என் மலர்
நீங்கள் தேடியது "லூபன் புயல்"
அரபிக்கடலில் உருவான லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Luban #ArabianSea
புதுடெல்லி:
கேரளா அருகே அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான ‘லூபன்’ புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஓமன் நாட்டு கடற்கரை நோக்கி நகர்ந்தது.
லூபன் புயல் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதால் ஓமன் கடற்கரையை அடைய தாமதம் ஏற்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இன்று காலை மேற்கு மத்திய அரபிக்கடலில் ஓமன் நாட்டின் சலாபா நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஓமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து கிழக்கு வடகிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் அல் கைதாக் நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

அதிதீவிர லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டில் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. #Luban #ArabianSea
கேரளா அருகே அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான ‘லூபன்’ புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஓமன் நாட்டு கடற்கரை நோக்கி நகர்ந்தது.
லூபன் புயல் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதால் ஓமன் கடற்கரையை அடைய தாமதம் ஏற்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இன்று காலை மேற்கு மத்திய அரபிக்கடலில் ஓமன் நாட்டின் சலாபா நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஓமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து கிழக்கு வடகிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் அல் கைதாக் நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

கோப்புப்படம்
கேரளாவை மிரட்டி வந்த லூபன் புயல் திசை மாறி ஓமன் கடற்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இதன்மூலம் கேரளாவை பயமுறுத்திய புயல் ஆபத்து நீங்கியது. #LubanCyclone
சென்னை:
வங்க கடலிலும், அரபிக்கடலிலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக தீவிரம் அடைகிறது. தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் புயலாக மாறி வடமேற்கு திசையில் வடக்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதேபோல் கிழக்கு மத்திய மற்றும் தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ‘லூபன்’ புயலாக மாறியது. இது இன்று காலை ஓமன் நாட்டில் இருந்து 1,040 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து 920 கி.மீ. தொலைவிலும், மினிக்காய் தீவில் இருந்து 1,260 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 5 நாட்களில் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாட்டு கடற்கரையை அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குமரிக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டது.
ஆனால் அரபிக்கடலிலும் வங்க கடலிலும் புயல் உருவாகி இருப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை.
இந்த புயல்கள் மறைந்த பின்புதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #LubanCyclone
வங்க கடலிலும், அரபிக்கடலிலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக தீவிரம் அடைகிறது. தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் புயலாக மாறி வடமேற்கு திசையில் வடக்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதேபோல் கிழக்கு மத்திய மற்றும் தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ‘லூபன்’ புயலாக மாறியது. இது இன்று காலை ஓமன் நாட்டில் இருந்து 1,040 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து 920 கி.மீ. தொலைவிலும், மினிக்காய் தீவில் இருந்து 1,260 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 5 நாட்களில் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாட்டு கடற்கரையை அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கேரளாவை பயமுறுத்திய புயல் ஆபத்து நீங்கியது.

அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டது.
ஆனால் அரபிக்கடலிலும் வங்க கடலிலும் புயல் உருவாகி இருப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை.
இந்த புயல்கள் மறைந்த பின்புதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #LubanCyclone