search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 142073"

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெர்மனியில் ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது. #MahatmaGandhi #Germany
    பெர்லின்:

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜெர்மனியில் உள்ள டிரையர் நகரில் உள்ள ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது.

    ஜெர்மனி நாட்டிற்கான இந்திய தூதர் முக்தா தத்தா தோமர் முன்னிலையில், டிரையர் மாநகர மேயர் ஒல்ப்ரம் லேபே சிலையை திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற முன்னாள் மேயர் கிளாஸ் ஜேன்சன், காந்தியின் தத்துவங்களை நினைவுகூர்ந்தார்.

    அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது சிறுவர்-சிறுமிகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வாசு அரங்கநாதன், அகத்தியன் ஜான் பெனடிக்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவை பிரசாத் பாண்டியன், துரைக்கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூஜெர்சி ஆகிய மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
    பிறந்த நாளில் தன்னை நேரில் காண யாரும் வரவேண்டாம் என தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். #K.Anbalagan #DMK #Birthday
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்திக்கொண்டு பாடுபட்ட தலைவர் கருணாநிதி, உடல் நலிவுற்று, அண்ணா நினைவிடத்துக்கு அருகில், மீளாத் துயிலில் ஓய்வெடுக்கச் சென்ற நிலையிலும், புயலின் கோரத் தாக்கத்தால், மக்களும், மரங்களும் பெரும் அழிவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் நிலையில், வருகிற 19-ந்தேதி எனது 97-வது பிறந்தநாள் விழாவினைத் தவிர்த்திட விழைகிறேன்.



    மேலும், என் உடல்நிலை கருதி, அந்த நாளில் கட்சித் தொண்டர்கள், உறவினர்கள், என்னை நேரில் காண்பதை முழுமையாகத் தவிர்க்க அன்புடன் வேண்டுகிறேன். மக்கள் நலம் காக்கும் சமுதாயப் பணிகளையும், இயக்கப் பணிகளையும் தொடர்ந்து ஆற்றிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் நவ. 7-ந்தேதி வருகிறது.

    இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    கமல்ஹாசன், பள்ளி மாணவிகள் 2 பேருக்கு படிப்பை தொடர நிதி உதவி வழங்கினார்.


    சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தங்கராஜ், கேரளாவுக்கு விற்பனைக்கு துணிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். சமீபத்தில் கேரளா வெள்ளத்தால் பெரும் அவதிக்குள்ளான தங்கராஜ், 12-ம் வகுப்பு படித்து வந்த மகள் தமிழரசிக்கும், 11-ம் வகுப்பு படித்து வந்த மகள் வைஷ்ணவிக்கும் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். இதன் காரணமாக, இருவருமே படிப்பை பாதியில் நிறுத்தினர்.

    மாணவிகள் இருவரும் யோகா, பேச்சுப்போட்டி, விளையாட்டு என்று பல துறைகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று இருந்ததாக செய்தி வெளியானது.

    மாணவிகள் படிப்பை நிறுத்திய தகவலறிந்த கமல் ஹாசன், இருவரையும் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு வரவழைத்து நிதியுதவி வழங்கியதோடு, படிப்பை தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 53வது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவு முதலே அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    மும்பை:

    பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    ஷாருக் கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

    இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக் கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.



    இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக் கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

    ரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக் கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    விழுப்புரம் அருகே பிறந்த நாளில் காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ChennaiCop #LoverShotDead
    விழுப்புரம்:

    சென்னையில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக்வேல். இவருக்கு பேஸ்புக் மூலம் சரஸ்வதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர்.  சரஸ்வதியின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர்.

    இந்நிலையில், இன்று காலை அன்னியூர் சென்ற கார்த்திக்வேல் சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தானும்  தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கார்த்திக்வேலால் சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி, எம்.பி.பி.எஸ். 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவ மாணவியான சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்றபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.



    சத்திய மங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் சரஸ்வதியை காதலித்ததாகவும், மருத்துவ படிப்புக்கு பிறகு சரஸ்வதியிடம் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இரண்டு உயிர்களை காவு வாங்கியிருக்கலாம். #ChennaiCop #LoverShotDead
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், வலிமையுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #SivanthiAditanar
    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    மேலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், த.மா.கா. மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், டாக்டர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.சி. கடலூர் எல்.ஜெயச்சந்திரன், தண்டு பத்து ஜெயராமன், முல்லை ராமராஜன், காயாமொழி முருகன் ஆதித்தன்.



    சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனக ராஜ், மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனரும் இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் தலைவருமான ராஜ்குமார், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.

    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கவிஞர் காசி முத்துமாணிக்கம், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், சிம்லா முத்துச்சோழன்.

    காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே.ராமசந்திரன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், டி.நகர் பகுதி தலைவர் நாச்சிகுளம் சரவணன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் ஆதித்தன், தொழில் அதிபர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நெல்லை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் தோப்பு மணி, மாநில நிர்வாகக் குழு இயக்குனர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர், தென்காசி ஆல்பா பீர்முகமது, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லைராஜா, தொழில் அதிபர் முல்லை பிரைசன், வடசென்னை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் ஜி.ராபர்ட், ஆர்.கே.நகர் நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி.

    அசோக்நகர் கிளை செயலாளர் பொன். அருணாசல பாண்டியன், துணை செயலாளர் ஸ்ரீதரன் பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, அணியாபூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் செல்வம், சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுக் குழு தலைவர் சாமிநாதன், செயலாளர் சீனிவாசன்.

    பெரம்பூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரெங்கசாமி, தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொதுச்செயலாளர் மாரிதங்கம், மாநில துணை தலைவர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், செயலாளர் தங்கதுரை, மாடசாமி, தென்சென்னை மாவட்ட தலைவர் இம்மானுவேல், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர், வடசென்னை இளைஞர் அணி தலைவர் கனகராஜன், தயானஷ், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.

    பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் காளிதாஸ், பொதுச் செயலாளர் தனம் என்ற ராமச்சந்திரன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் அ.முத்துக்குமார், எழில் நகர் நாடார் சங்க தலைவர் மாடசாமி, அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் தலைவர் தங்கபெரு மாள், ஆர்.கே.நகர் ஆதித்தனார் முரசு கணேசா.

    நந்தம்பாக்கம் நாடார் சங்க தலைவர் ஆர்.வி.கணேசன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் லட்சுமணன், துணை தலைவர் தங்கராஜ், துணை செயலாளர் ஆர்.ஏ.கதிரேசன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், சென்னை புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரே சன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் பூபாண்டியன், பால்ராஜ், தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மாநில இளைஞர் அணி தலைவர் விஜயகுமார், உமரிசங்கர், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் சண்முக பாலாஜி, தமிழ்நாடு நாடார் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மார்க்கெட் ராஜா. #SivanthiAditanar
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டம் முழுவதும் கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வக்கீல் விசாகன் ராஜா ஏற்பாட்டில் எழும்பூர், சேப்பாக்கம், துறைமுகம் பகுதிகளில் 68 இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு 680 மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    680 முதியோருக்கு வேட்டி-சேலை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எழும்பூர் பகுதி செயலாளர் பூங்கா ரமேஷ், சேப்பாக்கம் பகுதி செயலாளர் செந்தில் நாதன், துறைமுகம் பகுதி செயலாளர் ஸ்பாட் ராஜா உள்பட மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை மற்றும் ஏழைகள், முதியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

    கோவில்களில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் கோவிந்தன், வில்லிவாக்கம் பகுதி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான பிரபு, அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் முத்துகுமார், தனசேகர், கோபிநாத், ராஜம்பாள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் ஏற்பாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை, கல்வி உதவி தொகை, முதியோர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சி.எம்.ரவிச்சந்திரன், திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் அரி, பெரம்பூர் பகுதி செயலாளர் எம்.வேல்முருகன், கொளத்தூர் பகுதி செயலாளர் அலெக்சாண்டர் உள்பட மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன் ஏற்பாட்டில் வடபழனி முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு சீருடை, கல்வி, உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சைதை அகமது, கூத்த பிரான், புண்ணியமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ரத்தினம், ராஜ்குமார், மருவை சுப்பு, பிரஸ் பாஸ்கர், நித்யா பாரதி மற்றும் மாவட்ட, வட்ட இணை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி பி.பிரபாகரன் ஏற்பாட்டில் முதியோர் இல்லங்களுக்கு சென்று காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், நிதி உதவி, சுய உதவி குழு பெண்களுக்கு நிதி, மாணவ-மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் நாராயணன், விஸ்வநாதன், முருகேசன், சுப்பிரமணி, பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், நாராயணன், செல்வ ஜோதி லிங்கம், சூரியா, ரமேஷ், கலா, செல்வம், முருகன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கொலை, கற்பழிப்பு, ஊழல் வழக்கு கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. #MahatmaGandhi #PrisonerConvicted
    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம், அக்டோபர் 2-ந் தேதி தொடங்குகிறது. இதை ஓராண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையொட்டி, சில குறிப்பிட்ட பிரிவு கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    எந்தெந்த கைதிகள் விடுதலை பெற தகுதியானவர்கள், யார் யார் விடுதலை பெற தகுதி அற்றவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், வருகிற அக்டோபர் 2-ந் தேதி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி, அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி ஆகிய 3 நாட்களில் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தகுதியான கைதிகள் பட்டியலை ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தயார் செய்யுமாறும், அப்போதுதான் அக்டோபர் 2-ந் தேதி, முதல்கட்ட கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளோம்.



