என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர் சங்க தேர்தல்"
ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அபார வெற்றி பெற்றுள்ளனர். #HUSUElection #ABVP
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஏ.பி.வி.பி., என அழைக்கப்படும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போட்டியிட்டனர்.

தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட ஏ.பி.வி.பி. அமைப்பின் ஆர்த்தி நாக்பால் 1669 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோல், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பினர் வெற்றி பெற்றனர்.
எட்டு ஆணடுகளுக்கு பிறகு கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது என ஏ.பி.வி.பி. அமைப்பினர் தெரிவித்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது. #HUSUElection #ABVP
சமீபத்தில் நடந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற ஏபிவிபி அமைப்பின் அங்கிவ் பைசோயா போலி சான்றிதழ் அளித்து படிக்க சேர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. #DUSUElection2018 #ABVP #NSUI
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வென்றது. செயலாளர் பொறுப்பை காங்கிரசின் மாணவர் அமைப்பு வென்றது.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏபிவிபியின் அங்கிவ் பைசோயா, பிஏ தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக கூறி டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ இணைந்துள்ளார்.
ஆனால், அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பெற்றதாக கூறப்பட்ட பட்டச் சான்றிதல் போலீயானது என காங்கிரஸ் மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சான்றிதழின் எண்ணை பல்கலைக்கழகத்தில் கொடுத்து விசாரித்ததில், அது போலியானது என பல்கலைக்கழம் கடிதம் அனுப்பியுள்ளதை அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏபிவிபி பட்டச்சான்றிதழ்களை ஆய்வு செய்தே டெல்லி பல்கலைக்கழகம் அங்கிவ்க்கு எம்.ஏ சீட் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் வெற்றி பெற்றுள்ளனர். #DUSUElection #ABVP
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஏ.பி.வி.பி., என அழைக்கப்படும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஓட்டுப் பதிவு முடிவடைந்ததும் ஓட்டு எண்ணிக்கை நேற்று மாலை தொடங்கியது.
இதில் ஏ.பி.வி.பி. அமைப்பின் அங்கிவ் பசோயா தலைவராகவும்,, துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி செயலாளராக வெற்றி பெற்றார்.
ஏ.பி.வி.பி. அமைப்பினர் இந்த தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளனர் என தேசிய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #DUSUElection #ABVP