என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில முறைகேடு வழக்கு"

    • முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
    • முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

    கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, சித்தராமையாவின் மனைவிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    நில ஊழல் வழக்கில் ஆதாரமில்லை என லோக் ஆயுக்தா கூறிவிட்ட நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

    எடியூரப்பா மீதான 15 நில முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இது எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய நிம்மதியை வழங்கியுள்ளது. #yeddyurappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவராக இருப்பவர் எடியூரப்பா. இவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, பெங்களூரு ராசேனஹள்ளியில் அரசு நிலத்தை அரசாணையில் இருந்து விடுவித்தார். இதுபோல் இன்னும் பல இடங்களில் அரசு நிலங்களை எடியூரப்பா விடுவித்தார். இவற்றில் நில முறைகேடு நடந்து இருப்பதாக கூறி லோக்ஆயுக்தா கோர்ட்டில் தனித்தனியாக 15 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், தன் மீதான நில முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய கோரி எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனு மீது விசாரணை முடிவடைந்ததை அடுத்து 28-ந் தேதி(நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று அந்த சிறப்பு கோர்ட்டு அறிவித்தது. அதன்படி நேற்று சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. எடியூரப்பா மீதான 15 நில முறைகேடு வழக்குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய நிம்மதியை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை கர்நாடக பா.ஜனதா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மீது இருந்த பெங்களூரு ராசேனஹள்ளி நில விடுவிப்பு உள்பட 15 வழக்குகளை சிறப்பு கோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதை பா.ஜனதா வரவேற்கிறது. எடியூரப்பாவின் எதிரிகள் அவர் மீது ஏதாவது பொய் வழக்குகளை போடுவதையே தொழிலாக கொண்டு செயல்பட்டனர்.

    அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தினர். இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளுக்கு சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பே சரியான பதில் ஆகும். எடியூரப்பாவை கடுமையாக விமர்சித்தவர்கள் தற்போது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எடியூரப்பாவிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #yeddyurappa #BJP

    ×