search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179503"

    பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகக்கூடாது. அவ்வாறு பருகுவது ஒருசில உடல் உபாதைகள் ஏற்பட வழிவகுத்துவிடும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    அன்றாட உணவு பழக்க வழக்கங்களுடன் பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அவற்றுள் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. தொடர்ந்து பழங்கள் சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற அபாயங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அதேவேளையில் பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகக்கூடாது. அவ்வாறு பருகுவது ஒருசில உடல் உபாதைகள் ஏற்பட வழிவகுத்துவிடும்.

    அதுபற்றி பார்ப்போம்:

    * அனைத்து பழங்களிலும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகம் உள்ளன. அவை செரிமானம் ஒழுங்காக நடைபெறுவதற்கு உதவுகின்றன. உடல் அமைப்பும் பல்வேறு வகையான செரிமான நொதிகளை உற்பத்தி செய்கின்றன.

    அதிலும் வயிற்றில் இருந்து உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு பொருட்கள் எளிதாக செரிமானம் ஆவதற்கு வழிவகை செய்யும். ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், அது அந்த அமிலத்தின் செயல்திறனை குறைத்துவிடும். அதனால் செரிமானத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும்.

    * வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். அவற்றை சாப்பிட்டதும் செரிமானம் ஆவதற்கு குடல் இயக்கங்கள் மெதுவாக நடைபெறும். அந்த நேரத்தில் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் செயல்பாடு அதிகரிக்கும். அதிக நீரை ஈடு செய்வதற்காக வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

    * பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகுவது செரிமான உறுப்புகளின் பி.எச். அளவுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். சாதாரணமாக வயிற்றில் உள்ள அமிலத்தின் பி.எச். அளவு 1.5 முதல் 3.5 வரை இருக்கும். பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகினால் அமிலத்தின் அளவை குறையச் செய்து செரிமானத்தை பலவீனமாக்கும்.

    * பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் வேகம் குறைய தொடங்கிவிடும். சில சமயங்களில் வயிற்றில் உள்ள உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று பிரச்சினைகள் ஏற்படும்.

    * இரைப்பை நொதிகளின் செயல்பாடும் பாதிக்கப்படும். சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான நொதிகள் உற்பத்தியாகவில்லை என்றால் நெஞ்ெசரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    * செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பழங்கள் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் பருகுவது நல்லது. 
    மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.
    மாங்கனி முக்கனிகளுள் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் மாம்பழத்துக்கு தனி சிறப்பு உண்டு. பழனி மலை முருகன் மாங்கனி (ஞானப்பழம்) கிடைக்காததால் தன் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்ற கதையை நாம் அறிவோம்.

    இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 283 மாம்பழ வகைகள் இருக்கின்றன. இவற்றில் 30 வகைகள் பிரசித்திப் பெற்றவை. நமது தேசிய கனி என்ற சிறப்பை பெற்றது மாங்கனி.

    மாமரம் 300 வருடத்துக்கு பிறகும் கூட கனி தரும். இந்திய மாம்பழ வகைகளில் அல்போன்சா, மல்கோவா, சேலம் குண்டு, சேலம் அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், லாங்க்ரா, காலாப்பட், பாதாமி அல்போன்சா, ராஸ்புரி, கோல, பெத்தரசலு, சுவர்ணரேகா, லாங்க்ரா போன்றவை பிரசித்தி பெற்றவை.



    உலகில் இனிப்பான மாங்கனி பிலிப்பைன்ஸ் நாட்டில் விளையும் காரபோவ் தான். இதில் 14 வகைகள் உண்டு. தமிழகத்தில் ஏழைகளின் மாம்பழம் ருமானி. இதன் விலை குறைவு.

    உலகில் மாம்பழம் அதிகம் விளைவது இந்தியாவில் தான். மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. மாங்கனி கொழுப்பைக் குறைக்கும். முகப்பருக்களை அழிக்கும். முகப்பொலிவு தரும். எலும்புகளை வலுவாக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறியடிக்கும். தாம்பத்ய வாழ்க்கைக்கு சிறந்தது.

    சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் நிலைக்கேற்ப மருத்துவ ஆலோசனை பெற்று மாம்பழம் சாப்பிடலாம். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடக் கூடாது. அவை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். பருவகாலத்துக்கு ஏற்ப கனிகளை உட்கொள்ள வேண்டும்.

    தற்போது மாம்பழ சீசன் நடந்துகொண்டு இருக்கிறது. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.

    வக்கீல் ஏ.எஸ்.பிலால், சென்னை
    ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
    ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், மாதுளை, கொய்யா, சீத்தா... என நமக்காகக் கொட்டிக்கிடக்கின்றன விதவிதமான பழங்கள். ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது.

    கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.

    செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும். கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்புண்டு. எனவே, வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.



    "கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவை உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில், ஆர்சனிக் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. மாம்பழம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு கோடைக்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

    அதற்குக் காரணம் இதுபோன்று ரசாயனங்கள்தான். இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, உடல் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
    ×