search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாம்"

    • ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர்.
    • இஸ்லாம் மதத்தின் பெயரில் கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் . அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர்

    அலோபதி மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கய பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனதின் மீது கடந்த 2 வருடங்களாக மேலாக வழக்கு நடந்துவந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் 3 முறை ஆஜராகி மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மேலும் பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சிறிய அளவிலான விளம்பரங்கள் மூலம் மன்னிப்பு கோரியிருந்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிபதிகள் அதிருப்தியில் இருந்தனர். எனினும் இனி தவறு செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் மன்றாடிய நிலையில் அந்த உத்தரவாதத்தை ஏற்று கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

    இந்த நிலையில்தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அலோபதி மருந்துகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ். நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய பாபா, பிணிநீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எனவே அலோபதி மருந்துகளால்  கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இறந்து கொண்டிருக்கின்றனர்.

    நமக்குத் தெரிந்த வரலாற்றின்படி உலகை அடக்கி ஆள்வதற்காக ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர். அதே சமயம், இஸ்லாம் மதத்தின் பெயரில் மில்லியன் கணக்கானவர்கள் கொன்று  குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    • 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
    • லவ் ஜிகாத் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும்

    லவ் ஜிகாத் 

    இனம் மதம் மொழி கடந்ததுதான் காதல் என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வருகிறது. இதில் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் காதலுக்கு தடையாக பெற்றோர், குடும்ப அமைப்புகள் இருந்து வந்த காலம் மாறி அரசாங்கமே தடை விதிக்கும் காலம் வந்துவிட்டது என்ற கருத்து நாளுக்குநாள் நடந்து வரும் மாற்றங்களால் உறுதிப்படத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக இந்து- இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கான சுதந்திரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஜனநாயக விரும்பிகள் கருதுகின்றனர். இந்து மதப் பெண்களை இஸ்லாமிய மத ஆண்கள் காதலித்து மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொள்வதாகக் குற்றம் சாட்டி தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் முன்வைக்கும் பதம் 'லவ் ஜிகாத்'.

     

    ஆயுள் தண்டனை 

    அரசியல் களத்திலும் சமீக காலங்களாக இந்த பதத்தின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு, லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

    இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

     

    தற்போது அந்த சட்டத்தில் திருத்தும் கொண்டுவந்துள்ள உ.பி அரசு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னர் பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருந்த நிலையில் தற்போது அதுபேன்ற திருமணங்கள் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும் சட்டத்தில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது

    அசாம் 

    அசாமில் ஆட்சியில்  உள்ள பாஜக அரசு உ.பியை போன்று லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்க உறுதி பூண்டுள்ளது.

    இதுதொடர்பாக பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, தேர்தலின்போதே லவ் ஜிகாத் குறித்து நிறைய பேசினோம், லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டதை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அசாம் மாநில அரசு பணிகளில் அசாமில் பிறந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற விதியையும் கொண்டுவருவோம் என்று தெரிவித்தார்.

    லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

    • காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இஸ்லாமியர் ஒருவரை சோனாக்ஷி திருமணம் செய்துள்ளதை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

    மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

    ஆனால், இஸ்லாமியர் ஒருவரை சோனாக்ஷி திருமணம் செய்துள்ளதை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த திருமண புகைப்படங்களில் பலரும் மோசமாக கமெண்ட் செய்து வந்தனர். இதனால் அந்த பதிவில் யாரும் கமெண்ட் செய்யமுடியாதபடியும் கமெண்ட்களை படிக்க முடியாத படியும் மாற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "7 வருட காதலுக்கு பின்பு ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அன்பை எதிர்பார்த்தனர். ஆனால் தங்கள் மீது வீசப்பட்ட வெறுப்பை தவிர்க்க பதிவின் கமெண்ட் பகுதியினை தடை செய்துள்ளனர். உங்கள் இருவரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

    மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குபிகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

     

    காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

     

    இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். தபாங், ரவுடி ராதோர் ஆகிய படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீரமந்தி வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
    • மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை.

    ஏக இறைவன் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?

