என் மலர்
நீங்கள் தேடியது "புதிய தலைமை செயலக வழக்கு"
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து இந்த புதிய கட்டிடத்துக்கு தலைமை செயலகம் மாற்றப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் பழைய இடத்துக்கே தலைமை செயலகம் மாற்றப்பட்டது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரவும் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்படி, நீதிபதி ஆர்.ரெகுபதி விசாரணை நடத்தினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி நீதிபதி ஆர்.ரெகுபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில், கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனுக்கும், விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அமைக்கும் விசாரணை ஆணையம் என்பது கண் துடைப்பு நாடகம் என்றும், விசாரணை ஆணையம் அமைப்பதால், எந்த ஒரு பலனும் இதுவரை ஏற்பட்டது கிடையாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
பின்னர், நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தை கலைத்து, புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், அதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கிடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தார். நீதிபதி ஆர்.ரெகுபதியும் விசாரணை ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இதுவரை நடத்திய விசாரணையின் விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய தலைமை செயலகம் கட்டிடம் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதை பார்த்த பின்னர், போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை தமிழக அரசு பரிசீலிக்காமலேயே, நேரடியாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.
தமிழக தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டியதில் சுமார் ரூ.629 கோடி ஊழல் நடந்துள்ளது, இவ்வளவு பெரிய ஊழலை சும்மா விட்டு விட முடியாது. இந்த ஊழலுக்கு முகாந்திரம் உள்ளது என்பதால் தான் போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீதிபதி ஆர்.ரெகுபதியின் விசாரணை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் படிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார். அதில், நீதிபதி ஆர்.ரெகுபதி தன் விசாரணையை முடிக்கவில்லை. ஆதார ஆவணங்களை எல்லாம் திரட்டி, முழுமையாக விசாரணை முடிந்து, அந்த அறிக்கையை தாக்கல் செய்த பின்னரே, போலீஸ் விசாரணைக்கு மாற்ற முடியும்.
எனவே அரைகுறை ஆவணங்களை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார். #SecretariatCase
சென்னை:
தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் கடந்த மாதம் விசாரித்தனர்.
நீதிபதிகள், ‘புதிய தலைமை செயலகம் கட்டிடம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தின், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் போலீஸ் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடையை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து உத்தர விட்டனர். #TNGovt #DMK #MKStalin #DVAC
சென்னை அரசினர் தோட்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.
அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுபற்றி விசாரிக்க ரகுபதி ஆணையம் உருவாக்கப்பட்டது.
இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படி ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி புதிய தலைமை செயலக முறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பீல் செய்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் முன்பு எடுத்து கொள்ளப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர். அதோடு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர். #DMK #MKStalin #NewChiefSecretariatCase
இந்த விசாரணை ஆணையம், மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கருணாநிதி உள்ளிட்ட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதி யாரையும் நியமிக்கவில்லை என்றும் தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ‘அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளினால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதிலும், வரிப்பணம் வீணாகியுள்ளது. ஒரு அரசு கட்டிய சட்டப் பேரவையை மாற்றி அமைப்பதற்கும், அழகுபடுத்துவதற்கும் பணம் வீணடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு ஆணையம் அமைத்து, அதற்கு ரூ.5 கோடி வரை செலவும் செய்யப்பட்டுள்ளது.
வரியாக கொடுத்த பணத்தை இவ்வாறு அரசு வீணடிக்கும்போது, அதுகுறித்து கேள்விக் கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், வழக்கை வாபஸ் பெறுவதாக தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, வாபஸ் பெற அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt #MKStalin #Karunanidhi
தமிழக அரசின் சட்டசபையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் செயல்பட்டு வருகின்றன.
அங்குள்ள கட்டிடங்கள் பழமையாகி விட்டதாலும், கடும் இட நெருக்கடி உருவானதாலும் புதிய தலைமைச் செயலகம் கட்ட கடந்த தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஜெர்மனி நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்ததற்கு ஏற்ப புதிய தலைமைச் செயலகம் பசுமைக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டன. ரூ.425 கோடி செலவில் 80 ஆயிரம் சதுர அடி அலுவலக பரப்பளவில் இந்த தலைமைச் செயலகம் உருவானது. அந்த வளாகத்தின் மத்தியில் திராவிட கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் கோபுரம் ஒன்றையும் கருணாநிதி அமைத்தார்.
2008-ல் தொடங்கப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டுமான பணிகள் இரண்டே ஆண்டுகளில் முடிந்தன. இதையடுத்து 2010-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் புதிய தலைமை செயலகத்தை திறந்து வைத்தார். மார்ச் 16-ந்தேதி அந்த கட்டிடத்தில் சட்டசபை கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். புதிய தலைமைச் செயலகத்தில் போதிய வசதிகள் இல்லை என்று கூறி அவர் மீண்டும் சட்டசபையையும் தலைமைச் செயலகத்தையும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார்.

இதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு ரகுபதி விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இது போன்ற விசாரணை ஆணையங்களால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்றும் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
ரகுபதி ஆணையத்துக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்றும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “ரகுபதி ஆணையத்துக்கு ரூ.4 கோடியே 11 லட்சம் செலவிடப்பட்டிருப்பதாகவும் கோர்ட்டு தடை விதித்த 3 ஆண்டுகளில் ரூ.2 கோடி செலவிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி ரகுபதி புதிய தலைமைச் செயலக விசாரணை ஆணைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, “புதிய தலைமை செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு புதிய நீதிபதியை நியமனம் செய்வது தொடர்பாக 27-ந்தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக தெரிய வந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
