என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து-இந்தியா"

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #INDvENG #RaviShastri
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    இங்கிலாந்துடன் மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 5 டெஸ்டில் ஆடியது. இதில் 20 ஓவர் தொடரை மட்டும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. டெஸ்ட் தொடரில் விராட் கோலி அபாரமாக விளையாடியும் பலன் இல்லாமல் போனது.

    இந்திய அணி 3-வது டெஸ்டில் மட்டும் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன் வித்தியாசத்திலும், 5-வது டெஸ்டில் 118 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்று இருந்தது.


    இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட இந்த தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. குறிப்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். பயிற்சியாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் அணி நிர்வாகம் நேரில் ஆஜராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) நிர்வாகிக்கும் குழு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதோடு அறிக்கை ஒன்றையும் சமர்பித்தார்.

    வினோத்ராய் தலைமையிலான நிர்வாக குழுவை ரவிசாஸ்திரி ஆசிய கோப்பை போட்டிக்கு புறப்படும் முன்பு சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தோல்விக்கு ரவி சாஸ்திரி கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ‘டாஸ்’ போடுவதில் விராட் கோலி தவறான முடிவு எடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

    ‘டாசில்’ தோற்றதால் தோல்வி அடைந்தோம் என்று ரவிசாஸ்திரி நிர்வாக குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று அவரிடம் நிர்வாக குழு தெரிவித்தது.

    ஆஸ்திரேலிய பயணத்தில் அதிகமான பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி அப்போது கேட்டுக் கொண்டார்.

    அணி நிர்வாகத்தை பலப்படுத்துவது குறித்து நிர்வாக குழு ஆலோசித்தது. இதை தொடர்ந்து இந்திய அணிக்கு விரைவில் சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார். #INDvENG #RaviShastri
    இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவல் டெஸ்டில் 2-விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் உள்ள மெக்ராத்தை சமன் செய்தார். #ENGvIND #JamesAnderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் (தவான், புஜாரா) கைப்பற்றினார்.

    இதன்மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் உள்ள மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) சமன் செய்தார்.

    மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 563 விக்கெட் கைப்பற்றியுள்ளார். முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே (இந்தியா) 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #JamesAnderson #Anderson #Mcgrath
    இந்திய அணி பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்து வேகப்பந்தை எதிர்க்கொள்ள திணறி வருவதால் கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. #ENGvIND
    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்னும் எடுத்தன. 40 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 423 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    464 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்து திணறியது. வெற்றிக்கு மேலும் 406 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது.

    இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது. கடைசி நாளான இன்று இந்திய அணி மேலும் 406 ரன்களை எடுப்பது என்பது மிகவும் சவாலானது.

    இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். எனவே, தோல்வியை தவிர்க்க ‘டிரா’ செய்ய கடுமையாக போராடுவார்கள். ஆனால் அது மிகவும் கடினமானதே.

    இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது. 3-வது டெஸ்டில் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தனது கடைசி டெஸ்டில் அலஸ்டர் குக்குவை வெற்றியுடன் அனுப்பும் வேட்கையில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர். #ENGvIND #TeamIndia
    233 ரன்கள் முன்னிலை பெற்று இருப்பதால் இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் வெற்றி பெறுவோம் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் கூறியுள்ளார். #ENGvIND #JosButler
    சவுதம்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்னும், இந்தியா முதல் இன்னிங் சில் 273 ரன்னும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 2 விக்கெட் உள்ளது. குர்ரான் 37 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    நேற்றைய போட்டிக்கு பின் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த டெஸ்டில் எங்களால் (இங்கிலாந்து) நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்த ஆடுகளத்தில் 2-வது இன்னிங்கில் ரன்கள் சேர்ப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். மொய்ன் அலி, ஆதில் ரஷித், மற்றும் வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். இதனால் எங்களுக்கு இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND  #JosButler
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் ஜெப்ரி பாய்காட் கடுமையாக விமர்சித்து உள்ளார். #ENGvIND #GeoffreyBoycott
    ஜெப்ரி பாய்காட் இது தொடர்பாக டெய்லி டெலி கிராப் பத்திரிகையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய வீரர்கள் இதுவரை தங்களையும், தங்களது ஆதரவாளர்களையும் தலைகுனிய வைத்துள்ளனர். பேட்டிங் பொறுப்பற்றதாக இருந்தது. அறியாமை தனத்துடன் விளையாடினர். இந்திய அணியின் பேட்டிங் முட்டாள் தனமாக இருந்தது.