    "இந்த உலக வாழ்க்கையின் நன்மைகளை விட மறுமை வாழ்க்கையில் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்று சொர்க்கத்தில் வாழ வேண்டும்" என்பது தான்.

    மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை. இறைவனின் சோதனையுடன், உலக வாழ்வில் காணப்படும் தற்காலிக இன்பங்களின் சோதனைகளும் நிறைந்தது.

    அதே நேரத்தில் திருக்குர்ஆன் (2:286) குறிப்பிடுகின்றது: 'அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளை சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே'.

    இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், இறைவனிடம் இருந்து நமக்கு சோதனைகள் வரும். ஆனால் அவை நமது சக்திக்கு மீறியதாக இருக்காது என்பது இறைவனின் உறுதிமொழியாகும். எனவே நமக்கு இறைவன் தரப்பில் இருந்து வரும் சோதனைகளைக் கண்டு நாம் கலங்காமல் அந்த இறைவனிடமே சரண் அடைந்து அந்த சோதனைகளில் வெற்றி பெற வேண்டும்.

    திருக்குர்ஆன் வசனத்திலே, `யார் என்ன நன்மை சம்பாதித்தார்களோ அதன் பலன் அவருக்கே, அது போல அவர் தீமைகளை சாம்பாதித்திருந்தால் அதன் விளைவும் அவருக்கே' என்று அல்லாஹ் விளக்குகின்றான்.

    இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் நன்மைகள் செய்திருந்தால் அதன் பலனைக்கொண்டு நமக்கு வரும் சோதனைகளில் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் நாம் தீமைகள் செய்திருந்தால் அதற்குரிய பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளையாகும்.

    இறைவனின் தரப்பில் இருந்து வரும் சோதனைகளை வென்று வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதன், அந்த இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றது.

    "எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை குற்றம் பிடிக்காதே. எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தை சுமத்தி விடாதே. எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!".

    பாவம் செய்த மனிதர்கள் இறைவனிடம் சரண் அடைந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தனது கருணை உள்ளத்துடன் மனிதர்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்று பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு விளக்குகின்றது:

    "நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலை செய்துவிட்டாலும், உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:17).

    மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:135).

    பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் மன்னித்து அருள்கின்றான். அதோடு அவர்களுக்கு சிறந்த நற்கூலியையும் அளிக்கின்றான். அது என்ன தெரியுமா? சொர்க்கம்.

    "இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடம் இருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது" (திருக்குர்ஆன் 3:136).

    'நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருக்குர்ஆன் 2:222)

    'எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுபவர்கள்தான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இறைவனின் நல்லடியார்களே, நாம் அல்லாஹ் காட்டிய வழியில், கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். பாவங்களில் இருந்து விலகி நன்மைகளை செய்வோம். அறிந்தும் அறியாமலும் பாவம் செய்துவிட்டால், அதற்காக வருந்தி உடனே இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம். இதன் மூலம் நாம் சொர்க்கத்தின் பாதையில் நடைபோட முடியும்.

    • அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும்.
    • ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார்.

    இஸ்லாம் மனித வாழ்க்கையை இரண்டாக குறிப்பிடுகிறது. ஒன்று இம்மை எனப்படும் இந்த உலக வாழ்க்கை. அடுத்தது

    இறைவனின் நெருக்கத்தில் வாழும் மறுமை வாழ்க்கை. இந்த இரண்டில் மறுமை வாழ்க்கையே சிறந்தது என்று ஏக இறைவன் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகின்றான்.

    இறையச்சத்துடன், நற்பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன், பிறருக்கு உதவும் உள்ளத்துடன் ஒருவன் இம்மையில் வாழ்ந்தால் மறுமையில் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும். ஒரு மனிதன் உயர்ந்த பண்புள்ளவராக வாழ 5 முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியை காண்போம்.

    ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் இவ்வாறு கூறினார்கள்:

    'நான் சில செய்திகளை கூறுகிறேன், அதை செயலாற்றுபவர் யார்?, அல்லது செயலாற்றும் நபருக்கு கற்றுக் கொடுப்பவர் எவரும் உண்டா?'.

