என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெலிபோன்"

    • LSA (உரிமம் பெற்ற சேவை பகுதி) அடிப்படையிலான திட்டத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
    • முதலில் '0' என்ற எண், அடுத்து SDCA குறியீடு எண், மூன்றாவதாக சந்தாதாரர் எண் ஆகியவற்றை முறையே உள்ளீடு செய்ய வேண்டும்.

    தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், லேண்ட் லைன் டெலிபோன்களில் STD CODE பயன்பாட்டை நிறுத்த அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதற்கு பதிலாக செல்போன்களை போலவே 10 டிஜிட் எண் அமைப்பை லேண்ட் லைனிலும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய SDCA- அடிப்படையிலான (STD எண் அடிப்படையிலான) எண் திட்டத்திலிருந்து LSA (உரிமம் பெற்ற சேவை பகுதி) அடிப்படையிலான 10-டிஜிட் CLOSED எண் திட்டத்திற்கு மாறும் டிராய்-இன் இந்த பரிந்துரை பரிசீலனையில் உள்ளது.

    இந்த முறை மூலம் லோக்கல் கால் உட்பட முதலில் '0' என்ற எண், அடுத்து SDCA குறியீடு எண், மூன்றாவதாக சந்தாதாரர் எண் ஆகியவற்றை முறையே உள்ளீடு செய்து போன் செய்ய வேண்டும்

    ஒரு தொலைத்தொடர்பு வட்டம் அல்லது உரிமம் பெற்ற சேவைப் பகுதி (LSA) பொதுவாக மாநில அளவிலான பகுதி அல்லது பெரிய பெருநகரப் பகுதியைக் குறிக்கிறது. LSA- அடிப்படையிலான 10 டிஜிட் எண் முறை இடையூறு மற்றும் தாமதத்தை குறைத்து நீண்டகால சேவையை வழங்க உதவும் என்று டிராய் தெரிவித்துள்ளது.

    சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய தொலைபேசி எண்களில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்.

    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. #BSNL
    சென்னை:

    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.

    ‘தனலட்சுமி’ என்ற இத்திட்டத்தின்படி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக் கான பில்களை கடைசி தேதிக்குள் செத்துபவர்களுக்கு சேவை வரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி அளிக்கப்படும்.

    வரும் மாதங்களுக்கான பில்களை முன்னதாக செலுத்துபவர்களுக்கும் இந்த தள்ளுபடி உண்டு.

    பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும். வரும் மாதங்களுக்கான தொகையை முன்னதாக செலுத்துபவர்கள், பில் தொகைக்கு மேல் எந்த தொகையையும் செலுத்தலாம்.

    அவ்வாறு செலுத்துபவர்களுக்கு அடுத்த மாத பில் தொகையில், இந்தமாத பில் தொகைக்கும் அடுத்த மாத பில்லுக்கு முன்னதாக செலுத்திய தொகைக்கும் ஒரு சதவீதம் தள்ளுபடி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.


    இந்த விழாகால நாட்களில் அடுத்த 5 மாதங்களுக்கான பில் தொகைகளை முன்னதாக செலுத்துபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி அடுத்து வரும் இரண்டாவது பில்லில் இருந்து தொடங்கி அந்தந்த பில்லில் வழங்கப்படும்.

    இந்த விழாக்கால நாட்களில் பில் தொகையை செலுத்தும் அனைத்து பி.எஸ்.என்.எல். எண்டர்பிரைசஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் அனைத்து பில்களிலும் 2 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

    பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இந்த விழாக்கால தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் தலைமை பொது மேலாளர் வி.ராஜீ மற்றும் சென்னை டெலிகாம் துணை பொது மேலாளர் ஜி.விஜயா ஆகியோர் தெரிவித்துள்ளனர். #BSNL
    ×