    ‘அவுட் சுவிங்கர்’ வீசினால் யோசனை இல்லாமல் பேட்டை கொண்டு செல்வதா? முரளிவிஜய் ஆடிய விதம் மிகவும் மோசமான செயலாகும். இங்கிலாந்து ஆடுகளம், தட்பவெப்பநிலை ஆகியவற்றை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக கணிக்க தெரியவில்லை.


    இந்திய வீரர்கள் சரியான முறையில் வலை பயிற்சி மேற்கொள்ளவில்லை. இங்கிலாந்தில் வித்தியாசமாக எப்படி ஆடப்போகிறோம் என்பதை தங்களது மூளைக்குள் ஏற்றிக் கொள்ளவில்லை.

    இந்திய ஆடுகளங்களில் பேட்டிங் செய்ததே பழக்கப்பட்டவர்கள். இந்தியாவில் உள்ள ‘பிட்ச்’கள் மட்டையானது. வறண்டது. பந்துகள் எழும்பாது. அங்கு புதிய பந்துகள் ஒன்றுமே ஆகாது. இதனால் எளிதாக ரன்களை குவித்தார்கள்.

    பந்தின் பளபளப்பு விரைவில் தேய்ந்துவிடும். அங்கு பேட்ஸ்மேன்கள் தான் அரசர். நேரடியாக எந்த ஷாட்களையும் ஆட முடியும்.

    இந்திய அணி இங்கிலாந்துக்கு அலட்சியத்துடனும், தலைக்கணத்துடனும் வந்தது. எங்கு வேண்டுமானாலும் தங்கள் இஷ்டப்படி பேட்டிங் செய்ய முடியும் என்ற நினைப்பில் இருந்தனர். டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளவில்லை.

    பெரும்பாலான அணிகள் உள்நாட்டில் வென்று வெளியே போய் தோற்பதால் முட்டாள் தனமாக பொருத்தமின்மையாக மாறி வருகிறது. பெரிய அணிகள் சிறந்த வீரர்கள் எல்லா விதமான ஆடுகளத்திலும் விளையாடுவது தங்களை சோதித்துக் கொள்வதற்காகவே.

    இவ்வாறு பாய்காட் கூறியுள்ளார்.  #ENGvIND #GeoffreyBoycott
    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியதால் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #ENGvIND
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. எந்தவித போராட்டமும் இல்லாமல் இந்திய வீரர்கள் ‘சரண்டர்’ ஆனதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

    முன்னாள் வீரர்கள் இந்திய அணி மீது கடுமையாக பாய்ந்தனர். இதேபோல ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    மோசமான தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.


    இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் முன்பு ரவிசாஸ்திரியும், கோலியும் “எந்த களத்தையும், எந்த அணியையும் சந்திப்போம். தயக்கம் இல்லை” என்று தெரிவித்து இருந்தனர்.

    தற்போது ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். “தங்கள் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்க வேண்டாம். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

    ஆனால் இதுவரை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எந்தவிதமான விளக்கம் அளிக்கவில்லை.

    இதற்கு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அணியின் ஒட்டு மொத்த தோல்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பேற்று காரணத்தை தெரிவிக்க வேண்டும். முன்பு வார்த்தைகளை கொட்டினீர்கள். இப்போது வாய்திறங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் ஆதரங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.


