என் மலர்
நீங்கள் தேடியது "மாலி"
- 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது.
உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' யானை உயிரிழந்தது. அந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. மாலி யானை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை தனியாகவே கழித்தது.
மாலி யானை பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இமெல்டா மார்கோஸுக்கு 1981-ம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால்பரிசாக வழங்கப்பட்டது. மிருகக்காட்சிசாலையில் 1990-ம் ஆண்டு ஷிவா என்ற யானை உயிரிழந்ததிலிருந்து மாலி யானை மட்டுமே இருந்தது. மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது. அவள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததால் அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார்.
- கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் மாலியும் ஒன்று. மேலும் சுரங்கத் தளங்கள் தொடர்ந்து நிலச்சரிவுகளால் விபத்துகளுக்கு ஆளாகின்றன. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியில், தங்கத்தை ஒழுங்கற்ற முறையில் வெட்டி எடுப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
"சுரங்கத்தில்1800 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், சரிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. நிலை தடுமாறி சரிந்தவர்களில் சிலர் தண்ணீரில் விழுந்தனர். அவர்களில் ஒரு பெண் தனது முதுகில் குழந்தையை வைத்திருந்தார்," என்று ஒரு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் கெனீபா தங்க சுரங்க தொழிலாளர்கள் சங்கமும் 48 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான மாலி பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது பல்வேறு பயங்கரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் அங்கு அட்டூழியம் செய்து வருகின்றனர். எனவே அவர்களை ஒடுக்கி மாலி நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க 4 ஆயிரம் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.
தென் மேற்கு கயோ மகாணத்தில் போல் சரே வனப்பகுதி உள்ளது. அங்கு பதுங்கியிருந்து கொண்டு பிரான்ஸ் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இது புர்கினோ பாசோ நாட்டின் எல்லையில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் ராணுவம் அப்பகுதியில் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், வான் தாக்குதல் நடத்திய பிறகு விமானத்தில் இருந்து தரையில் இறங்கிய பிரான்ஸ் கம்மாண்டோ வீரர்கள், கொல்லப்பட்டவன் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் முகமது அக் அல்மௌனர் என்பதை உறுதி செய்தனர்.
இந்த தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு இளைஞர் உள்பட பொதுமக்கள் இருவர் பலியாகினர். பொதுமக்களின் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரான்ஸ் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Frenchairstrike
