என் மலர்
நீங்கள் தேடியது "ஆளுங்கட்சி"
- அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் பாராளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது. அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர். தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
இன்னும் சில நாட்களில் ஜனாதிபதியாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே அரசை பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட KMT கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தைவான் நானடாளுமன்றத்தில் கைகலப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு KMT கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
.

- தங்கத்தின் விலையில் மாற்றமாகி கொண்டு விலை ஏறிக்கொண்டே இருக்கும்.
- நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்.
புதுச்சேரி:
சூரியன், புதன், குரு, சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 25-ந்தேதி புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ஜூன் மாதம் 3-ந்தேதி திங்கட்கிழமை ஒரே நேர்கோட்டில் இந்த 4 கிரகணங்களும் வருகிறது. இந்த நேர்கோட்டு கிரகணங்கள் அமைப்பால் ஜூன் 9-ந் தேதி வரை பலன்கள் கிடைக்கும்.
இந்த 4 கிரகணங்கள் ஒரே நேர்கோட்டு அணிவகுப்பால் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. அதே போல் சில பாதிப்புகளும் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியதாவது:-
சூரியன், புதன், குரு, சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர். இந்த 4 கிரகணங்களும் ஒரே வீட்டில் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு போட்டியான காலமாக இது அமைகிறது.
இந்த கிரகணங்களின் நேர் கோட்டு சஞ்சரிப்பு ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தரும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகணங்கள் பெயர்ச்சி ஆவது போல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களின் இடமாறுதல் பெயர்ச்சியும் உண்டாகலாம்.
வெயில் தாக்கம் அதிகரிக்கும். தென்மேற்கு பருவமழை நிதானமாக உற்பத்தியாகி வெயில் தாக்கத்தை குறைக்கும். ஜூன் 15-ந் தேதிக்கு மேல் வெயிலின் உக்கிரம் குறையும். மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கல்வி படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பொதுவாக சிலருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏற்படும். தங்கத்தின் விலையில் மாற்றமாகி கொண்டு விலை ஏறிக்கொண்டே இருக்கும். நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்.
கேதார்நாத், பத்ரிநாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். கேதார்நாத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும். பத்ரிநாத்தில் உறைபனி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய-மாநில அரசுகளுக்கு இணையாக மக்களுக்கே அதிகாரம் அளிக்கும் வகையில் அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவிற்கேற்ப 73-வது சட்டத் திருத்தத்தின்படி பஞ்சாயத்து ராஜ் மசோதா நிறை வேற்றப்பட்டு 1993-ம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிவுற்ற போதிலும், தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.
தமிழகத்தில் கிராம சபைகளை செயல்படவிடாமல் ஆளுங்கட்சியினர் தடுத்து வருகின்றனர். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படாமல் அ.தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருகிறது.
நாளை (26-ந்தேதி) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவது சட்டத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நாளைய தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும்.
நாளை காலை 8 மணி முதல் 12 மணி வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பிரிவுகளின் மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள், ஆகியோர் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். #Congress #Thirunavukkarasar