என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 127361"

    டெல்லி தலைமை செயலாளராக உள்ள அன்ஷு பிரகாஷை பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. #DelhiAssembly #AamAadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தும் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், துணை நிலை ஆளுநரின் முட்டுக்கட்டை காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

    சமீபத்தில் டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பல திட்டங்களை ஆம் ஆத்மி அரசு விரைவு படுத்தியுள்ளது. தூசி படிந்து கிடந்த சிசிடிவி திட்டத்துக்கு கடந்த வாரம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆனால், அம்மாநில தலைமை செயலாளராக உள்ள அன்ஷு பிரகாஷ் சிசிடிவி திட்டத்தின் மீதான கேபினட் ஒப்புதல் முடிவு மிக அவசரமானது என குறிப்பு அனுப்பினார். இதன் காரணமாக அன்ஷு பிரகாஷை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக புகார் அளித்து அன்ஷு பிரகாஷ் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    பிறப்பு, இறப்பு, பென்சன், வருவாய், சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட 100 விதமான அரசு சேவைகளை வீடுகளுக்கே சென்று அளிக்கும் திட்டத்தை டெல்லி ஆம் ஆத்மி அரசு விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. #Delhi #AamAaadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மிகவும் மோசமான நிலையில் இருந்த அரசு பள்ளிகளை சீர்படுத்தி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி சமீபத்தில் சாதித்து காட்டியது. அதேபோல, தனியார் மருத்துவமனைகளுக்கு கடிவாளம் போடும் வகையில் சமீபத்தில் விதிமுறைகள் திருத்தப்பட்டன.

    இந்நிலையில், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அல்லல்பட்டு பெறும் பல சேவைகளை அவர்களின் வீட்டுக்கே தேடிச்சென்று அளிக்கும் திட்டத்தை டெல்லி அரசு அடுத்தமாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பிறப்பு, இறப்பு, பென்சன், வருவாய், சாதி உள்ளிட்ட சான்றிதல்களை அரசு வீட்டுக்கே வந்து வழங்கும்.

    ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகிய 100 வகையான அரசு சேவைகள் மக்களின் வீடு தேடி வர உள்ளது. இணையதளத்தில் தேவையான தகவல்களுடன் பொதுமக்கள் விண்ணப்பத்தால் மட்டும் போதும்.

    இந்த திட்டத்திற்காக நவீன வசதிகளை கொண்ட 300 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. புகைப்படம் எடுப்பது, கைரேகை பெறுவது, ஆவணங்களை வீட்டுக்கே வந்து பெறுவது உள்ளிட்ட பணிகளை இந்த குழுக்கள் மேற்கொள்ளும். இதற்காக, தனியார் ஏஜென்சிகளும் ஈடுபடுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டம் கடந்தாண்டு நவம்பர் மாதமே அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் முட்டுக்கட்டை போட்டதன் காரணமாக இழுபறியானது. சில திருத்தங்களுக்கு பிறகு மீண்டும் திட்டம் தயார் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது.

    மேற்கண்ட சேவைகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50 மட்டும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய கட்சியா என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். #NirmalaSitharaman #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் டெல்லியில் இஸ்லாமிய மத அறிஞர்கள் குழு ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார். அப்போது அவர்களிடம், காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சி என்று கூறியதாக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சியா என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் மத ரீதியிலான பிளவுபடுத்தலுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

    ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் குறித்த செய்திகளை பார்க்கும் பொழுது, நாட்டின் பழைய கட்சியான காங்கிரஸ் மீண்டும் தனது பழைய கொள்கையான இந்தியாவை பிரித்தாளும் மனப்பான்மைக்கு சென்று விட்டதாக தோற்றம் உருவாகிறது.



    ராகுலின் இந்த பேச்சு காங்கிரசில் என்ன நடக்கிறது என்பது குறித்து அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு கட்சிக்கு தலைவர் என்ற முறையில், ராகுல் தெளிவாக பேச வேண்டும். காங்கிரசை முஸ்லிம் கட்சி எனக்கூறியதன் அர்த்தம் என்ன என்பதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும்.