    துருவ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம். உடற்தகுதியை வைத்து போட்டிகளில் வெற்றி பெற இயலாது. அதிகமான பயிற்சி ஆட்டம் அல்லது கவுண்டி போட்டியில் விளையாட வேண்டும். தவான், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக ரி‌ஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர், கருண்நாயரை அணிக்கு கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமித் என்பவர் கூறும்போது, எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிக்கு ராகுல் டிராவிட்டை கிரிக்கெட் வாரியம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    அனுராக் என்ற ரசிகர், “இந்திய அணியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ரவிசாஸ்திரிக்கு தெரியவில்லை. இதனால் டிராவிட்டை பயிற்சியாளராக நியமியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

    மற்றொரு ரசிகர், “ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருப்பது அணிக்கு பேரழிவு. இதனால் அவரை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

    ருத்ரகேஷ் என்பவர் கூறுகையில், “ரவிசாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணையும் நீக்க இதுவே சரியான நேரம். டிராவிட்டை பேட்டிங் பயிற்சியளாராகவும், ஜாகீர்கானை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இதேபோல ரவிசாஸ்திரிக்கு எதிராக ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  #ENGvIND #RahulDravid #RaviShastri #HeadCoach #TeamIndia #BCCI
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
    பர்மிங்காம்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    இந்த டெஸ்ட் மிகவும் சிறப்பானது. இந்த போட்டியில் நாங்கள் பலமுறை திறமையை வெளிப்படுத்தினோம். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் எங்களைவிட சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடி இருக்கலாம்.

    இந்த டெஸ்டில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிக்கிறது. இந்த போராட்டம் பிடித்து இருக்கிறது. நாங்கள் இந்த டெஸ்டில் சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்வோம்.

    மிகப்பெரிய தொடரில் இதுபோன்ற தொடக்கம் பெருமையானது. பின்வரிசையில் விளையாடும் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

    இந்த தோல்வி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர்கள் சிலிப் பகுதியில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியதாவது:- #ENGvIND
    சிலிப் பகுதி என்பது முக்கியமான இடமாகும். அங்கு நிற்கும் வீரர்களை பயிற்சியின்போது கண்டறிய வேண்டும். நீண்ட நேரம் பயிற்சி செய்து 50 முதல் 60 கேட்ச் வரை பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்டறிந்து சிலிப் பகுதியில் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் நிற்கும் வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு வைத்திருக்க வேண்டும். சில சமயம் பந்து மிகவும் தாழ்ந்து வரும் அதுபோன்ற நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பந்து தலைக்குமேல் செல்லும் போது பாய்ந்து பிடிக்க வேண்டும். இதற்கு நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சின்போது சிலிப் பகுதியில் நிற்கும் வீரர் பந்தை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்.


    3-வது வீரராக களம் இறங்கும் புஜாரா இங்கிலாந்துக்கு முன்பாகவே வந்து கவுன்டி போட்டியில் விளையாடினார். ஆனால் அதில் ரன்களை குவிக்கவில்லை. வெளிநாட்டில் விளையாட புஜாரா திணறி வருகிறார். ஆனால் லோகேஷ் ராகுல் வெளிநாட்டு மைதானத்தில் சிறப்பாக விளையாடுகிறார்.

    லோகேஷ் ராகுல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் அணியில் நீண்ட காலம் விளையாடுவார். அணியில் நிரந்திரமாக இடம் பெற அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. #ENGvIND #1000thTest #Azharuddin
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ள அஸ்வின், கவுண்டி போட்டிகளில் விளையாடியது உதவிகரமாக இருந்தது என்றார்.#ENGvIND #1000thTest
    பர்மிங்காம்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ள அஸ்வின், கவுண்டி போட்டிகளில் விளையாடியது எனக்கு உதவிகரமாக இருந்தது என்றார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 100 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடினார். அபாரமாக விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார். கடைசி விக்கெட்டாக அவுட் ஆன கோலி 149 ரன் (225 பந்து, 22 பவுண்டரி ஒரு சிக்சர்) எடுத்தார்.

    அவரது சதத்தால் இந்தியா 274 ரன் எடுத்தது. அடுத்து 13 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து விளையாடியது.


    அஸ்வின் பந்தில் தொடக்க வீரர் அலிஸ்டயர் குக் ரன் எதுவும் எடுக்காமல் கிளீன் போல்டு ஆனார். முதல் இன்னிங்சிலும் குக் அஸ்வின் பந்தில் போல்டாகி இருந்தார்.

