என் மலர்
நீங்கள் தேடியது "போகோ ஹரம்"
நைஜீரியா நாட்டில் உள்ள கிராமம் ஒன்றை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜர்:
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோ ஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். போகோ ஹரம் அமைப்பை தவிர ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் அங்கு தாக்குதல் சம்வங்களை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவின் காசாமுல்லா மாகாணத்தில் கிறிஸ்துவர்கள் கணிசமாக வசிக்கும் மைலாரி எனும் கிராமத்தை சூழ்ந்து அதிகாலை நேரத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக அருகே உள்ள முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோ ஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். போகோ ஹரம் அமைப்பை தவிர ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் அங்கு தாக்குதல் சம்வங்களை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவின் காசாமுல்லா மாகாணத்தில் கிறிஸ்துவர்கள் கணிசமாக வசிக்கும் மைலாரி எனும் கிராமத்தை சூழ்ந்து அதிகாலை நேரத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக அருகே உள்ள முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்ரிக்க நாடான சத் நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் #BokoHaram #Chad
என்டிஜமீனா:
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009-ம் ஆண்டில் ஊடுருவிய போகோ ஹரம் தீவிரவாதிகள் அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். போகோ ஹரம் பயங்கரவாதிகளின் தாக்குதலால் அப்பகுதியில் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போகோ ஹரம் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான நைஜீரியா நாட்டின் ராணுவ முயற்சியில் சத், கேமரூன் மற்றும் நைஜர் ஆகியவை இணைந்துள்ளன.
இந்நிலையில், சத் நாட்டின் தபவுவா நகரின் தெற்கே உள்ள கிராமம் ஒன்றில் போகோ ஹரம் அமைப்பினை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதி மக்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் இருந்த பெண்கள் சிலரையும் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் சத் ராணுவ சோதனை சாவடி பகுதியில் நடந்த தாக்குதலில், 4 அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். #BokoHaram #Chad
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009-ம் ஆண்டில் ஊடுருவிய போகோ ஹரம் தீவிரவாதிகள் அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். போகோ ஹரம் பயங்கரவாதிகளின் தாக்குதலால் அப்பகுதியில் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போகோ ஹரம் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான நைஜீரியா நாட்டின் ராணுவ முயற்சியில் சத், கேமரூன் மற்றும் நைஜர் ஆகியவை இணைந்துள்ளன.
இந்நிலையில், சத் நாட்டின் தபவுவா நகரின் தெற்கே உள்ள கிராமம் ஒன்றில் போகோ ஹரம் அமைப்பினை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதி மக்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் இருந்த பெண்கள் சிலரையும் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் சத் ராணுவ சோதனை சாவடி பகுதியில் நடந்த தாக்குதலில், 4 அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். #BokoHaram #Chad