என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்"

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
    தேனி:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தேனி மாவட்டம் முழுவதும் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் மழை பெய்தபடி இருந்தது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    கொடைக்கானல் மலை பகுதியிலும் கனமழை நீடித்து வருகிறது. எனவே இன்று கொடைக்கானல் தாலுகா அளவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் பிறப்பித்துள்ளார்.

    ×