    அத்துடன் 2-ம் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது இங்கிலாந்து 3.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்து இருந்தது. ஜென்னிஸ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இதுவரை அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது-

    கடந்த 1½ ஆண்டாக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் அதிக நேரம் விளையாடி இருக்கிறேன். இங்கு வந்ததும் பந்து வீசும் கூடுதல் வேகத்துடன் வீசினால் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தேன். அதற்கு ஏற்றாற்போல் பந்து வீசினேன்.

    எனது பந்து வீச்சு முறையில் சிறிது மாற்றத்தை எளிமையாக செய்து வீசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கவுண்டி போட்டிகளில் விளையாடியது எனக்கு உதவிகரமாக இருந்தது என்றார்.  #ENGvIND #1000thTest
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி இருப்பதை எதிரணி தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். #ENGvIND #1000thTest
    பர்மிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூப் 80 ரன்னும், பேர்ஸ்டோவ் 70 ரன்னும், ஜென்னிஸ் 42 ரன்னும் எடுத்தனர்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. சாம்குர்ரான் 27 ரன்னிலும், ஆன்டர்சன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    நேற்று முகமதுசமி ஓவரில் சாம்குர்ரான் அவுட் ஆக வேண்டியது. அவரது கேட்சை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

    இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

    அஸ்வினை, இங்கிலாந்து தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-


    அஸ்வின் மிகவும் சிறந்த பவுலர். அவர் சரியான இடத்தில் பந்தை வீசினார். மேலும் வேகத்திலும் மாறுபாடு இருக்கும். பந்து நன்கு திரும்பும் ஆடுகளத்தில் நிறைய பந்துகள் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் இருக்கும். அதுபோன்ற பந்தில் அசிஸ்டயர் குக்கை போல்டு ஆக்கினார்.

    காலை வேளையில் இருந்து ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது. நாங்கள் 300 ரன்னுக்கு மேல் எடுப்போம் என்று கருதுகிறேன். அப்படி எடுத்துவிட்டால் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான திசையில் நெருக்கடி கொடுப்பார்கள்.

    அதேவேளையில் இரு அணிகளும் பேட்டிங் செய்த பிறகுதான் எது நல்ல ஸ்கோர் என்பது தெரியும் என்றார். #ENGvIND #1000thTest #KeatonJennings #Ashwin
    இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan
    மும்பை:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றின.

    இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்தியா எசக்ஸ் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    இந்தியாவின் பவுலிங் வரிசை மிகவும் பலமாக இருக்கிறது. உமேஷ் யாதவ் நன்றாக வீசுகிறார். இஷாந்த் சர்மா, சீனியர் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமியும் நல்ல சாதனையில் இருப்பார்கள். புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் முதல் டெஸ்டில் ஆடாவிட்டாலும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு நன்றாகவே இருக்கிறது.

    5 டெஸ்ட் தொடர் என்பதால் நீண்ட நாட்கள் நடைபெறும். அனைத்து பவுலர்களும் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இந்த டெஸ்ட்டில் தொடர்ந்து இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது‌ ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர் ஆகிய 5 வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். இதில் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இஷாந்த், உமேஷ், முகமது ‌ஷமி ஆகிய 3 பேர், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது 10 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் எம்எஸ் டோனி. #ENGvIND #ViratKohli
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன எம்எஸ் டோனி இரண்டு உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தவர். அத்துடன் பேட்டிங், விக்கெட் கீப்பர், கேப்டன் பொறுப்பில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஒரே போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்களை கேட்ச் பிடித்து வெளியேற்றி சாதனைப் படைத்தார். அத்துடன் 50-ற்கு மேற்பட்ட கேட்ச்களை பிடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

    இன்று தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மற்றொரு சாதனைப் படைக்க இருக்கிறார். இதுவரை எம்எஸ் டோனி 318 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 சதம், 67 அரைசதத்துடன் 9967 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.37 ஆகும். இந்த தொடரில் இன்னும் 33 ரன்கள் அடித்தால், 10 ஆயிரம் ரன்கள் அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்றும், 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெறுவார்.



    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரும் 10 ஆயிரம் ரன்களை தாண்டியுள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் சங்ககரா 14234, ரிக்கி பாண்டிங் 13704 ரன்கள் குவித்துள்ளனர்.
    ×