    நபிகளார் இவ்வாறு கூறிய தும் நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'நானிருக்கிறேன் நாயகமே' என்றார். உடனே நபிகள் நாயகம் அவ ரது கையை பிடித்து 5 விஷயங்களை கூறினார்கள். அவை வருமாறு:-

    1) இறைவன் எவற்றை தடை செய்துள்ளானோ அவற்றை விட்டு விலகி, பயந்து நடந்து கொண்டால் மிகப்பெரிய வணக்கம் புரிந்தவராகலாம்.

    இறைவனுக்கு இணை வைத்தல், மது அருந்துவது. வட்டி வாங்கி சாப்பிடுவது. கொள்ளை அடிப்பது, விபச் சாரம் புரிவது, சூனியம் செய்வது, கொலை செய்வது போன்றவை பெரும்பாவங்கள் ஆகும். இவை அனைத் தும் இறைவனால் தடுக்கப்பட்டவை. இது போன்ற எந்தப் பெரும் பாவமும் செய்யாத போதிலும் தொழுகை, நோன்பு நோற்பது, ஜகாத், ஹஜ் போன்ற நல்ல காரியங்களை ஒருவர் செய்வதில்லை என்றால் அவர் குற்றவாளி தான்.

    அதே போன்று இதற்கு மாற்றமாக எல்லா நல்ல காரியங்களையும் செய்கிறார், அதேபோல பாவங்களையும் செய்கிறார் என்றால் இவரும் குற்றவாளி தான். மனிதன் தான் செய்யும் நல்ல காரியங்கள் யாவும், பாவ மான காரியங்களை விட்டும் தடுப்பவையாக அமைய வேண்டும். இவ்விரண்டையும் ஒரு மனிதன் பேணி செயல்படும் போது அவர்தான் அதிக வணக்கமுடையவராக கருதப்படுகிறார்.

    2) இறைவன் எதை பங்கிட்டு வழங்கியுள்ளானோ அதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்குமேயானால் அவர் தான் அதிகம் வசதி படைத்தவராவார்". இறைவன் ஒரு மனிதனுக்கு என்ன தேவை ஏற்படுமோ அதை அந்தந்த காலகட்டங்களில் வழங்கிக்

    வழங்கிக் கொண்டுதான் இருக்கிறான். அதில் எவ்வித குறையும் செய்யமாட்டான்.

    உயர்ந்த பண்புகள் முழுமையாக ஒரே நேரத்தில் வழங்குவதில்லை. உதாரணமாக, ஒரு மனிதன் 90 ஆண்டு வாழ்கிறான் என்றால், அவனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள உணவு, குடிநீர் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டால் சேமித்து வைத்து உண்ணாமல் குடிக்காமல் திகைத்து விடுவான். அதுமட்டுமல்லாமல் சோம்பேறியாகி உடல் நலமே கெட்டுவிடும். கல்லுக்குள் இருக்கும் ஜீவராசிக்கு உணவு வழங்கும் வன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான் என்ற நம் பிக்கை வரவேண்டும். அதே சமயம் வீட்டில் முடங்கிக் கிடப்பதும் கூடாது. கொடுப்பவன் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பான் என்று எண்ணக் கூடாது. நம்மிடமிருந்தும் உழைப்பு வேண்டும், அதன் மூலம் கிடைப்பதை ஏற்றுக் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற சொல்லுக்கேற்ப நடப் பது தான் பெரும் வசதி படைத்தவர் என்று எண்ணப்படும்.

    3) 'பக்கத்து வீட்டினரிடம் உபகாரமுடன் நடந்து கொள்ள வேண்டும்'. அப்படி நடந்தால் தான் உண்மையான முறையில் விசுவாசங்கொண்டவராக முடியும். அண்டை வீட்டாரிடம் எந்த அளவுக்கு உபகாரமுடன் நடக்க வேண்டும் என்றால், சொந்தங்களிடம் நடப்பதைப் போல் நடக்க வேண்டும் என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

    4) தனக்கு எதை விரும்புவாரோ அதையே பிறருக்கும் விரும்பவேண்டும். அப்பொழு துதான் முழுமையாக வழிபட்டவராக முடியும். மனிதனின் இயல்பு தனக்கு பிடிக்காத பொருளை அடுத்தவருக்கு பிடிக்கும் என்று வழங்குவதுதான். ஆனால், நபிகள் (ஸல்) அப்படிக் கூறவில்லை. மாறாக தனக்கு விருப்பமான பொருளைத்தான் அடுத்தவருக்கும் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நன்மை உண்டு. கெட்டுப்போன உணவுகளைக் கூட மற்ற உயிரினங்களுக்கு போடக்கூடாது என்பது ஷரீஅத் சட்டமாகும்.

