என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷப் பந்த்"

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்ற விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார்.
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் நடக்கிறது.

    இந்த போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் டோனி தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் ரிசப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.



    அனுபவத்தின் அடிப்படையிலேயே தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார். உலக கோப்பை போட்டியில் ரி‌ஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

    தினேஷ்கார்த்திக் உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ததற்கு அவரது அனுபவமே முக்கிய காரணம். நெருக்கடியான நேரத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து நிதானமாக ‘பேட்டிங்’ செய்யக்கூடிய திறமை கொண்டவர். இந்த ஒரு வி‌ஷயத்தை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அனைவரும் தேர்வு குழுவினரும் ஒப்புக் கொண்டனர். இதனால் தினேஷ் கார்த்திக்குக்கு இயல்பாகவே வாய்ப்பு வழங்கப்பட்டது.



    தினேஷ் கார்த்திக்கு அனுபவம் இருக்கிறது. டோனிக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டு அவர் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக்கால் கீப்பிங் பணியை கவனிக்க முடியும்.

    மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய சிறப்பான திறமையை பெற்றவர். இந்த அடிப்படையில் தான் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    33 வயதான சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் டோனி வருவதற்கு ஒரு ஆண்டு முன்பே சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.

    2004-ல் அறிமுகமான அவர் 2007 உலககோப்பை அணியில் இடம் பெற்றார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது 2-வது முறையாக உலககோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.
    குவாலிபையர் 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 8-வது முறையாக தகுதி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு தெரிவித்துள்ளர்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்னே எடுக்க முடிந்தது.

     ரிஷப் பந்த் அதிகப்பட்சமாக 25 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), காலின் முன்ரோ 24 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும், இம்ரான்தாகீர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    148 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் வெற்றி கிடைத்தது.

    வாட்சன் 32 பந்தில் 50 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), டுபெலிசிஸ் 39 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். போல்ட், இஷாந்த்சர்மா, அக்‌ஷர் படேல், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பந்து வீச்சாளர்களின் சிறப்பாக செயல்பட்டதாலும், தொடக்க வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும் சூப்பர் கிங்ஸ் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம், அவர்களால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம் என்று கேப்டன் டோனி பவுலர்களை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானது. பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து பாராட்டும் சேரும். இந்த சீசனில் பந்து வீச்சு துறையால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பவுலர்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டு டெல்லி அணியை மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க அனுமதிக்க வில்லை.


    டெல்லி அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டது. ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எங்களது சுழற்பந்து வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து விட்டனர்.

    தொடக்க வீரர்கள் (வாட்சன், டுபெலிசிஸ்) சிறப்பாக ஆடினார்கள். அவர்களே ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். எந்த வகையிலும் இந்த வெற்றியை பெற்று இருந்தாலும் மகிழ்ச்சிதான். எங்கள் அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ‘குவாலிபையர்2’ போட்டி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதுதான் எங்களது வழக்கமான வழியாகும். கடந்த முறை மட்டும் விதி விலக்கு.

    இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

    முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    பவர்பிளேயில் 2 விக்கெட்டை இழந்தது ஏமாற்றம். அதில் இருந்து மீள்வதே கடினமாகி விட்டது. சென்னை அணி சுழற் பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். சிறந்த பார்ட்னர்ஷிப் அமைய வில்லை.

    ஒட்டு மொத்தத்தில் இந்த சீசனில் சிறப்பாக ஆடினோம். கேப்டன் பதவி வகித்தது பெருமை அளித்தது. சீனியர் வீரர்களான டோனி, வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    எனக்கு 21 வயதே ஆகிறது, 30 வயது மனிதர்போல் யோசிப்பது கடினம் என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். #RishabhPant
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார்.

    குறைந்த பந்தில் விரைவாக ரன்கள் சேர்க்கும் திறமையுள்ள இவருக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்கெட் கீப்பிங் திறமையில் தினேஷ் கார்த்திக் இவரை முந்திவிட்டார்.

    இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போனது. தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் கடைசி வரை நின்று அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    இந்நிலையில் போட்டியை முடித்து வைப்பது முக்கியமானது. தொடர்ச்சியாக இவ்வாறு செயல்பட கற்றுக்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘போட்டியை பினிஷிங் செய்வது முக்கியமானது. இந்த வேலையை தொடர்ச்சியாக செய்ய கற்றுக் கொண்டு வருகிறேன். உங்களுடைய அனுபவம் மற்றும் தவறுகளில் இருந்து மட்டுமே பாடம் கற்றுக் கொள்ள முடியும். ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. தற்போது எனக்கு 21 வயதே ஆகிறது. இந்த வயதில் 30 வயது மனிதர் போல் யோசிப்பது கடினம்.



    எந்தவொரு விமர்சனங்களையும் நான் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய மனநிலை மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இன்னும் நான் அதிக அளவில் முதிர்ச்சியடைய வேண்டியுள்ளது. அதற்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும்.

    அணிக்கு தேர்வாகாத போது அது பின்னடைவாக இருக்கும். எனக்க அந்த அனுபவம் உள்ளது. ஆனால், தொழில் முறை வீரர்களுக்கு அதை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும்’’ என்றார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் குவித்த ரிஷப் பந்த், அணியின் வெற்றிக்கு எனது ஆட்டம் உதவியது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 191 ரன் குவித்தது. ரகானே சதம் (101 ரன்) அடித்தார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 50 ரன் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய டெல்லி அணி 8.5 ஓவரில் தவான் (54 ரன்), ஷ்ரேயாஸ் அய்யர் (4 ரன்) ஆகியோர் விக்கெட்டை இழந்து 77 ரன் எடுத்து இருந்தது. அடுத்து களம் வந்த ரி‌ஷப் பந்த் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை சிதறடித்தார்.

    அவரது ஆட்டத்தால் டெல்லி 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரி‌ஷப் பந்த் 36 பந்தில் 78 ரன் (6 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    அதிரடி ஆட்டம் குறித்து ரி‌ஷப் பந்த் கூறியதாவது:-

    முக்கியமான ஆட்டத்தில் அணி வெற்றி பெற்றது நல்ல உணர்வை அளிக்கிறது. அதற்கு எனது ஆட்டம் உதவியது மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கிறது. உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யாதது பற்றி எனது மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

    ஆனால் எனது ஆட்டத்தில்தான் முழு கவனம் செலுத்தினேன். எனது திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.



    ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டேன். அணியில் முக்கியமான வி‌ஷயம் என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை நன்கு உணர்ந்து உள்ளனர். அணியின் உரிமையாளர்கள் எங்களிடம் கூறும்போது, இதுதான் உங்களது பணி. அது படிதான் களத்தில் நடக்கும் என்று கூறினர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறும்போது, ‘‘அணி சரியான பாதையில் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் எங்களுக்கு நம்பிக்கை அதிகரித்து உள்ளது. ராஜஸ்தான் அணி 200 ரன் எடுக்கும் என்று எதிர்பார்த்தோம். கடைசி கட்டத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். ரி‌ஷப் பந்த் முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடினார்’’ என்றார்.
    உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் ரிஷப் பந்தை தேர்வு குழுவினர் நிராகரித்தது சரியானதுதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #DineshKarthik #RishabhPant #CWC2019
    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு நேற்று அறிவித்தது.

    தமிழகத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் கார்த்திக், 28 வயதான விஜய் சங்கர் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தினேஷ் கார்த்திக் 2-வது முறையாக உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2007 போட்டியில் ஆடினார். வெஸ்ட் இண்டீசில் நடந்த இந்த உலக கோப்பையில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. விஜய்சங்கர் உலக கோப்பையில் அறிமுகமாகிறார்.

    இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக டோனி இருக்கிறார். 2-வது விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் இளம் வீரரான ரி‌ஷப் பந்த், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இடையே கடும் போட்டி நிலவியது.

