என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி ரூபாய் நோட்டு"

    • ஒரிஜினல் ரூபாய் நோட்டிற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் டம்மி நோட்டுகள் காணப்பட்டன.
    • அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் கட்டுமான தொழில் செய்து வந்த யாகூப் என்பவர் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகளும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். தொழில் அதிபர் யாகூப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    வீட்டில் இருந்த பீரோவில் ரூ.50 லட்சம் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் ரூபாய் நோட்டு கட்டுகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது. கட்டுகட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றி பார்த்த போது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    ரூபாய் நோட்டுகளை போலவே டம்மியான நோட்டுகள் அச்சடித்து கட்டுகட்டாக வைக்கப்பட்டு இருந்தது. அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளை போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    ஒரிஜினல் ரூபாய் நோட்டிற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் டம்மி நோட்டுகள் காணப்பட்டன. அதனை அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள். ரூ.9 கோடிக்கு போலி ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.

    இது அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளோடு போலி நோட்டுகளை சேர்த்து புழக்கத்தில் விட வைத்திருந்தாரா? கட்டுமான தொழில் ரீதியாக பிறருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு இதுபோன்ற டம்மி நோட்டுகளை சேர்த்து வைத்திருந்தாரா? எதற்காக போலி நோட்டுகள் தயாரித்து வைத்திருந்தார் என்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    பஞ்சாப்பில் உள்ள நகைக்கடையில் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடியை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. #Punjab #FakeCurrency
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஷியாம் சுந்தர் வர்மா. சமீபத்தில் இவரது கடைக்கு ஒரு தம்பதியினர் வந்தனர்.

    தங்க நகைகள் வாங்க வந்துள்ளோம் எனக்கூறிய அவர்கள், அங்கிருந்த நகைகளில் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு 59 கிராம் எடையுள்ள தங்க நகைகளை வாங்கினர். அதன்பின்னர் அவர்கள் அதற்கான பணத்தை ஷியாம் சுந்தர் வர்மாவிடம் கொடுத்து விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டனர்.



    பணத்தை எண்ணி வைக்கும்போது, ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா என்ற இடத்தில் எண்டர்டெயின்மெண்ட் ஆப் இந்தியா என இருப்பதை கண்டு ஷியாம் சுந்தர் அதிர்ந்தார். தனக்கு வழங்கிய பணம் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஷியாம் சுந்தர் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனையை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

    போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற தம்பதியரை போலீசார் தேடி வருகின்றனர். #Punjab #FakeCurrency
    ×