என் மலர்
நீங்கள் தேடியது "தெலுங்கான"
- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்.
- அடுத்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, "நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன். நீங்களும் உங்கள் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும். அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்தியாவில் வாழும் வங்காள தேசம், ரோஹிங்கியா அகதிகள் தாமாக நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், சுட்டு கொலை செய்யவேண்டும் என தெலுங்கு தேச பா.ஜ.க எம்.பி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #AssamNRC #RajaSinghLodh
ஐதராபாத்:
அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து சுமார் 40 லட்சம் இந்தியர்கள் விடுபட்டுபோனதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதற்கான கண்டனம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், தனது கருத்தை சமூக வலைதளங்களில் காணொளி காட்சி மூலம் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் அத்துமீறி குடியேறிய வங்காளதேசம் மற்றும் ரோஹிங்கியாவைச் சேர்ந்த அகதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு அவர்கள் வெளியேறாவிட்டால் சுட்டுக் கொலை செய்வது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவினை சிதைக்க சதி செய்வதாகவும், அவர்களை வெளியேற்றுவதே அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது மற்றொரு பதிவில், இந்தியாவில் சட்டவிரோதமாக வாழும் அனைத்து முஸ்லிம்களும் அவர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் அவர்கள் போக மறுத்தால், துப்பாக்கி முனையில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் இந்த சர்ச்சை கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #AssamNRC #RajaSinghLodh
அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து சுமார் 40 லட்சம் இந்தியர்கள் விடுபட்டுபோனதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதற்கான கண்டனம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், தனது கருத்தை சமூக வலைதளங்களில் காணொளி காட்சி மூலம் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் அத்துமீறி குடியேறிய வங்காளதேசம் மற்றும் ரோஹிங்கியாவைச் சேர்ந்த அகதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு அவர்கள் வெளியேறாவிட்டால் சுட்டுக் கொலை செய்வது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவினை சிதைக்க சதி செய்வதாகவும், அவர்களை வெளியேற்றுவதே அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது மற்றொரு பதிவில், இந்தியாவில் சட்டவிரோதமாக வாழும் அனைத்து முஸ்லிம்களும் அவர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் அவர்கள் போக மறுத்தால், துப்பாக்கி முனையில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் இந்த சர்ச்சை கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #AssamNRC #RajaSinghLodh