    அதிரடி பேட்ஸ்மேனான ரி‌ஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு குழுவினர் அவரை நிராகரித்துவிட்டு தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தனர்.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரி‌ஷப் பந்தை புறக்கணித்த தேர்வு குழுவின் முடிவு தவறானவை என்ற எண்ணம் எதிரொலிக்கிறது.

    ரி‌ஷப் பந்தை தேர்வு செய்யாதது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வல்லவருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    பெரும்பாலான தேர்வு குழுவினர் ரிஷப் பந்தை சேர்ப்பதாகவே இருந்தனர். உலக கோப்பை போட்டி மிகப்பெரியது என்பதால் திறமைக்கு பதிலாக அனுபவத்துக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது. தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தது. 90 நிமிடம் நடந்த விவாதத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தியாவின் 4-வது வரிசை இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த வரிசைக்கு ரி‌ஷப் பந்தை அனுப்பி இடத்தை நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தேர்வு குழுவினர் இதை செய்ய தவறிவிட்டனர்.

    இங்கிலாந்து போன்ற ஆடுகளத்தில் ரி‌ஷப் பந்த் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக தேவை. 2-வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் இல்லாமல் அவரை 4-வது வரிசைக்கு தேர்வு செய்து இருக்கலாம்.

    ஏனென்றால் ரிசப் பந்த் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் முதிரிச்சி அடையவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக அவரை தேர்வு செய்வது அவசியமானது.

    எதிர்கால இந்திய அணிக்கு அவரை போன்ற அதிரடி பேட்ஸ்மேன் தேவை. இதனால் தேர்வு குழுவினர் அவரை நிராகரித்த முடிவு சரியானதுதானா? என்ற கேள்வி எழுகிறது.

    தினேஷ் கார்த்திகை பொறுத்தவரை 20 ஓவர் போட்டியில்தான் நன்றாக ஆடி வருகிறார். இதனால் உலக கோப்பை அணியில் அவரது தேர்வு பல்வேறு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘டெத் ஓவர்’ என்று அழைக்கப்படும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விளையாடுவதில் ரி‌ஷப் பந்த் கெட்டிக்காரர். இளம் வீரராக கருதப்படும் அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்து இருக்கலாம்.

    தேர்வு குழுவின் இந்த முடிவானது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகந்த ஏமாற்றம் அடைந்தனர். #DineshKarthik #RishabhPant
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். #WorldCup2019 #RishabhPant
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் அதன் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் மும்பையில் நேற்று பிற்பகலில் நடந்தது. முன்னதாக தேர்வு குழு தலைவரை, கேப்டன் விராட்கோலி சந்தித்து பேசினார்.

    தேர்வு குழு கூட்டம் முடிவில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை.



    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இது தொடர்பாக கூறுகையில், ‘ரிஷப் பந்த் நல்ல பார்மில் இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி அதற்கு முந்தைய போட்டிகளிலும் பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார். #WorldCup2019 #RishabhPant
    தனது ஷாட்டில் அதிக வலிமையை பெற்றிருக்கும் ரிஷப் பந்த் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார் என குயின்டான் டி காக் தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரின் 12 சீசன் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 27 பந்தில் தலா 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்கள் குவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 2-வது ஆட்டத்தில் 13 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.

    வருங்காலத்தில் இந்திய அணியின் மிகப்பெரிய வீரராக திகழ்வார் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர். இவருடன் தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரும், இடதுகை பேட்ஸ்மேனும் ஆன குயின்டான் டிக் காக் டெல்லி அணியில் இணைந்து விளையாடிவர்.