    5) அதிகமாக சிரிப்பது கூடாது'. அப்படி சிரித்தால் உள்ளம் மரணித்துவிடும். அதாவது சந்தோஷமான நேரத்திலும் கூட நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும். அதிகமாக சிரிப்பதால் ஆபத்துக்கள் கூட ஏற்படலாம்.

    இந்த ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார். நாமும் முயற்சி செய்வோம், முன்னேற்றப் பாதையில் வெற்றி காண்போம்.

    • விமல் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான்.
    • அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

    விமல் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்த ஜிப்ரானுக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன. இதையடுத்து வத்திக்குச்சி, திருமணம் எனும் நிக்காஹ், குட்டி புலி, அமர காவியம், உத்தம வில்லன், பாபநாசம், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், துணிவு என 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

    தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜிப்ரான், அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறிய ஜிப்ரான், அதோடு தன் பெயரையும் மாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுவரை தன்னுடைய படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த அவர், குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என தன்னுடைய புது பெயரை போட்டிருந்தார். பெயர் மாற்றம் குறித்தும் அந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் ஜிப்ரான்.

    குரங்கு பெடல் படம் எனக்கு மனதுக்கு நெருக்கமான படமாக இருந்தது. அதனால் இந்த படத்தில் இருந்து அப்பா பெயரையும் என்னுடைய பெயருடன் சேர்த்துவிடலாம் என முடிவு செய்தேன். என்னுடைய தந்தை பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்றால் விழித்தெழுதல் என பொருள். வாகை சூடவா படம் நான் பிடிச்சு பண்ண படம், அதேபோன்ற ஒரு உணர்வோடு குரங்கு பெடல் படமும் இசையமைத்தேன். அதனால் இப்படத்தில் இருந்து என்னுடைய புது பெயரை பயன்படுத்த முடிவு செய்தேன். இனி நான் பணியாற்றும் படங்களிலும் ஜிப்ரான் வைபோதா என்றே பயன்படுத்த உள்ளேன் என அவர் கூறி இருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார்.
    • ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து.

    தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது காஜி நியமனம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது காஜி நியமனம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட காஜி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் மாவட்ட காஜி நியமன தேர்வுக்குழு இடம் பெற விண்ணப்பிப்பவர்கள், தனியர் ஆலிம் அல்லது பாசில் ஆக இருப்பதுடன் இஸ்லாம் மார்க்க கல்வியில் புலமைப்பெற்றவராகவும் அரபு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    இக்குறிப்பிடப்பட்ட தகுதியுடையவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர்.
    • 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்?

    இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர், இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்கள் தான் என்று குலாம் நபி ஆசாத் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான காஷ்மீர் பண்டிதர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதை பார்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

    அரசியல் லாபத்திற்காக மதத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருக்கும் குலாம் நபி ஆசாத், "சில பா.ஜ.க. தலைவர் முஸ்லீம்கள் வெளியில் இருந்து வந்துள்ளனர் என்று தெரிவித்தார். யாரும் வெளியில் இருந்து உள்ளே வரவில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இஸ்லாம் வந்துள்ளது. இந்து மதம் தான் மிகவும் பழைமை வாய்ந்தது. முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர், சிலர் முகலாய படையில் இருந்தவர்கள்," என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    "மற்ற முஸ்லீம்கள் அனைவரும் இந்துவாக இருந்து, முஸ்லீமாக மாறியுள்ளனர். இதற்கான எடுத்துக்காட்டை காஷ்மீரில் காணலாம். 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்? அனைவரும் காஷ்மீரி பண்டிட்களாகவே இருந்தனர். அவர்கள் இஸ்லாமிற்கு மாறிவிட்டனர். அவர்கள் பிறக்கும் போதே, இந்த மதத்தில் தான் இருந்தனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    • தவறு செய்வது மனிதர்களின் இயல்பு என்று கூறலாம்.
    • இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான்

    பாவங்கள் எதுவுமே செய்யாத மனிதர்கள் யாரும் உண்டா?.

    இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் கள்ளம், கபடமில்லாத உள்ளத்துடன், பாவம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் பிறக்கின்றன.

    பருவம் அடைந்த பிறகு, எது தவறு என்று அறிவு சுட்டிக்காட்டும் பொழுதும் கூட மனிதர்கள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்? முதல் காரணம், தான் செய்வது தவறுதான் என்பதை தவறு செய்பவர்கள் உணர்வதில்லை. ஷைத்தான் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறான். இது மிகவும் ஆபத்தானது.

    ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் பாவத்தைப் பற்றி கேட்கப்பட்டது. "பாவம் என்பது உன் மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுவும் ஆகும்" என்று அண்ணல் அவர்கள் நவின்றார்கள்.

    பொது வெளியில் மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் பெரும்பாலான தவறுகள் நிகழ்வதில்லை. எவ்வளவு பாவங்கள் செய்தாலும், சில மனிதர்கள் எதுவுமே தெரியாத மாதிரி நல்லவர்கள் போல நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் இந்த பிரபஞ்சத்தில் இறைவனுக்கு தெரியாத ரகசியங்கள் உண்டோ? நம்முடைய ஒவ்வொரு செயலும், பேச்சும் அல்லாஹ்வின் கட்டளையின் படி அவரவர்களின் பதிவேட்டில் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது.

    தஹ்லபா என்னும் சிறுவன் நற்பண்புகள் உடையவராகவும், மற்றவர்கள் மீது கண்ணியம் உடையவராகவும் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஏவும் பணிகளை பாக்கியமாகக் கருதி செய்து வருபவராகவும் இருந்தார். ஒரு முறை அண்ணலார் ஒரு வேலை காரணமாக தஹ்லபாவை வெளியில் அனுப்புகிறார்கள். போகும் வழியில் ஒரு வீட்டின் முன்பாக தொங்க விட்டிருந்த திரைச்சீலை காற்றில் விலகிய போது, உள்ளே ஒரு பெண்மணி குளித்துக் கொண்டிருந்த காட்சியை தற்செயலாகப் அவர் பார்க்க நேரிடுகிறது. உடனே தன் பார்வையைத் திருப்பிக் கொண்ட தஹ்லபா அவ்விடத்தை விட்டு பயந்து ஓடுகிறார். தவறு செய்து விட்டோமோ என்று மனம் பதறி வெகு தூரம் ஓடுகிறார். நபியவர்களை இனி எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்று மனம் உடைந்து புலம்புகிறார். அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.

    தினமும் அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் விசாரிக்கிறார்கள். அவரைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர உமர் (ரலி) அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். ஒரு வழியாக மலை அடிவாரம் ஒன்றில் அழுது, அழுது உடல் நலம் குன்றிய அவரைக் கண்டுபிடித்து தூக்கிக் கொண்டு வந்து அவருடைய வீட்டில் படுக்க வைக்கிறார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் தஹ்லபாவைப் பார்க்க வருகிறார்கள். படுக்கையில் இருந்து அவருடைய தலையைத் தூக்கி தன் மடியில் வைக்கிறார்கள். தஹ்லபா அழுது கொண்டே 'யா ரசூலுல்லாஹ் என்னுடைய தலையை கீழே கிடத்தி விடுங்கள். உங்களுடைய மடியில் தலை வைப்பதற்கு நான் அருகதை அற்றவன். நான் பெரிய பாவம் செய்து விட்டேன். அதனால் இறைவன் என்னைத் தண்டிப்பானோ என்று அச்சமாக இருக்கிறது' என்று புலம்புகிறார்.

