என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம விலங்குகள் கடித்ததில் ஆடுகள் பலி"

    அரூர் அருகே கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 7 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறி கொன்றது. பலியான ஆடுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே செக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் சொந்தமாக 30 செம்பறி ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்த்து விட்டு கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது 7 ஆடுகள் பலியாகி செத்து கிடந்தது. மேலும் 6 ஆடுகள் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையறிந்த ஊர் பொதுமக்கள் வந்து பார்த்தனர்.

    இது குறித்து வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது மர்ம விலங்குகள் 7 ஆடுகளை கடித்து குதறி கொன்றது தெரியவந்தது. பலியான ஆடுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு தான் எந்த விலங்குகள் கடித்தது என்று விபரம் தெரியவரும் வனத்துறை தெரிவித்தனர்.
    ×