    மதத்தை வைத்து காங்கிரஸ் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறது. 1947 பிரிவினைவாதம், மதக்கலவரம் எனக்கூறி அச்சுறுத்தி வருகிறது. 2019 தேர்தலுக்கு முன் சமுதாய ஒற்றுமைக்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற ஆக்கப்பூர்வமான போட்டியே இருக்க வேண்டும்  என தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RahulGandhi
    டெல்லியில் நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என சுப்ரீம் கோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பு, மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #DelhiPowerTussle
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எனினும், யூனியன் பிரதேசங்களில் மத்திய மாநில அரசுகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    ‘டெல்லி மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி' என தீர்ப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறுகையில், “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இனி கோப்புகளை துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப தேவையில்லை. அவருக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது” என தெரிவித்துள்ளார்.
    டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணத்தில், வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டாமலேயே இருந்துள்ளதாகவும், 25-க்கும் மேற்பட்ட டைரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். #BurariDeath
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

    10 பேர் கண்கள் மற்றும் வாயை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    பல விசித்திர வழக்குகளை கையாண்ட போலீசார்களே, இந்த கூட்டு தற்கொலையில் ஈடுபட்டவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. முக்திப்பேறு பெறுவதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 

    தற்கொலை செய்ய அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததுபோல், காணப்படும் மர்ம டைரி  அவர்களது வீட்டில் கிடைத்தது.  
    முக்திப்பேறு பெறுவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் காணப்படும் அந்த டைரியில், ‘இந்த சடங்கை (தற்கொலை) செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். அந்த சடங்கை செய்யும் நாளில் வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கைபேசிகளை ஆறு மணி நேரத்துக்கு ‘சைலண்ட் மோட்’-ல் வைத்துவிட வேண்டும். அனைவரும் தூக்கிட்டு கொண்டார்களா? என்பதை கண்காணிக்க ஒருவர் காவலுக்கு நிற்க வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.

    இதை வைத்துப் பார்க்கும்போது அந்த குடும்பத்தில் உள்ள பத்து பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை உறுதிப்படுத்திய பின்னர் தரையில் இறந்துகிடந்த 75 வயது மூதாட்டி தனது முடிவை தேடிகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சடங்குகளை செய்வதால் ஒருவர் இறந்துப் போவதில்லை. கடவுளால் காப்பாற்றப்பட்டு உயர்வான ஸ்தானத்தை பெறுவார்கள் எனவும் அந்த கடிதம் குறிப்பிடுகின்றது.



    இதேபோல,  சம்மந்தமே இல்லால் அவர்கள் வீட்டுச் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த 11 பைப்புகள் மரணத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பைப்புகள் நேரானதாகவும், 7 பைப்புகள் வளைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 4 ஆண்களுக்கு நேரான பைப், மீதமுள்ள வளைந்த பைப்புகள் 7 பெண்களை குறிப்பதாக பலர் தெரிவிக்கின்றனர்.

    தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது ஆன்மா வெளியேற இந்த பைப்புகள் பதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்கொலை நடந்த நேரத்தில் அவர்களது வீட்டின் வெளிப்புற கதவு தாழ்பாழ் போடாமல் வெறுமனே அடைத்து மட்டும் இருந்துள்ளது.

    இதனை முக்கிய துருப்புச் சீட்டாக கருதும் போலீசார், தற்கொலை செய்யும் போது அதிசக்திகள் வந்து தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர்கள் கதவை பூட்டாமல் வைத்திருக்கலாம். இல்லையெனில் 12-வதாக ஒரு நபர் அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்திருக்கலாம் என்ற இரு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

    அந்த வீட்டில் இருந்து 25-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2007-ம் ஆண்டுக்கு பின்னர் எழுதப்பட்ட அந்த டைரி முழுவதும் பக்தி சார்ந்த விஷயங்களே இருந்துள்ளன. 

