என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பிரமணியன் குடும்பம்"

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு, கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
    தூத்துக்குடி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
     
    இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.



    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களில் தூத்துக்குடி சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் ஒருவர்.

    இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றார். அங்குள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு சென்ற கனிமொழி, சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
    ×