என் மலர்
நீங்கள் தேடியது "ஆண்ட்ராய்ட்"
- ஸ்கிரீன் ஷாட்டுடன், செப்டோ, இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ? என கேட்டுக் கொண்டுள்ளார்.
- பதிவின் கீழ் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண் வினிதா சிங். இவர் ஹார்ஸ் பவர் என்கிற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
இவர் லிங்கிடுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, செப்டோ டெலிவரி ஆப்பில் காண்பிக்கும் விலைகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களுக்கு இடையே கடுமையான விலை வேறுபாட்டை காட்டுகிறது. இதனை தெளிவுப்படுத்தும்படியும் அவர் செப்டோவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த இரண்டு ஸ்கிரீன் ஷாட்களில், செப்டோ செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் தோராயமாக 500-600 கிராம் குடை மிளகாயின் விலை ரூ.21 ஆகவும், ஐபோன் செயலியில் அதே இடை கொண்ட குடை மிளகாயின் விலை ரூ.107ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த ஸ்கிரீன் ஷாட்டுடன், செப்டோ, இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ? என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில், முதல் ஸ்கிரீன் ஷாட்: ஆண்ட்ராய்டு.
இரண்டாவது ஸ்கிரீன் ஷாட்: ஐபோன். இரண்டு ஸ்கிரீன் ஷாட்களும் இன்று காலை ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டன. ஆனால் ஏன் இவ்வளவு வித்தியாசம், செப்டோ?"
"அதே குடைமிளகாய், அதே விற்பனையாளர், அதே இடம் மற்றும் அதே நேரம்" என்ற தலைப்புடன் ஒரு பயனர் அதைப் பகிர்ந்த நிலையில், இந்தப் பதிவு எக்ஸ் பக்கத்தில் வைரலானது.
இந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் செப்டோ தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.


- இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.
- OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படும்.
ஆண்ட்ராய்டு - Android 12, 12 12L, 13, 14, 15 ஆகிய வெர்ஷன்களை கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோருக்கு அரசு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் உபயோக சாதனங்களிலும் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.
மேற்கூறிய வெர்ஷன்களை பயன்படுத்தும் ஆண்டிராய்டு சாதனங்களில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு கோளாறுகளால் தனிநபர் தகவல்களைத் திருடி தன்னிச்சையாக arbitrary code குறியீடுகளைச் செயல்படுத்தி denial of service (DoS) கட்டமைப்பு மூலம் சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

CERT-In இன்கூற்றுப்படி அனைத்து OEMகள் மற்றும் ஆண்ட்ராய்டின் பயனர்களுக்கு இந்த ஆபத்தானது ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிராய்டில் உள்ள, சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள்,கர்னல் எல்டிஎஸ், இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியாடெக், குவால்காம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளால் இந்த பாதுகாப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கான தீர்வாக, பயனர்கள், தங்கள் சாதனங்களில் பொருத்தமான அப்டேட்களை மேற்கொள்ள CERT-In அறிவுறுத்தியுள்ளது. CERT-In என்பது மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு பணிகளைக் கையாள்வதற்கான அமைப்பாகும்.
