என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹரீஷ்"

    • புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'.
    • இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

    புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் மிகவும் விறுவிறுப்பான காட்சிகளால் அமைந்துள்ளது. கொலை, போலீஸ், கொலை செய்பவன் எல்லாம் கலந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது எம்மாதிரியான கதைக்களம் என போகப்போகத்தான் தெரியும். படம் விரைவில் திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    மலையாள எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய ‘மீஷா’ புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #Meesha
    புதுடெல்லி:

    மலையாள எழுத்தாளரான ஹரீஸ், மாத்ரூபூமி இதழில் ‘மீஷா’ என்ற தொடரை எழுதி வந்தார். சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட்டது. பின்னர், இந்த தொடர் புத்தகமாக வெளிவந்தது. இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    புத்தகத்தில் கோயில் பூசாரிகள் மற்றும் இந்துப் பெண்களின் நிலை குறித்து மோசமாக சித்தகரித்து இருப்பதால் இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த காலத்தில் இது போன்ற விசயங்களை பெரியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எழுத்தாளர்களின் கற்பனைத் திறனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது அதே போல் இலக்கியப் படைப்புகளை தடை செய்யவும் இயலாது என்று கூறி உத்தரவிட்டனர்.

    இதுவரை ராசவித்யாயுடே சரித்ரம், ஆதாம், அப்பன் என்ற மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ள ஹரீஸ், ஆதாம் புத்தகத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×