எல்லை பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்ட அமித்ஷா, விடுப்பில் உள்ள அனைத்து ராணுவ அதிகாரிகளும் பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
- 'சிந்தூர்' என்றால் குங்குமம்.
- மணமகளின் நெற்றியில் ஒரு துளி குங்குமத்தை இடுவது அவளுடைய கணவன் அவள் வாழ்வில் இருப்பதை குறிக்கும்.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தும் தாக்குதலுக்கு ஆபரேஷன் 'சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் ஒப்புதலோடு நடத்தப்படும் இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்குப் பின்னால் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. சிந்தூர் என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் 'திலகம்' எனப் பொருள். அதாவது இந்து கலாச் சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காமில் பாதிக்கப் பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீதியைப் பெற்றுத் தரும் விதமாக இந்த பதிலடி தாக்குதல் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்றவாறு 'ஆபரேஷன் சிந்தூர்' என்பதை சித்தரிக்கும் ஒரு படத்தை இந்திய ராணுவம் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'சிந்தூர்' என்றால் குங்குமம். குங்குமம் என்பது திருமணமான இந்து பெண்களின் அடையாளமாகும்.
பஹல்காம் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் மனிதாபிமான படுத்துவதோடு உயிர்களை இழக்கவிடாமல் தடுப்பதும் ஆபரேஷன் சிந்தூரின் சிறப்பம்சமாகும்.
இது இந்தியா மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்பட்ட உயிரிழப்புகளுக்கு பழிவாங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.
மணமகளின் நெற்றியில் ஒரு துளி குங்குமத்தை இடுவது அவளுடைய கணவன் அவள் வாழ்வில் இருப்பதை குறிக்கும். இது அந்த பெண் திருமணமானவள் என்பதையும், அவளுடைய கணவர் உயிருடன் இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது.
திருமணமான இந்து பெண்களின் வாழ்க்கையில் இது ஒரு பாரம்பரிய மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. சில மரபுகளில் திருமண பக்தியின் உருவகமாக கருதப்படும் பார்வதி தேவியுடன் சிந்தூர் தொடர்புடையது. சிந்தூர் அல்லது குங்குமம் என்பது ஒரு போர் வீரனின் அடையாளமாகும்.
இந்தியாவின் மனிதாபிமானம் மற்றும் வீரத்தையும் ஆபரேஷன் சிந்தூர் குறிக்கிறது
- பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவ வாகனங்களுக்கான இணையதளம் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்துகிறது.
இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையும் பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக இறக்குமதி செய்தது.
- இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது.
அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக ராணுவம் இந்த குறுகிய தூர தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்தது.
சில வாரங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏவுகணைகள் எல்லைக்கு கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது..
ராணுவம் மொத்தம் ரூ. 260 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஏவுகணைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்லா-எஸ் என்பது இந்தியாவிடம் ஏற்கனவே உள்ள இக்லா ஏவுகணைகளின் மிகவும் மேம்பட்ட பதிப்பாகும்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது.
- பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்திய எல்லை பகுதியில் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிர ஆலோசனை.
- இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் எல்லையில் படைகளை உஷார் படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில இருப்பவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் தன்னை உஷார் படுத்தி வருகிறது. எல்லைகளில் படைகளை குவித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இதனால் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறுகையில் "நாங்கள் எங்கள் படையை வலுப்படுத்தியுள்ளோம். ஏனென்றால் இப்போது உடனடி தாக்குதல் ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுடன் இந்தியா தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது எனத் தெரிவித்ததுடன், இந்தியாவின் தாக்குதால் உடனடியாக இருக்கும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.
எங்களுடைய இருப்புகளுக்கு நேரடி மிரட்டல் இருந்தால் மட்டும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் மேலும் என்றார்.
- பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 27 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
இதனிடையே போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்நிலையில், இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- நேற்று முன்தினம் இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கடுமையான பதட்டம் உருவானது.
- நேற்று இரவு இரு தரப்புக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்ததாக தெரிய வந்து உள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி 26 சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு தலையில் சுட்டுக்கொன்றது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதிகளில் போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கடுமையான பதட்டம் உருவானது. அன்று இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் விதிகளை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் எல்லைப் பகுதி ராணுவ நிலைகள் மீது பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். உடனடியாக அவர்களுக்கு இந்தியா தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. அதில் இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து விதிகளை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இந்திய நிலைகள் மீது நேற்று இரவும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து இந்தியா தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பல இடங்களில் இந்திய வீரர்கள் துப்பாக்கி சூட்டை தீவிரப்படுத்தினார்கள். அதன் பிறகே பாகிஸ்தான் வீரர்கள் தங்களது நிலைக்கு பின்வாங்கி சென்றனர்.
நேற்று இரவு இரு தரப்புக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்ததாக தெரிய வந்து உள்ளது. இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தில் பாகிஸ்தான் எல்லை வீரர்கள் யூகத்தின் அடிப்படையில் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இது தொடர்பாக கூறுகையில், தாங்கள் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தபடி வாகா எல்லை மூடப்பட்டது.
- இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.
மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தபடி வாகா எல்லை மூடப்பட்டது. அங்கு ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அறிவிப்பை பாகிஸ்தானும் வெளியிட்டுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சண்டையை ஆரம்பித்தது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.
எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுகிறது.