என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிநாய் கடித்து ஆடுகள் பலி"

    ஊதியூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலியானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே உள்ள அய்யாக்குட்டி வலசு, செம்மடைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (76). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை முத்துச்சாமி தனது 9 வெள்ளாடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது 9 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. முத்துசாமியின் ஒரு ஆடு காயங்களுடன் உயிர் பிழைத்தது.

    இதே பகுதியில் பழனிசாமி என்பவரது தோட்டத்தில் 2 வெள்ளாடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது. இறந்த ஆடுகளை கடலைக்காட்டுபுதூர் கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார்.

    இறந்த ஆடுகளின் மதிப்பு 90 ஆயிரம் ரூபாய் ஆகும். வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி முத்துசாமி, பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×