    அதன்படி, 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருநங்கை கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள் ஆகியோர் விடுதலை பெற தகுதியானவர்கள்.

    70 சதவீத உடல்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட கைதிகள் (மருத்துவ குழு சான்றளிக்க வேண்டும்), தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்து முடித்தவர்கள் ஆகியோரும் பொது மன்னிப்பு பெற தகுதியானவர்கள் ஆவர்.

    இருப்பினும், கொலை, கற்பழிப்பு, ஊழல் போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

    மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

    பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், அரசாங்க ரகசிய சட்டம், கடத்தல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள் ஆவர்.

    வரதட்சணை மரணத்துக்காக தண்டனை பெற்றவர்கள், கள்ள நோட்டு வழக்கு, ஆள் கடத்தல், போக்சோ சட்டம், விபசார தடுப்பு சட்டம், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம், அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் (பெமா), கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள்.

    போதைப்பொருள் தடுப்பு சட்டம், பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கும், தேசத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு கிடையாது.

    மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான கைதிகள் பட்டியலை தயாரிக்க மாநில அளவிலான கமிட்டியை அமைக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். அந்த கமிட்டியின் சிபாரிசுகளை மாநில கவர்னரின் ஒப்புதலுக்காக மாநில அரசுகள் முன்வைக்க வேண்டும். அரசியல் சட்டம், தனக்கு வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னர் ஒப்புதல் வழங்குவார்.

    மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும் விஷயங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாட்டு கைதிகளாக இருந்தால், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் விடுதலை செய்யலாம்.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.  #MahatmaGandhi #PrisonerConvicted  #tamilnews 
    கரூரில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலை, படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    கரூர்:

    பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைபங்காளர், கருப்பு வைரம், தமிழக கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட படிக்காத மேதை என எல்லோராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கரூரில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த தினத்தை கரூர் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கருதி மாணவ- மாணவிகளுக்கு கருத்துரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதன் தலைமை ஆசிரியை சண்முக வடிவு தலைமையில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழக முதல்- அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை காமராஜர் வகித்தாலும் பொதுவாழ்வில் நேர்மையையும், எளிமையையும் கடைபிடித்து அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுபோட்டியில் காமராஜர் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவல்களை மாணவிகள் பேசினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அந்த பள்ளியின் பிளஸ்-2 மாணவி லட்சுமி பிரபா கல்வியில் மட்டும் அல்லாமல் விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு அரசு சார்பில் காமராஜ் விருது வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் போது அந்த மாணவிக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி பாராட்டினர். இதேபோல் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தெருக்களிலும் ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் காமராஜரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதையும் பார்க்க முடிந்தது.

    இதற்கிடையே கரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் ஸ்டீபன் பாபு தலைமையில் சுரேகா பாலசந்தர், குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கரூர் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் நாடார் குழும தலைவர் நாடார் பைனான்ஸ் கூடலரசன், மாநில இணைச்செயலாளர் ஜீவிதா ஸ்டோர் சண்முக நாதன், மாவட்ட செயலாளர் நஞ்சை சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் அகஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். கரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் பி.எம்.குப்புசாமி தலைமையில் அரசியல் உயர்மட்டக்குழு தலைவர் முன்னாள் எம்.பி. நாட்ராயன் உள்ளிட்டோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருக்கிறோம். எனவே கட்சி நிர்வாகிகள் வருகிற 14-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக தங்கள் பகுதிகளிலுள்ள தன்னார்வலர்களுடனோ, என்.ஜி.ஓ. நிறுவனங்களுடனோ, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுடனோ இணைந்து ரத்ததான முகாம் நடத்த வேண்டும்.

    இதுவரை தமிழகத்தில் நடந்திடாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே தலைவர் ஆர்.சரத்குமாரின் எண்ணம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×