என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரெண்டிங்"

    • லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் ‘டிரெண்டிங்’கில் இருக்கின்றன.
    • திருமணத்திற்கு தயாராகும் ‘டீன்-ஏஜ்’ பெண்களும், ‘லெஹங்கா’வை விரும்புகிறார்கள்.

    'லெஹங்கா அணிவது ஒரு கலை'… ஆரம்பமே உற்சாகமாக பேசினார் காஸ்டியூம் டிசைனர், அனாமிகா. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அனாமிகாவிற்கு, 52 வயதாகிறது. வட இந்தியாவின் பிரபல காஸ்டியூம் டிசைனராக இவர், லெஹங்கா உடைகளை வடிவமைப்பதிலும், தைப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட்.

    பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு, பெரும்பாலும் இவரே லெஹங்கா உடைகளை வடிவமைத்து கொடுப்பார். இவர், லெஹங்கா உடைகள் பற்றியும், அதை அணியும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    ''வட இந்தியாவில் பிரபலமான லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் 'டிரெண்டிங்'கில் இருக்கின்றன.

    சினிமா நட்சத்திரங்களை தாண்டி, திருமணத்திற்கு தயாராகும் 'டீன்-ஏஜ்' பெண்களும், 'லெஹங்கா'வை விரும்புகிறார்கள். தாலி கட்டும் நிகழ்வின்போது பட்டுப்புடவைகளையும், திருமண வரவேற்பிற்கு 'லெஹங்கா' உடைகளையும் அணியும் கலாசாரம், தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது'' என்றவர், லெஹங்கா நிற தேர்வில் கவனமாக இருக்க சொல்கிறார்.

    ''காலம் காலமாக தென்னிந்திய பட்டுப் புடவைகளுக்கு வட இந்திய பெண்களும், வட இந்திய லெஹங்காக்களுக்கு தென்னிந்திய பெண்களும் ஆசைப்படுவது புதிது இல்லை. ஆனால் எதை எப்படி அணிய வேண்டுமோ அதை அப்படிதான் அணிய வேண்டும்.

    எப்படி முகூர்த்தப் பட்டுப்புடவைகளில் 'பெய்ஜ்', 'பீச்', 'பேஸ்டல்' போன்ற நிறங்களில் அணியும்போது அவ்வளவு பிரைட் 'லுக்' கொடுக்காதோ அதேபோல் லெஹங்கா அணிவதிலும் சில விதிமுறைகள் இருக்கிறது.

    நம்மூர் பெண்கள் பெரும்பாலும் 'டஸ்கி', 'டார்க் பியூட்டிகள்'. அந்த பெண்கள் லெஹங்கா அணியும்போது நிறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிளிப்பச்சை, அடர்ந்த சிவப்பு, மெரூன் சிவப்பு பயன்படுத்தலாம். சிக்னல் லைட் சிவப்பு நிறத்தை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது.

    அதேபோல் அடர்ந்த பஞ்சு மிட்டாய் நிற 'பிங்க்' மாதிரியான ரேடியம், லேசர் லைட் நிறங்கள் அறவே கூடாது. கரும்பச்சையிலேயே கொஞ்சம் மங்கலான பச்சை, பிரவுன் நிறம் இவைகளையும் தவிர்ப்பது நல்லது'' என்னும் அனாமிகா, லெஹங்கா ஸ்டைலிங் குறித்து மேலும் விவரித்தார்.

    ''பொதுவாகவே தென்னிந்திய பெண்களுக்கு இடைப்பகுதி கொஞ்சம் நீளம் குறைவுதான். அதேபோல் பின்பக்கமும் கொஞ்சம் பருமனாக இருக்கும். அடிப்படையிலேயே புடவைக்கும், தாவணிக்குமான உடல்வாகு தென்னிந்தியப் பெண்களுக்கு உண்டு.

