என் மலர்
நீங்கள் தேடியது "slug 176796"
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடக்கு அக்ரஹாரம், பெருமாள் கோவில் பின்புறம் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. மேலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சிக்காக இந்த சாலை வழியாக சென்று வருவார்கள்.
இதனால் இச்சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்துச்செல்வர்.
இங்கு தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அப்பகுதி பெண்கள் மற்றும் முதியவர்கள் ஒருவித அச்சத்துடனேயே இச்சாலையை கடந்து வருகின்றனர்.
எனவே நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சண்டிகரில் உள்ள பல்சோரா பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த தெரு நாய்கள் சிறுவர்களை தாக்க தொடங்கின. நாயை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டான்.
படுகாயமடைந்த ஒன்றரை வயது சிறுவனான ஆயுஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடித்ததில் சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இது போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. தெரு நாய்களால் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களில் தொல்லை அதிகமாக இருப்பதால் சிறுவர்களை வெளியே விட பெற்றோர்கள் பயப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.