என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்ரான்கான்"

    • இம்ரான்கான் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சிறையில் அவரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறையில் இம்ரான்கானைச் சந்திக்க அவரது சகோதரிகளான அலீமா கான், உஸ்மா கான், நொரீன் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் நேற்று வந்தனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து சாலை குறுக்கே கன்டெய்னர்களை போட்டு மறித்தனர். அவர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்தனர். இருப்பினும், இம்ரான்கானின் சகோதரிகள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சகோதரிகள் 3 பேர் மற்றும் இம்ரான்கான் கட்சி தலைவர்கள் சிலரையும் கைது செய்தனர். பின்னர் வாகனத்தில் ஏற்றி சிறையில் இருந்து சற்று தொலைவான பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

    ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமையும் இம்ரான்கானைச் சந்திக்க வந்தபோது, அவரது 3 சகோதரிகளும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இம்ரான்கான், நவம்பர் 4 ஆம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வர திட்டமிட்டுள்ளார்.
    • பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணியை நடத்திய இம்ரான்கான் இந்தியாவை மீண்டும் பாராட்டி பேசினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கடசி தலைவருமான இம்ரான்கான் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகப் பெரும் பேரணியை தொடங்கினர். இந்த பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைதியை நிலைநாட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது, அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உருவாக்கும் எந்த முயற்சியும் இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

    லிபர்ட்டி சவுக்கில் ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான்கான் தனது முதல் உரையில் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து இம்ரான்கான் பேசியதாவது:

    எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், ஆனால் நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன். இல்லையெனில் என்னால் நிறைய சொல்ல முடியும்.

    சுதந்திரமான பாகிஸ்தானைப் பார்க்க விரும்புவதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராணுவம் தேவை. நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிக்கும்போது, அது ஆக்கப்பூர்வமாகவும் உங்கள் முன்னேற்றத்திற்காகவும் இருக்கிறது. நான் இதை மீண்டும் சொல்கிறேன், என்னால் நிறைய சொல்ல முடியும் மற்றும் உங்களுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை.

    எனக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    இம்ரான்கான் ஏற்கனவே நடத்திய பேரணிகளின் போது வன்முறை வெடித்ததால் பாதுகாப்பிற்காக லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பாபர் ஆசம், சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான்கான் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக இம்ரான்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பாபர் ஆசம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இம்ரான்கான் மீதான கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், சோயப் அக்தர், வாசிம் அக்ரம், முகமது ஹபீஸ் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
    • இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என இம்ரான்கான் சூளுரைத்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாட்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி தன்னுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை கடந்த வாரம் தொடங்கினார்.

    இந்தப் பேரணி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகருக்குச் சென்றது. இம்ரான்கான் கன்டெய்னர் லாரியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதோடு அவருடன் நின்றிருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் காயமடைந்தனர்.

    இதையடுத்து, இம்ரான்கான் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார். இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என சூளுரைத்தார்.

    இந்நிலையில், இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கராச்சியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். பைசலாபாத் நகரில் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இம்ரான்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சதியின் பின்னணியில் பிரதமர், உள்துறை அமைச்சர் இருப்பதாக இம்ரான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஆளும் ஷபாஷ் செரீப் அரசுக்கு எதிராக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான்கான் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரி, கடந்த வாரம் தமது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை அவர் தொடங்கிய நிலையில், பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகரில் இம்ரான்கான் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தம்மை கொலை செய்யும் சதித் திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப‌க் கூடாது என அந்நாட்டு ஊடக‌ங்களுக்கு ஷபாஸ் ஷெரீப் அரசு தெரிவித்துள்ளது. தவறான தகவல் அளித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இம்ரான்கான் முயற்சிப்பதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒலிபரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி ஒளிபரப்பும் ஊடகங்களின் உரிம‌ம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும்.
    • லாகூரில் இருந்து கொண்டே பேரணியில் உரையாற்றுவேன் என்றார் இம்ரான்கான்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார்.

    இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.

    இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என அனைத்து ஊடகங்களுக்கும் பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்நிலையில், லாகூரில் இருந்தவாறே இம்ரான்கான் பேசியதாவது:

    நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும். நான் இங்கிருந்து (லாகூரில்) கொண்டே பேரணியில் உரையாற்றுவேன். எங்கள் பேரணி ராவல்பிண்டியை அடைந்தவுடன், நான் அதில் நேரில் கலந்துகொண்டு பேரணியை மீண்டும் தலைமையேற்று வழிநடத்துவேன். எங்கள் பேரணி, அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குள் ராவல்பிண்டியை வந்தடையும் என தெரிவித்தார்.

    • இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்தது.
    • துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார்.

    துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

    இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என அனைத்து ஊடகங்களுக்கும் பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இதற்கிடையே, லாகூரில் இருந்தவாறே இம்ரான்கான் பேசுகையில், நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், நாளை முதல் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான்கான் கட்சியினரின் பேரணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை (10-ம் தேதி) முதல் மீண்டும் பேரணி தொடரும் என்று இம்ரான்கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    • அரசியல் கட்சியினர் பலர் இம்ரான்கானை விமர்சனம் செய்து வருகின்றனர்.
    • பழிவாங்குவதற்காக தற்போதைய அரசு ஒத்துழைப்புடன் பரப்பி விடப்படுவதாக இம்ரான் கட்சி தெரிவித்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    இதற்கிடையே, பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவதும், தமது வீட்டுக்கு வரும்படி அந்தப் பெண்ணை இம்ரான்கான் வற்புறுத்துவது போன்ற ஆடியோ பதிவை பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் இம்ரான்கானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த ஆடியோ விவகாரம் குறித்து, பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் கூறுகையில், எங்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ஒரு பெண்ணுடன் போனில் ஆபாசமாக பேசுவது போல வெளியிடப்பட்டுள்ள ஆடியோ போலியானது. அவரைப் போலவே குரலை பயன்படுத்தி விஷமத்தனம் செய்துள்ளனர். இது அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக தற்போதைய அரசு ஒத்துழைப்புடன் பரப்பி விடப்படுகிறது என தெரிவித்தார்.

    • தேர்தல் ஆணையத்தின் விசாரணைக் குழு இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
    • விளக்கம் கேட்டு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்து பதவி விலகினார்.

    தற்போது பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணைக் குழு இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. விளக்கம் கேட்டு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

    இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

    • இம்ரான்கானை கொல்ல முன்னாள் அதிபர் ஆசிப் சர்தாரி சதித்திட்டம் தீட்டுவதாக ஷேக் ரஷீத் அகமது தெரிவித்தார்.
    • சுமார் 300 போலீசார் ஷேக் ரஷீத் அகமது வீட்டுக்குள் நுழைந்தனர்.

    பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஷேக் ரஷீத் அகமது. அவாமி முஸ்லிம் லீக் கட்சி தலைவரான இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர்.

    இந்த நிலையில் இம்ரான்கானை கொல்ல முன்னாள் அதிபர் ஆசிப் சர்தாரி சதித்திட்டம் தீட்டுவதாக ஷேக் ரஷீத் அகமது தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது அப்பாரா போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து ஷேக் ரஷீத் அகமதை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். இதுதொடர்பாக ஷேக் ரஷீத் அகமதுவின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "நள்ளிரவு 12.30 மணி அளவில் ஷேக் ரஷீத் அகமது பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    சுமார் 300 போலீசார் ஷேக் ரஷீத் அகமது வீட்டுக்குள் நுழைந்தனர். ஜன்னல், பொருட்களை நொறுக்கினர். ஷேக் ரஷீத்தை தாக்கி கைது செய்து அழைத்து சென்றார்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
    • புற்றுநோய்க்கு சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசின் தவறான நிர்வாகமே இதற்கு காரணமாகும்.

    மாவு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ நெய் பாகிஸ்தான் மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. புற்றுநோய்க்கு சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது.

    உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் இலங்கைக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை நமக்கு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெய் விலையை 60 ஆயிரம் கோடி ரூபாய் என வாய் தவறி இம்ரான்கான் பேசியது அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை வைத்து பலரும் அவரை கேலி செய்து வருவதுடன் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

    • பதவியில் இருந்து போது அரசு பரிசு பொருட்களை இம்ரான்கான் விற்றதாக குற்றச்சாட்டு.
    • இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் இம்ரான்கான் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த வந்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார்.

    தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மீது வழக்குப்பதியப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள்

    வெளியாயின. ஜாமின் கோரி லாகூர் ஐகோரட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று லாகூர் கோர்ட்டில் ஆஜரானார். இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தாரிக் சலீம் ஷேக், இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    ×