    மார்பு, இடைப்பகுதிகள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும். லெஹங்காவை அந்த அழகை 'ஹைலைட்' செய்யும் மாதிரியில் டிசைன் செய்து கொண்டால் அழகாக இருக்கும். உங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

    அடுத்ததாக லெஹங்கா அணிய வேண்டும். ஆனால் இடுப்பு அவ்வளவாக தெரியக்கூடாது என்பது தென்னிந்திய பெண்களின் விருப்பம். அந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு லெஹங்காவையே தாவணி ஸ்டைலில் போட்டுக்கொள்வதுதான்.

    அடுத்த தீர்வு இடைப்பகுதியில் கொஞ்சம் லேஸ் அல்லது வலை மாதிரியான துணி கொடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.

    சராரா ஸ்டைலில் லெஹங்கா அல்லது கிராண்ட் ஓவர் கோட் போலவும் தைக்கலாம்'' என்றவர், லெஹங்காவை தென்னிந்திய பெண்கள் மிக குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.

    ''வட இந்திய பெண்கள், ஒருமுறை வாங்கிய லெஹங்காவை குறைந்தது 20 நிகழ்ச்சிகளுக்காவது அணிவது உண்டு. ஆனால் தென்னிந்திய பெண்கள், வரவேற்பு நிகழ்ச்சியில் அணிவதோடு சரி, அதை ஓரங்கட்டிவிடுகிறார்கள். அதனாலேயே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் லெஹங்கா வேண்டாம் என கூறிவிடுகிறார்கள். ஒருமுறை பயன்படுத்த எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கோபப்படுகிறார்கள். அதிலும் முகூர்த்தங்களுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கூட நல்ல பட்டுப்புடவை கிடைத்துவிடும்.

    ஆனால் லெஹங்காக்களுக்கு ரூ.30 ஆயிரமாவது செலவழித்தால் தான் கிராண்ட் 'லுக்' கிடைக்கும். அப்படி செலவு செய்து வாங்கும், லெஹங்காக்களை குறைந்தது 10 விழாக்களுக்காவது அணிய பழகிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பெரியவர்களும், லெஹங்காக்களை ஆதரிப்பார்கள்'' என்றவர், லெஹங்கா உடை அணியும்போது செய்யக்கூடிய மேக்கப் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

    ''பாரம்பரிய புடவைக்கு உரிய மேக்கப் வேறு. லெஹங்காவிற்கு உரிய மேக்கப் வேறு. தென்னிந்திய புடவை என்றாலே 'பேபி பிங்க்' அல்லது 'ஸ்கின் டோன்' லிப்ஸ்டிக்குகளுடனான லைட் மேக்கப்தான் போட வேண்டும். லெஹங்கா என்றால் கொஞ்சம் இண்டோ-வெஸ்டர்ன் டார்க் நிற லிப்ஸ்டிக், மினுமினுக்கும் ஐ-ஷேடோஸ், பிளஷ், குளோ இப்படி எல்லாமே பளிச்சென்று மேக்கப் செய்யலாம். அப்போதுதான், லெஹங்காவிற்கு மேட்சாக இருக்கும்.

    அணிகலன்களை பொறுத்தவரை, லெஹங்காக்களுக்கு ஒரே ஒரு கிராண்ட் நெக்லெஸ் மற்றும் கிராண்ட் தோடு போதும்'' என்றவர், ''அடுத்த 10 வருடங்களில், சுடிதார் போலவே, லெஹங்காவும் தமிழகத்தில் சர்வ-சாதாரண உடையாக மாறியிருக்கும்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

    • நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
    • அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்தமிழ்திரை உலகில் முன்னணி கதாநாயகியான வலம் வரும் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

    அங்கு மின் விளக்கில் அலங்காரம் செய்யப்பட்ட மரத்தின் கீழ் இருவரும் இணைந்து நின்றபடி எடுத்த புகைப்படம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷிவனுடன் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை குட் டைம்ஸ் என்று பதிவிட்டு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகர்ந்துள்ளார்.