    இவர் ரிஷப் பந்த் குறித்து கூறுகையில் ‘‘நான் ரிஷப் பந்த் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் மிகவும் குறுகிய காலத்தில் விரைவாக வளர்ந்துள்ளதை பார்க்கிறேன். அவரது ஷாட்டில் அதிக அளவு பவர் உள்ளது. அவர் மிகவும் வலுவான வீரர். இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாளர்கள் விரும்பினால் இரண்டு விக்கெட் கீப்பர்கள் விளையாட முடியும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #WorldCup
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ய 10 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய அணியை பொறுத்தவரையில் ஏறக்குறைய வீரர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் விக்கெட் கீப்பராக செயல்படப்போவது டோனியா? அல்லது ரிஷப் பந்தா? என்பதில் பெரிய விவாதமே நடந்தது. டோனிதான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ தேர்வுக்குழு தெளிவாக கூறிவிட்டது.

    இதனால் ரிஷப் பந்த் 2-வது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவாரா? அல்லது பேட்ஸ்மேன் தரவரிசையில் சேர்க்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து இளையோர் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நான் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதால், எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து கருத்து சொல்லக்கூடாது.

    ஒவ்வொரு வீரர்களும் எனக்கு சமமானவர்கள்தான். டோனி வியக்கத்தக்க அனுபவம் கொண்டவர். கடந்த சில மாதங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரிஷப் பந்த் உண்மையிலேயே உற்சாகமிக்க இளம் வீரர். சிறந்த திறமையையும் பெற்றுள்ளார்.



    உலகக்கோப்பையில் தேர்வாளர்கள் விரும்பினால் இரண்டு விக்கெட் கீப்பர்களுடன் விளையாட முடியும். சிறப்பான 15 வீரர்களை கொண்ட அணியாக இருக்க வேண்டும்.

    இந்திய அணியில் 4-வது இடத்திற்கு இவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நான் கூற இயலாது. நான் 10 வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். அனைவரும் அந்த இடத்திற்காக போட்டியிடுவார்கள். அதனால் பொது இடத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரை தேர்வு செய்ய இயலாது’’ என்றார்.
    ரிஷப் பந்த் அதிரடிக்கு மதிப்பளிக்கும் நேரத்தில், அவர் மீது மட்டுமே எங்களது கவனம் இருக்காது என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். #DDvCSK
    ஐபிஎல் 2019 சீசன் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 78 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரி, 7 சிக்ஸ் அடங்கும். இவரது ஆட்டத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதில் வெற்றி பெற்றது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 2-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் சிஎஸ்கே அணிக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ரிஷப் பந்த் ஆட்டத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால், அவர் மீது மட்டுமே கவனம் இருக்காது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தத் தொடரில் ஏராளமான வீரர்களுக்கு மதிப்பளிக்கிறோம். இதில் ரிஷப் பந்தும் ஒருவர். ஆனால் டெல்லி அணியில் மற்ற வீரர்களும் உள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்கும் இளம் வீரர்களில் ஒருவராக ரிஷப் பந்த் இருக்கிறார்.



    டெல்லி அணியில் ஷிகர் தவான், கொலின் இங்கிராம், ஷ்ரேயாஸ் அய்யர் போன்றோரும் உள்ளனர். அவர்களின் தவறுகளை கண்டுபிடித்து, அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். நாங்கள் எங்களுடைய சொந்த பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்’’ என்றார்.
    27 பந்தில் 78ரன் (7பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ரிஷப் பந்த் அழிவை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன் என டெல்லி கேப்டன் ஷிரேயஸ் அய்யர் புகழாரம் சூட்டியுள்ளார். #ShreyasIyer
    மும்பை:

    ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தால் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது.

    ரிஷப் பந்த் 27 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 7 சிக்சர்), காலின் இங்ராம் 32 பந்தில் 47 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 36 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மெக்லகன் 3 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்டியா, பென் கட்டிங் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 176 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    யுவராஜ்சிங் 35 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), குருணால் பாண்டியா 15 பந்தில் 32 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். இஷாந்த் சர்மா, ரபடா தலா 2 விக்கெட்டும், பவுல்ட், அக்‌ஷர் படேல், கீமோ பவுல், ராகுல் திவேதியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ஷிரேயஸ் அய்யர் கூறியதாவது:-



    ரிஷப் பந்த் உண்மையிலேயே அழிவை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன் ஆவார். கடந்த 1 ஆண்டாக அவரது ஆட்டத்தில் நல்ல முதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. ரி‌ஷப் பந்த் எங்கள் அணிக்கு கிடைத்தது சிறப்பான ஒன்றாகும்.