    'உன்னுடைய பாவம் வானத்திற்கும், பூமிக்கும் இடைப்பட்ட அளவாக இருந்தாலும் அல்லாஹ் உன்னை நிச்சயம் மன்னிப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். மனம் வெம்பி அழுது கொண்டே இருக்கும் நிலையில் அவர் உயிர் பிரிகிறது. அவருடைய ஜனாஸாவை தூக்கிக் கொண்டு போகும் போது அண்ணல் அவர்கள் தங்கள் குதி கால்களைத் தூக்கிக் கொண்டு நடப்பதைப் பார்த்து உமர் (ரலி) அவர்கள் 'யா ரசூலுல்லாஹ் நடப்பதற்கு விசாலமாக இடம் இருக்கும் பொழுது ஏன் இவ்வாறு நடக்கிறீர்கள்?' என்று வியப்புடன் வினவுகிறார்கள்.

    'ஓ உமரே, தஹ்லபாவின் நல்லடக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான வானவர்கள் வந்துள்ளார்கள். அதனால் என் கால் பாதிக்க இடம் இல்லாமல் இவ்வாறு நடக்கிறேன்' என்று பதில் அளித்தார்கள்.

    எப்படிப்பட்ட இறையச்சம் தஹ்லபாவுடையது. அவர் தெரிந்து பாவம் எதுவும் செய்யவில்லை. பார்க்கக் கூடாததை தற்செயலாக கண்கள் பார்த்ததற்கே இறைவனின் தண்டனைக்கு பயந்து உயிரையே விட்ட அவரின் இறையச்சம் மகத்தானது. இது போன்ற இறையச்சம் நம்மிடம் உள்ளதா? யாரும் இல்லையென்ற தைரியத்தில் தவறான ஒளிப்பதிவுகளை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் எந்தவித கூச்சமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, பெரியவர்களும் பார்த்து ரசிக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    தவறு செய்வது மனிதர்களின் இயல்பு என்று கூறலாம். ஆனால், தவறு செய்து, உடனடியாக அதை உணர்ந்து இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான், அவர்களை மன்னித்தும் விடுகிறான்.

    செய்த தவறுகளுக்கு எல்லா நிலைகளிலும் மன்னிப்பு கேட்கக் கூடியவர்களாக இருப்போம்! எல்லா விதமான பாவங்களில் இருந்தும் விலகி இருந்து நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு பெறுவோமாக. நாம் தனிமையில் இருக்கும் போது நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தோடு, மெய் நடுங்கி கண்ணீர் விட்டு இரு கரம் ஏந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால், நிச்சயமாக நமது பாவங்கள் மன்னிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்!

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், கானத்தூர், சென்னை.

    • நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்.
    • உளத்தூய்மை குறித்தும் இந்தக் குர்ஆன் பேசுகிறது.

    மனிதனை நேர்வழிப்படுத்தி, இந்தப்பூமியில் அவன் எவ்வாறு வாழ வேண்டும், மறுமை வெற்றியை எவ்வாறு அடைவது என்பது குறித்து அழகிய முறையில் வழிகாட்டும் சிறந்த வேதம் திருக்குர்ஆன் மட்டுமே.

    அரபி மொழியில் இந்த நூல் இருந்தாலும் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற ஒரு நூலைக் கொண்டு வாருங்கள் என்று அந்தக் குர் ஆனே சவால் விடுகிறது. அல்லது அந்த நூலில் எங்கேனும் ஒரு தவறையேனும் கண்டுபிடித்து விடுங்கள் என்றுகூட அறைகூவல் விடுகிறது. இந்த சவாலை சந்திக்கத்தான் யாராலும் முடியவில்லை. காரணம்- இது மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்டதல்ல, உண்மையில் இது இறைவேதமாகும்.