    பிறந்த நாள் நிகழ்ச்சியில், நயன்தாரா குழந்தைகள் கேக் சாப்பிடும் வீடியோவையும் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
    • இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.

    அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார்.
    • மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

    மதராச பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து ஐ, தெறி, மிஷன் சாப்டர்-1 உள்பட தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.

    இவர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவருக்கு 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார். அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

    சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட எமிஜாக்சன் தனது காதலர் எட்வெஸ்ட் விக், மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வெஸ்ட் விக்குடன் நடந்த நிச்சயதார்த்த விருந்து புகைப்படங்களை வெளியிட்டார்.

     

    தற்போது மகனுடன் ஜாலியாக மரத்தில் ஏறி விளையாடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமிஜாக்சன். புகைப்படத்தோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதிய வீட்டில் இது எங்களின் முதல் வசந்தகாலம் என பதிவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
    • அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

    அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

    கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

     

    கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.

    இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் பிரத்தியேக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இப்படம் மிக நீண்ட காலமாக தயாரிப்பு பணிகளிலும். பின் பல்வேறு சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. பின் மீண்டும் சமீபமாக படப்பிடிப்பு பணிகள் வேகமெடுக்க ஆரம்ப்பித்தன.

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் பிரத்தியேக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது என் அறிவிப்பை தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஜித்து மாதவன் 2023 ஆம் ஆண்டு ரோமான்சம் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சௌபின் ஷாஹிர் , அர்ஜுன் அசோகன் , சஜின் கோபு போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். 70 கோடி வசூலை அள்ளியது இத்திரைப்படம்.

    இந்நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் ஆவேஷம் படத்தை இயக்கியுள்ளார் இதில் ஃபஹத் ஃபாசில், சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகவுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மாறுப்பட்ட வேடமாக காணப்படுகிறார். படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியான நிலையில் இப்பொழுது அப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலின் பெயர் இல்லுமினாட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது

    பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா தி ரைஸ்'படம் வெற்றி பெற்றதையடுத்து. உலகளவில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் 373 கோடி ரூபாய் வசூளித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த பாகம் புஷ்பா- 2 தி ரூல் படம் தற்போது உருவாகி வருகிறது.

    இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுகுமார் இதனை இயக்கி வருகிறார். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்து வருகிறது.

    இப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) 11.07 மணியளவில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    படப் போஸ்டரில் அல்லு அர்ஜூன் ஒரு சிம்மாசனத்தின் மீது கோடாரியுடன் உட்கார்ந்து இருப்பது போல் காட்சிகள் அமைந்து இருக்கிறது. அவருக்கு பின்னால் ஒரு கூட்டம் கையில் ஆயுதத்துடன் இருக்கிறார்கள். இந்தப் போஸ்டர் இப்பொழுது ரசிகர்களிடம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிக்ப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்
    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. நேற்று வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளருடன் நகைச்சுவையான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

    இன்று கோட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியாகிவுள்ளது. அதில் விஜய் ஜாலியாக ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஓட்டியபடி செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
    • தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய்  ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது  படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.. 

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய்  சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோமாளி படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்
    • உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது

    2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை, 'வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் தயாரித்தது.

    "கோமாளி"யை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இது பிரதீப் ரங்கனாதனுக்கு ஹிட் படமாக அமைந்தது.

    அடுத்தடுத்து கொடுத்த வெற்றி படங்களின் மூலம், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.

    அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வீடியோவை ஏ.ஜி.எஸ் நிறுவனம் நேற்று யூ டியூபில் வெளியிட்டது.

    உண்மையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இடையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோ இது. பிரதீப் ரங்கநாதன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்துவிற்கு ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடங்களுக்கு முன் கல்லூரியில் அஸ்வத் மாரிமுத்து எடுத்த குறும் படத்தில் பிரதீப் ரங்கனாதன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×