என் மலர்
நீங்கள் தேடியது "ஜப்பான் குழு"
- நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.
- வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நடிகைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும், அமை திகாக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் நேற்று நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.
கோவில் பீடா திபதி நடாத்தூர் ஜனார்த்தனன் சாமிகள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் 108 கிலோ மிளகாய் வத்தல் உட்பட 108 யாக பொருட்களைக்கொண்டு பூஜைகள் நடந்தது. இதில் இந்திய முறைப்படி வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.
பின்னர் பய பக்தியுடன் பிரத்தியங்கிரா காளியை வழிபட்டனர். ஜப்பான் நாட்டினர் இந்திய முறைப்படி யாகம் நடத்தி சாமி தரிசனம் செய்ததை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து வியப்படைந்தனர்.
ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி அயா தலைமையிலான குழுவினர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகளின் செயல்பாட்டினை களஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியை சர்வதேச தரத்திற்கு உயர்த்திட அனைத்து உதவிகளையும் ஜப்பான் அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்தனர். பின்னர், இக்குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் குழுவினர் பேசியதாவது:-
அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நர்சுகளின் அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற சேவை எங்களுக்கு நெகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தாய்-சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் அடையவேண்டிய நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்து இமாலய சாதனை புரிந்துள்ளது.
அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட்டுவரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் புரட்சிகரமான திட்டமாகும். தமிழக அரசின் சீரிய திட்டங்களால் அதிகளவில் ஏழை எளிய மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் தரமான சிகிச்சை பெற்றுவருவது பாராட்டுக்குரியது. ஜப்பான் அரசு, தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எல்லாவித ஒத்துழைப்பையும் நல்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.