    திருக்குர்ஆனை விமர்சிப்பவர்களைப்பற்றி இறைவன் இவ்வாறு கூறுகின்றான்: "அவர்கள் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்". (திருக்குர்ஆன் 4:82)

    எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், திருக்குர் ஆன் விடுக்கும் ஒரே சவால் இதுதான்:

    "நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்). (திருக்குர்ஆன் 2:23)

    நூறு விழுக்காடு அது இறைவேதம் என்பதை திருக்குர்ஆன் (12:1) குறிப்பிடும் போது, "வேதக் கட்டளையாகும் இது" என்கிறது. மிக உயரிய லட்சியத்தின்பாலும் நேரான பாதையின்பாலும் மனித சமூகத்தை வழிநடத்துவதற்காக இந்தக் குர்ஆனை அல்லாஹ் இறக்கியருளினான், இதை விளக்கும் வசனங்களைக் காண்போம்.....

    "இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்". (திருக்குர்ஆன் 41:2).

    "நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கின்றார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் முகம்மது நபிக்கு அல்லாஹ் இறக்கியருளிய அதே முறையில் அதன் வசனங்களை இன்றும் மக்கள் ஓதுகின்றார்கள். செவிமடுக்கின்றார்கள். மனப்பாடம் செய்கிறார்கள். புரிந்துகொள்கின்றார்கள்". (திருக்குர்ஆன் 41:41).

    "அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது". (திருக்குர்ஆன் 5:15)

    "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் (திருக்குர்ஆன்) மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்". (திருக்குர்ஆன் 5:16).

    "உண்மையில் இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது. மேலும், இதனை ஏற்றுக்கொண்டு நற்செயல் செய்பவர்களுக்குத் திண்ணமாகப் பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி அறிவிக்கிறது". (திருக்குர்ஆன் 17:9)

    இந்தக் குர்ஆனுக்கு என்று நோக்கங்களும் இலக்குகளும் இருப்பதைப் போன்றே; சரியான கொள்கை, இறைத்தன்மை, தூதுத்துவம், நற்கூலி, மனிதன் குறித்த யதார்த்தம், அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கண்ணியம், அவனது உரிமைகள் குறித்த முக்கியத்துவம், அதிலும் குறிப்பாக பலவீனமானவர்களின் உரிமைகள் குறித்தெல்லாம் குர்ஆன் விரிவாகப் பேசுகிறது. மனிதன் இறைத் தொடர்பில் இருக்க வேண்டும், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அனைத்து விவகாரங்களிலும் அவனையே அஞ்ச வேண்டும் என்றும் இந்தக் குர்ஆன் தூண்டுகிறது.

    உளத்தூய்மை குறித்தும் இந்தக் குர்ஆன் பேசுகிறது. உள்ளம் தூய்மை பெற்றுவிட்டால் சமூகம் தூய்மை பெறும் என்றும், உள்ளம் மாசடைந்தால் சமூகம் மாசடையும் என்றும் இந்தக் குர்ஆன் கூறுகிறது.

    சமூகத்தின் கருவாக இருக்கும் குடும்ப அமைப்பு குறித்தும் குடும்பத்தின் தூணாக விளங்கும் பெண்ணிடம் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

    அவ்வாறே சீர்திருத்தம் செய்யும் சமூக உருவாக்கம் குறித்தும் வலியுறுத்துகிறது. மனித குலத்திற்கான அமானிதம் அந்த சமூகத்திடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சாட்சியாளர்களாகத் திகழ வேண்டும். காரணம், ஏனைய மக்களுக்கு பயன் தருவதற்காகவும் அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும் மட்டுமே இவர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஒருவருக்கொருவர் அறிமுகமாகுங்கள், வெறுக்காதீர்கள், சகிப்புத்தன்மையைக் கடைபிடியுங்கள், `இனவாதம் வேண்டாம், நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள், தீமையிலும், பகைமையிலும் பரஸ்பரம் உதவாதீர்கள் என்றும் மனித உலகை இந்தக் குர்ஆன் அழைக்கிறது.

    மனப்பாடம் செய்தல், ஓதுதல், செவிமடுத்தல், வசனங்களை சிந்தித்தல், யோசித்தல், விளங்குதல், விளக்குதல் போன்றவற்றின் மூலம் இந்தக் குர்ஆனுடன் சிறந்த முறையில் நடந்துகொள்வது நம் மீது கடமையாகும். குர்ஆன் கூறும் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் அது இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையைத்தரும்.

    அப்ராஸ் அமீன், திருச்சி.

    ×