    அவர்கள் என்ன மாதிரியான பக்தி விஷயங்களை கடைபிடித்தனர் ஆகியவை குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
    டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்த சம்பவத்தில், போலீசாரே குழம்பும் அளவுக்கு மர்மங்கள் நிறைந்துள்ளன. #BurariDeathMystery
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

    10 பேர் கண்கள் மற்றும் வாயை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சோக சம்பவத்துக்கு உத்தரவு பிறப்பித்ததுபோல், காணப்படும் மர்ம டைரி  அவர்களது வீட்டில் கிடைத்தது. 

    முக்திப்பேறு பெறுவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் காணப்படும் அந்த டைரியில், ‘இந்த சடங்கை (தற்கொலை) செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். அந்த சடங்கை செய்யும் நாளில் வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கைபேசிகளை ஆறு மணி நேரத்துக்கு ‘சைலண்ட் மோட்’-ல் வைத்துவிட வேண்டும். அனைவரும் தூக்கிட்டு கொண்டார்களா? என்பதை கண்காணிக்க ஒருவர் காவலுக்கு நிற்க வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.

    இதை வைத்துப் பார்க்கும்போது அந்த குடும்பத்தில் உள்ள பத்து பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை உறுதிப்படுத்திய பின்னர் தரையில் இறந்துகிடந்த 75 வயது மூதாட்டி தனது முடிவை தேடிகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சடங்குகளை செய்வதால் ஒருவர் இறந்துப் போவதில்லை. கடவுளால் காப்பாற்றப்பட்டு உயர்வான ஸ்தானத்தை பெறுவார்கள் எனவும் அந்த கடிதம் குறிப்பிடுகின்றது.



    இதேபோல,  சம்மந்தமே இல்லால் அவர்கள் வீட்டுச் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த 11 பைப்புகள் மரணத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பைப்புகள் நேரானதாகவும், 7 பைப்புகள் வளைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 4 ஆண்களுக்கு நேரான பைப், மீதமுள்ள வளைந்த பைப்புகள் 7 பெண்களை குறிப்பதாக பலர் தெரிவிக்கின்றனர்.

    தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது ஆன்மா வெளியேற இந்த பைப்புகள் பதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் சமீபத்தில் கட்டிட பணி நடந்த போது பணியாற்றிய ஒருவர் கூறுகையில், 11 பைப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு காற்று வெளியேறும் வகையில் அது வைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர்.

    ஆனால், அந்த பைப்புகள் முறையிட்ட முறையில் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக வெளிச்சத்திற்காகவோ, காற்று வெளியேறுவதற்காகவோ அது இருக்காது என அவர் கூறியுள்ளார். 
    டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவத்தில், 11 பேருக்கும் உத்தரவு பிறப்பித்ததுபோல் உள்ள மர்ம கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. #BurariDeaths
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

    10 பேர் கண்களை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த சோக சம்பவத்துக்கு உத்தரவு பிறப்பித்ததுபோல், காணப்படும் மர்ம கடிதங்கள்  அவர்களது வீட்டில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    முக்திப்பேறு பெறுவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் காணப்படும் அந்த கடிதங்களில், ‘இந்த சடங்கை (தற்கொலை) செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அந்த சடங்கை செய்யும் நாளில் வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கைபேசிகளை ஆறு மணி நேரத்துக்கு ‘சைலண்ட் மோட்’-ல் வைத்துவிட வேண்டும். அனைவரும் தூக்கிட்டு கொண்டார்களா? என்பதை கண்காணிக்க ஒருவர் காவலுக்கு நிற்க வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.

    இதை வைத்துப் பார்க்கும்போது அந்த குடும்பத்தில் உள்ள பத்து பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை உறுதிப்படுத்திய பின்னர் தரையில் இறந்துகிடந்த 75 வயது மூதாட்டி தனது முடிவை தேடிகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த சடங்குகளை செய்வதால் ஒருவர் இறந்துப் போவதில்லை. கடவுளால் காப்பாற்றப்பட்டு உயர்வான ஸ்தானத்தை பெறுவார்கள் எனவும் அந்த கடிதம் குறிப்பிடுகின்றது.

