search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேக்கிங்"

    • எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார்.
    • எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.

    உலகப் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் EVM வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது என்றும் எனவே EVM முறையை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்றும் கூறியது உலக அளவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைமுறையில் EVM குறித்த எலான் மஸ்கின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்த சமயத்தில் EVM முறையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. ஆனால் EVM இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்றும் யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும் ஆரம்பம் முதலே வாதாடி வரும் ஆளும் பாஜக எலான் மஸ்கின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்திருந்தது. தகவல் முன்னாள் தொழில்நுட்பத்துறை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பதிவில், இந்தியாவில் தயாரிக்கப்படும் EVM கள் பாதுகாப்பானது என்றும் வேண்டுமானால் உங்களுக்கு EVM இயந்திரங்களை எப்படி தயாரிக்கவேண்டும் என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்றும் எலான் மஸ்க் கருத்துக்கு பதிலளித்திருந்தார்.

    உடனே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'Anything can be hacked' எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார். இந்த விவகாரம் இப்படியாக புகைந்துகொண்டிருக்கும் வேளையில் ராஜீவ் சந்திரசேகர் ஒருபடி மேலே சென்று புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, டெஸ்லா கார்களையும் ஹேக் செய்ய முடியும். ஏன் கால்குலேட்டரையும், பிரட் டோஸ்ட் செய்யும் டோஸ்டரையும் கூட ஹேக் செய்ய முடியும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

     

     

     

    மேலும், ஹேக்கிங் என்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது. எலான் மஸ்கின் கருத்து தவறானது. போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட EVM கள் வேண்டுமானால் ஹேக் செய்யப்படலாம். எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இந்திய EVM தயாரிப்பு குறித்து அவருக்கு தெரியாது. அவை யாராலும் ஹேக் செய்யமுடியாத அதிநவீன சாதனங்கள் என்று தெரிவித்துள்ளார்.  

    • நிறுவனம் வழங்கிய வங்கி மென்பொருளை அணுக முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
    • தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூரு:

    இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஐடி எனும் தகவல் தொழில்நுட்பம், பிடி எனும் உயிரி தொழில்நுட்பம் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழிற்சாலைகள் பெங்களூருவில் அமைந்திருப்பது தான். இதை நோட்டமிட்டு இணையதளத்தை பயன்படுத்தி தகவல்களை திருடி மோசடி செய்யும் ஹேக்கர் கும்பல் பெங்களூருவில் நடமாடுகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் சென்னை மென்பொருள் நிறுவனத்தின் வெளிநாட்டு வாடிக்கையாளர் தரவு திருடப்பட்டதாக பெங்களூரு மாநகர போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    அதில், கம்பெனிசிவ் கிரெடிட் ரிப்போர்ட்டிங் சாப்ட்வேர் செயலியை பயனர்களால் அணுக முடியவில்லை. இது தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. நிறுவனம் வழங்கிய வங்கி மென்பொருளை அணுக முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மர்ம நபர்கள் தங்களது நிறுவனத்தின் செயலியை முடக்கி வாடிக்கையாளர் தரவுகளை திருடி உள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஹேக்கிங் செய்தது பெங்களூருவை சேர்ந்த காவ்யா வசந்த கிருஷ்ணன், ரவிதா தேவசேனாபதி மற்றும் கருப்பையா, சென்னையை சேர்ந்த எடிசன் ரமேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவார்கள். கடந்த அக்டோபர் மாதம் 9 -ந் தேதி அதிகாலை 1 மணியளவில் சென்னையில் இருந்து தொடங்கிய 3 மணி நேர கான்பரன்ஸ் அழைப்பின்போது ஹேக்கர் செய்து மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அமெரிக்காவில் நடந்த ஹேக்கர்கள் போட்டியில் தேர்தல் சிஸ்டத்தின் மாதிரியை 10 நிமிடத்தில் 11 வயது சிறுவன் ஹேக் செய்து தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளது, அந்நாட்டு தேர்தல் சிஸ்டத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் சமீபத்தில் டெப்கான் என்ற கம்யூட்டர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. அமெரிக்கத் தேர்தல் கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சங்களைச் சோதிக்கும் நோக்கத்தோடு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஹேக்கிங் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. 

    6 முதல் 17 வயதுடைய 35 சிறுவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் நடத்தப்படும் தேர்தலின் மாதிரி சிஸ்டத்தை ஹேக் செய்வதே இந்த போட்டியின் இலக்கு.

    போட்டி தொடங்கிய 10 நிமிடத்தில் 11 வயது சிறுவன், சிஸ்டத்தை ஹேக் செய்து பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை, வேட்பாளரின் பெயர் ஆகியவற்றை மாற்றிக்காட்டி முதலிடம் பிடித்தான். தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடிக்கும் போது இதுபோல ஹேக் செய்து முடிவுகளை மாற்ற வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இது அந்நாட்டு தேர்தல் அமைப்பினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க தேர்தல் அதிகாரிகள், இது போன்ற மாநாடுகள் வரவேற்கத்தக்கது. இந்த முறையில் உள்ள குறைகள் அந்தந்த மாநிலங்களிடம் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர். 
    ‘எனது ஆதார் தகவலை வைத்துக் கொண்டு, எனக்கு பாதிப்பை ஏற்படுத்துங்கள்’ என டிராய் தலைவர் ஆர்.எஸ் ஷர்மா சவால் விடுக்க, கிடைத்த பதிலடியால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு அவர் உள்ளாகியுள்ளார். #Aadhaar #TRAI #RSSharma
    புதுடெல்லி:

    ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. ஆதார் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அரசும் பலமுறை அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான சந்தேகங்கள் அவ்வப்போது வெடிக்கின்றன.

    இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, “உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விவரத்தை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார்.

    ஆதார் திட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் ஷர்மாவின் இந்த திடீர் சவால் ட்விட்டரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற பாதுகாப்பு நிபுணர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

    “வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்” என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் கூறியிருந்தார்.



    எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல், “செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக நான் சவால் விடுக்கவில்லை. என்னுடைய ஆதார் எண் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் என்ன செய்யமுடியும்? என்பதே சவால்” என மீண்டும் ஷர்மா ட்வீட் செய்திருந்தார்.

    எனினும், சமாளிக்கும் விதமான ஷர்மாவின் பதில் நெட்டிசன்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. “உங்களது பிறந்ததேதி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதார் எண் மூலம் எடுத்துவிடலாம் என்பது பாதிப்பை ஏற்படுத்தாதா?” என பலர் ஷர்மாவிடம் கேட்டுள்ளனர்.

    மேலும், “பல அடி நீளத்தில் சுவர் கட்டி ஆதார் தகவல்களை பாதுகாப்பது இப்படிதானா?” எனவும் பலர் கேட்டுள்ளனர். 

    எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களை ஆதார் இல்லாமலேயே எளிதாக எடுத்துவிடலாம் எனவும் பலர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

    மேற்கண்ட இந்த நிகழ்வால் மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்தான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
    ×