என் மலர்
நீங்கள் தேடியது "மாவோயிஸ்ட்"
பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளனர். #BhimaKoregaon #SudhaBharadwaj
புதுடெல்லி:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது.
அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இந்நிலையில், அவரை கைது செய்ய புனே போலீசார், நேற்று ஐதராபாத்துக்கு வந்தனர். ஐதராபாத் போலீசாரின் ஒத்துழைப்புடன், வரவர ராவின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான கே.வி.குர்மாநாத், புகைப்பட நிபுணர் கிராந்தி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர், வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரை ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, புனேவுக்கு அழைத்து சென்றனர். புனே கோர்ட்டில் இன்று அவரை ஆஜர்படுத்துகிறார்கள்.
இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் பிற்பகல் 3.45 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.
ஒடிசா மாநிலத்தில், தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த தம்பதிகள் போலீசாரிடம் சரணடைந்தனர். #Maoist
புபனேஷ்வர் :
ஒடிசா மாநிலத்தில், மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள காவல் நிலையத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ் மற்றும் ரத்னா தம்பதியர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முகேஷ் மற்றும் ரத்னா தம்பதியரின் தலைக்கு முறையே ரூ.4 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநில அரசு அறிவித்துள்ள சரண் அடைபவர்களுக்கான சிறப்பு திட்டத்தின்படி மவோயிஸ்ட் தம்பதியர் இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்துவிட்டதாக மால்கங்கிரி மாவட்ட எஸ்.பி.மீனா தெரிவித்துள்ளார்.
வன்முறை வாழ்க்கையை துறந்துவிட்டு சரணடைந்ததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையான ரூ.5 லட்சத்தை போலீசார் தம்பதியரிடம் வழங்கினர் . #Maoist
ஒடிசா மாநிலத்தில், மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள காவல் நிலையத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ் மற்றும் ரத்னா தம்பதியர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முகேஷ் மற்றும் ரத்னா தம்பதியரின் தலைக்கு முறையே ரூ.4 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநில அரசு அறிவித்துள்ள சரண் அடைபவர்களுக்கான சிறப்பு திட்டத்தின்படி மவோயிஸ்ட் தம்பதியர் இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்துவிட்டதாக மால்கங்கிரி மாவட்ட எஸ்.பி.மீனா தெரிவித்துள்ளார்.
வன்முறை வாழ்க்கையை துறந்துவிட்டு சரணடைந்ததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையான ரூ.5 லட்சத்தை போலீசார் தம்பதியரிடம் வழங்கினர் . #Maoist
தாமாக முன்வந்து சரணடைந்த மாவோயிஸ்ட் இயகத்தை சேர்ந்தவருக்கு, போலீசார் தரப்பில் 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. #Maoist
ராஞ்சி :
ஜார்கண்ட் மாநிலம், லேட்ஹர் மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் போலீசாரின் 214 படைப்பிரிவு முகாமில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்சியில் போலீஸ் டி.ஜி.பி.விபுல் சுக்லா மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் டி.ஐ.ஜி. ஜயந்த் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள், முன்னிலையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த விரேந்திர அலியாஸ் சங்கர் எனும் நபர் போலீசாரிடம் சரணடைந்தர். இவரின் தலைக்கு 5 லட்சம் ரூபாய் போலீசாரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாமாகவே விரேந்திர அலியாஸ் சங்கர் போலீசாரிடம் சரணடைந்ததால் அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பரிசு தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை போலீசார் அவரிடம் அளித்தனர். #Maoist