    இந்த கடிதத்தை வைத்து இது ‘பக்தி முற்றினால் பித்து’ என்ற கோணத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் என கருதும் டெல்லி போலீசார், அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட கைபேசிகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

    10 பேர் தூக்கியில் தொங்கிய நிலையிலும், ஒரு 75 வயது வயது பெண் தரையில் கிடந்த படியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

    அவர்கள், தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக இருப்பதால் அப்பகுதியில் பீதி நிலவுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ரூ.9 கோடி மதிப்புடைய கொகைன் போதைப்பொருளை வயிற்றில் கடத்தி வந்து டெல்லியில் சிக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் சிறையிலடைத்தனர். #DelhiAirport
    புதுடெல்லி:

    டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 22-ம் தேதி கொலம்பியாவில் இருந்து வந்திறங்கிய நபர் பாதுகாப்பு சோதனைக்கருவி வழியாக வரும் போது, அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு, அந்த நபரை எக்ஸ்ரே செய்து பார்த்ததில் 66 கேப்சூல்கள் வயிற்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அனைத்து கேப்சூல்களும் வெளியே எடுக்கப்பட்டன. ரூ.9 கோடி மதிப்பிலான 900 கிராம் கொகைன் அந்த கேப்சூல்களில் இருந்து எடுக்கப்பட்டது.



    இதனை அடுத்து, அந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 
    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று டெல்லியில் அமைந்துள்ள மும்மத தலங்களின் முக்கிய இடங்களுக்கு சென்று வழிபட்டதுடன் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். #NikkiHaley
    புதுடெல்லி:

    ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான நேற்று நிக்கி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றி பார்த்தார். குறிப்பாக முகலாய ஆட்சியை சேர்ந்த பேரரசர் உமாயூனின் சமாதிக்கு சென்றார்.



    இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று டெல்லியில் உள்ள கவுரிசங்கர் கோவில், ஜம்மா மசூதி, குருத்வாரா கஞ்ச் சாகிப் மற்றும் மத்திய பாப்டிஸ்ட் சர்ச் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். 

    குருத்வாரா சென்ற ஹாலே அங்கு ரொட்டிகள் செய்து பணிவிடை செய்தார். மேலும், ஜம்மா மசூதிக்கு சென்ற அவர் மசூதியில் வெளியில் இருந்த சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.

    சீக்கியரான இவரது தந்தை அமெரிக்காவில் சென்று குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #NikkiHaley
    வடமாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலினால் டெல்லியின் பல பகுதிகளில் காற்று மாசு உச்சக்கட்ட நிலையை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #duststorm
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெல்லியின் காற்று மாசு மிக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

    டெல்லியின் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக இருந்தது. தூசி மண்டலத்தால் சில சமயம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்நிலையில், காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    பொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். ஆனால் இன்று டெல்லியில் காற்றின் தரம் அதையும் தாண்டி 778 ஆக உள்ளது. காற்றில் சொரசொரப்பான துகள்கள் அதிக அளவில் உள்ளது. இது சாலையில் பார்க்கும் திறனை குறைக்கும். இந்த மாசு இன்று மாலைக்குள் சிறிது குறைய வாய்ப்புள்ளதாக வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. #duststorm
    இந்தியாவில் முதல் முறையாக தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியில் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #policemuseum
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியின் அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியின் லுடைன்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தேசிய போலீஸ் நினைவு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் போலீசின் வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் அவர்கள் பயன்படுத்திய சீருடை, ஆயுதங்கள், கலைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் வைக்கப்படும்.

    இந்த அருங்காட்சியகத்தை வருகின்ற அக்டோபர் மாதம் போலீஸ் நினைவு தினமான 1-ம் தேதி பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கால் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது காவல் துறை குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். #policemuseum

    ×