என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திரப்பிரதேசம்"

    • இங்கு, ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.
    • இதை நினைவு கூறும் விதத்தில் “ராமலீலா” என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்ளில் ராமாயண அடிப்படையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.

    ராமபிரான் இலங்கைக்கு போருக்கு சென்றபோது பேராற்றலும், பலமும் வேண்டி அம்பிக்கையை பூஜித்தார்.

    இதை நினைவு கூறும் விதத்தில் "ராமலீலா" என்ற பெயரில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    விஜயதசமி அன்று ராவணனின் உருவத்தை பத்து தலைகளுடன் செய்து அதை நெருப்பிட்டு எரிக்கிறார்கள்.

    அந்த பொம்மைக்குள் பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை நிரப்பி மைதானங்களில் வைத்து கொளுத்தி விடுவார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு "ராவண தகனம்" என்று பெயர்.

    மனதில் உள்ள தீய எண்ணங்களை நீங்கி நல்லருள் பெற வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    லக்னோ:

    உத்திரப்பிரதேச மாநிலம் ராம்நகர் பகுதியில் 17 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த முஷிர் மற்றும் இப்ராகிம் ஆகிய 2 குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    போலீசாரை கண்ட முஷிர் மற்றும் இப்ராகிம் அங்கிருந்து தப்பிப்பதற்காக போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து எஸ்.பி. ஸ்ரீவசதாவ் கூறுகையில், 'அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். தற்காப்புக்காக நாங்கள் சுட்டதில் முஷிர் மற்றும் இப்ராகிம் கொல்லப்பட்டனர்' என தெரிவித்துள்ளார்.

    முஷிர் மற்றும் இப்ராகிமை பிடித்துக்கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×