    கேப்டன் பதவி எனக்கு கிடைத்த கவுரவமாகும். கேப்டன் பதவிக்காக உண்மையிலேயே என்னை தயார்ப்படுத்தி கொண்டுள்ளேன். இந்திய ‘ஏ’ அணிக்கு கேப்டனாக இருந்துள்ளேன். இந்த அனுபவம் எனக்கு கை கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, “முதல் ஆட்டம் பெரும்பாலான அணிகளுக்கு சவாலாகவே இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் பல தவறுகள் செய்தோம். எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. ரி‌ஷ்ப பந்த் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றிவிட்டார்” என்றார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற ரி‌ஷப் பந்த் கூறும்போது, “இது ஒரு பெரிய பயணம். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நாள்தோறும் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். அணி வெற்றி பெறும் போது சிறப்பாக உணர்கிறேன்” என்றார்.



    டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை நாளை (26-ந்தேதி) சொந்த மண்ணில் சந்திக்கிறது. மும்பை அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை 28-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #MI #DC
    கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் டோனியுடன் ஒப்பிடாதீர்கள் என்று இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் கேட்டுக்கொண்டுள்ளார். #RishabhPant
    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இல்லாத எம்எஸ் டோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழும் எம்எஸ் டோனி, விக்கெட் கீப்பர் பணியில் துல்லியமாக செயல்பட கூடியவர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டம்பிங் செய்யும் வல்லமை படைத்தனர்.

    அவருக்கு தற்போது 37 வயதாகிறது. டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் டோனி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் டோனி விளையாடினார். கடைசி இரண்டு போடடிகளிலும் ரிஷப் பந்த் இடம்பிடித்தார். அப்போது கீப்பிங் பணியில் ரிஷப் பந்த் திணறினார்.

    இதனால் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோசம் எழுப்பினர். இதற்கிடையே எம்எஸ் டோனியுடன் ரிஷப் பந்த்-ஐ ஒப்பிடக்கூடாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் ரிஷப் பந்தும் அதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘நான் டோனியுடன் அதிக அளவு ஒப்பிட்டு பேசுவதைப் பற்றி நினைப்பதில்லை. ஒரு வீரராக அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எம்எஸ் டோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்.

    டோனியுடன் ரசிகர்கள் என்னை ஒப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஆனால், அப்படி ஒப்பிடுவதை என்னால் நிறத்த முடியாது. போட்டியின்போதும், போட்டிக்கு வெளியேயும் என்னால் எப்படி முன்னேற முடியும் என்பது குறித்து அவரிடம் பேசி பயனை பெற்றுக் கொள்வேன். ஒழுக்கம் உள்பட பல்வேறு விஷயங்களை டோனி மற்றும் விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுள்ளேன்’’ என்றார்.
    ‘ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான்’ என்று இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறினார். #BharatArun #Dhoni #RishabhPant
    மொகாலியில் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முக்கியமான கட்டத்தில் ஸ்டம்பிங்கை கோட்டை விட்டார். அது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

    இதுகுறித்து இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் நேற்று கேட்டபோது ‘ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான். விக்கெட் கீப்பிங் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். மேலும் கேப்டன் விராட் கோலிக்கு தேவையான நேரத்தில் ஆலோசனைகளை வழங்குகிறார்’ என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இப்போது பேட்டிங்கில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 4, 6 மற்றும் 7 என்று பல வரிசைகளிலும் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அது மட்டுமின்றி மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசுகிறார். இது அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும்’ என்றார். #BharatArun #Dhoni #RishabhPant

    ×