என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 179019
நீங்கள் தேடியது "ஐ.எஸ்"
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #IS #US #Afganistan
காபுல்:
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவம் இணைந்து ஐ.எஸ் அமைப்பு பதுங்கி இருந்ததாக கருதிய இடங்கள் மீது பல்வேறு வித தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை தளபதி அபு சயீத் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷா உசைன் தெரிவித்துள்ளார்.
இதே தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IS #US #Afganistan
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவம் இணைந்து ஐ.எஸ் அமைப்பு பதுங்கி இருந்ததாக கருதிய இடங்கள் மீது பல்வேறு வித தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை தளபதி அபு சயீத் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷா உசைன் தெரிவித்துள்ளார்.
இதே தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IS #US #Afganistan
ஈரானில் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான 8 ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Iran
தெஹ்ரான்:
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் வழிபாட்டுத் தலம் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட ஐ.எஸ் அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுமார் 8 பயங்கரவாதிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் நாட்டில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Iran
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் வழிபாட்டுத் தலம் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட ஐ.எஸ் அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுமார் 8 பயங்கரவாதிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் நாட்டில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Iran
அல்கொய்தா, ஐ.எஸ். இந்திய கிளைகளான பயங்கரவாத அமைப்புகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்து உள்ளது.
புதுடெல்லி:
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய கிளையான அகியுஸ் (இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா), ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளையான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே (ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம் கொராசன்) அமைப்புகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்து உள்ளது.
மிகக் கடுமையான சட்டமாக கருதப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய கிளையான அகியுஸ் (இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா), ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளையான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே (ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம் கொராசன்) அமைப்புகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்து உள்ளது.
மிகக் கடுமையான சட்டமாக கருதப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் நேற்று இரவு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#Suicideattack
பாக்தாத்:
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.
மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.
மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். #afganistan #Blastatstadium
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்களும் காவல் அதிகாரிகளும் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 43-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆளுனர் மாளிகையின் அதிகாரி அட்டல்லா கோக்யானி கூறுகையில், ராக்கெட்டுகள் மூலம் அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், மாகாணத்தின் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக கூறி, மாகாண ஆளுனர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தலிபான்களை போன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. #afganistan #Blastatstadium
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்களும் காவல் அதிகாரிகளும் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 43-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆளுனர் மாளிகையின் அதிகாரி அட்டல்லா கோக்யானி கூறுகையில், ராக்கெட்டுகள் மூலம் அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், மாகாணத்தின் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக கூறி, மாகாண ஆளுனர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தலிபான்களை போன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. #afganistan #Blastatstadium
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X