என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிலையன்ஸ் ஜியோ"

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • தீபாவளி பண்டிகை துவங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக தசரா பண்டிகை காலத்தில் நாட்டின் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பீட்டா வெளியீடு நடைபெற்று வந்தது.

    பீட்டா சோதனை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் வெளியிடப்பட்டது. பின்னர் தீராவளி சமயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாராவில் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட்டன. எனினும், ஜியோ பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த "ஜியோ வெல்கம் ஆஃபர்"-க்கான இன்வைட் பெற காத்திருக்க வேண்டும். இவ்வாறு இன்வைட் செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.

    முந்தைய அறிவிப்புகளை போன்றே இம்முறையும், வெளியீட்டுக்கு எந்த விதமான கட்டணங்களும் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை. "ஜியோ ட்ரூ 5ஜி சேவை இந்த இரு தொழில்நுட்ப நகரங்களில், இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, மனித குலத்திற்கு சில அதிநவீன தொழில்நுட்பங்களின் உண்மை திறனை உணர செய்யும்." என ஜியோ வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ட்ரூ 5ஜி சேவைகளின் வெளியீடு இந்தியாவில் படிப்படியாக நடைபெறும் என ஜியோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது ஜியோ ட்ரூ 5ஜி சேவையில் பயனர்கள் 500 Mbps முதல் அதிகபட்சம் 1 Gbps வேகத்தில் இணைய சேவைகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து உள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் சாதனங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் என எட்டு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கைாயளர்கள் அதிவேக 5ஜி நெட்வொர்கில் இணைந்து கொள்ள முடியும். எனினும், இதற்கு மைஜியோ செயலியில் இன்வைட் பெற்று இருப்பது அவசியம் ஆகும்.

    டிசம்பர் 2023-க்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது. ஜியோ பயனர்கள் தங்களின் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். புதிய தலைமுறை 5ஜி சேவைகளை பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிறப்பு அறிமுக சலுகையை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு 5ஜி சேவையை 500Mbps முதல் 1Gbps வேகத்தில் பயன்படுத்த முடியும்.

    மைஜியோ செயலியில் 5ஜி-யை பயன்படுத்துவதற்கான நோட்டிபிகேஷன் வைத்திருப்பவர்கள், தங்களின் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    - முதலில் ஸ்மார்ட்போனின் "செட்டிங்ஸ்" செல்ல வேண்டும்

    - அடுத்து "மொபைல் நெட்வொர்க்" அல்லது இதே போன்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இனி ஜியோ சிம் ஆப்ஷனில் "பிரெஃபர்டு நெட்வொர்க் டைப்" ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இதில் 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற ஆப்ஷன்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதில் 5ஜி-யை தேர்வு செய்ய வேண்டும்.

    ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்-இல் 5ஜி நெட்வொர்க்-ஐ தேர்வு செய்ததும், ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 5ஜி தெரியும். இனி வழக்கம் போல் மொபைல் டேட்டாவில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.

    தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெற புது சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய 4ஜி சிம் கொண்டு புதிய நெட்வொர்க்கில் இணைய முடியும்.

    • இந்திய டெலிகாம் சந்தையில் புதிய தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி வெளியிடப்பட்டு வருகின்றன.
    • முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

    இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக வி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி வி எந்த தகவலையும் வழங்கவில்லை.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ அவ்வப்போது சலுகைகளை மாற்றி வருகிறது.
    • நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளிலும் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை முழுமையாக நீக்கிவிட்டது. அக்டோபர் மாதத்தில் இருந்தே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை நீக்க துவங்கியது. இதில் முதற்கட்டமாக ரூ. 499 மற்றும் ரூ. 601 சலுகைகள் நீக்கப்பட்டன.

    இதை அடுத்து இரு சலுகைகளில் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 1,499 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த இரு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இரு சலுகைகளும் ரிலையன்ஸ் ஜியோ வலைதளத்தில் காணப்படவில்லை. இவை மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் தளங்களிலும் பட்டியலிடப்படவிவல்லை.

    அந்த வகையில், இரு சலுகைகளும் சத்தமின்றி நீக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 399, ரூ. 419, ரூ. 499, ரூ. 583, ரூ. 601, ரூ. 783, ரூ. 799, ரூ. 1099 மற்றும் ரூ. 1199 விலை சலுகைகளை நீக்கியது. இவை அனைத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவுக்கு போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) தொடர்ந்து இந்த சேவைகள் அடங்கிய சலுகைகளை வழங்கும் நிலையில், ஜியோ ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தற்போதும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் சேவைகள் வழங்கும் ரிசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகின்றன.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான வியாகாம் 18 கைப்பற்றி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப முடியாது என்பதால், ஜியோ இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது.

    • 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது.
    • ஜியோ நிறுவனம் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தார் பயணம் செய்ய திட்டமிடுவோருக்கு இந்த சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா பயணம் செய்ய இருக்கும் கால்பந்து ரசிகர்களுக்காக இந்த ரோமிங் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு ஏற்ப சிறந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளை வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து வாங்கிடலாம்.

    புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளின் விலை ரூ. 1,122 என துவங்குகிறது. ஜியோ ரூ. 1122 ரோமிங் சலுகை ஐந்து நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும், டேட்டாவுக்கான கட்டணம் மாறிவிடும்.

    ஜியோ ரூ. 1599 சலுகை 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 150 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், இன்கமிங் அழைப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புகளுக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறிவிடும்.

    ஜியோ ரூ. 3 ஆயிரத்து 999 ரோமிங் சலுகையில், 250 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான வாய்ஸ் கால், 250 நிமிடங்கள் இன்கமிங் அழைப்புகள், 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 5 ஆயிரத்து 122 சலுகையில் 5 ஜிபி டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    ரூ. 6 ஆயிரத்து 799 ஜியோ ரோமிங் சலுகையில் 500 நிமிடங்களுக்கு உள்ளூர் அழைப்புகள், இந்தியாவுக்கான அழைப்புகள், 500 நிமிடங்களுக்கு இன்கமிங் அழைப்புகள், 5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட வைபை காலிங் நிறைவு பெற்றதும், அழைப்புக்கான கட்டணம் ரூ. 1 ஆக மாறி விடும். 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • ஏர்டெல் வழங்கும் டேட்டா பேக் சலுகையின் விலை ரூ. 301 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய ஜியோ ரூ. 222 விலை சலுகையில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த சலுகையில் அழைப்புகளோ அல்லது வேலிடிட்டி போன்ற பலன்களோ இடம்பெறவில்லை. புதிய கால்பந்து டேட்டா பேக் பிரீபெயிட் சலுகை பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில், இந்த சலுகையை பெறும் முன் ஏற்கனவே ஒரு சலுகையில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய ரூ. 222 சலுகையை ரிலையன்ஸ் ஜியோ "Football World Cup Data Pack" என அழைக்கிறது. எனினும், இந்த சலுகை உலக கோப்பை கால்பந்து தொடர் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து வழங்கப்படும் என்றே தெரிகிறது. எதுவாயினும், இந்த சலுகையை தேர்வு செய்வோர் ஏற்கனவே ரிசார்ஜ் செய்திருக்கும் முதன்மை சலுகை நிறைவு பெறும் போது இதற்கான வேலிடிட்டி முடிந்து விடும்.

    ஜியோ ரூ. 222 4ஜி டேட்டா பேக் விவரங்கள்:

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையில் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை விவரங்கள் மைஜியோ செயலியில் இடம்பெற்று இருக்கிறது. கூடுதல் டேட்டா பயனர் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையில் உள்ள அன்றாட டேட்டா தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணத்தை பொருத்தவரை புது சலுகையில் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 4.44 செலவாகிறது. இது போட்டி நிறுவனங்களை விட குறைவு ஆகும்.

    ஏர்டெல் நிறுவனம் 50 ஜிபி டேட்டாவை ரூ. 301 விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் ரூ. 6.02 ஆகும். ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையை ஆன்லைன் வலைதளம் அல்லது ரிடெயில் ஸ்டோர் சென்று நேரடியாகவும் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக ஜியோபுக் லேப்டாப் மாடல் மிக குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஜியோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் LS1654QB5 எனும் மாடல் நம்பருடன் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக பல்வேறு ஜியோபோன் மாடல்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலும் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது.

    தற்போது கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கும் லிஸ்டிங்கில் ஜியோ போன் 5ஜி மாடலின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 549 புள்ளிகளையும், மல்டி கோரில் 1661 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஜியோ 5ஜி போன் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ பிராசஸர், அட்ரினோ 619 GPU வழங்கப்படுகிறது.

    இதுதவிர firmware ஆக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ போன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், குறைந்தபட்சம் 32 ஜிபி மெமரி, 8MP செல்ஃபி கேமரா, 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், வைபை, ப்ளூடூத் 5.1, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பிரகதிஒஎஸ் கஸ்டம் ஸ்கின் வழங்கப்படும் என தெரிகிறது.

    புது ஸ்மார்ட்போன் தவிர, சமீபத்தில் தான் ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 222 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருந்தது. இந்த சலுகை உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. இதில் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் சேர்க்கப்படவில்லை.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை பீட்டா டெஸ்டிங் செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃப்ரின் கீழ் இன்வைட் செய்யப்படும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிடும் பீட்டா டெஸ்டிங்கை ரிலையன்ஸ் ஜியோ துவங்கியது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் ஐஒஎஸ் 16.2 ஒஎஸ்-ஐ வெளியிட்டது. இந்த அப்டேட் ஐபோன் 12 சீரிஸ் மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. இதில் ஐபோன் SE 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது. தற்போது 5ஜி சப்போர்ட் கொண்ட ஐபோன் வைத்திருப்பவர்கள் ஜியோ வெல்கம் ஆஃபரில் இணைந்து கொண்டு இலவமாக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறலாம்.

    இதற்கு பயனர்கள் முதலில் ஐபோனில் ஐஒஎஸ் 16.2 இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பின் ஐபோன் செட்டிங்ஸ்-இல் 5ஜி-யை தேர்வு செய்தால் 5ஜி நெட்வொர்க்-ஐ பயன்படுத்த முடியும்.

    ஐபோனின் செட்டிங்ஸ் -- மொபைல் டேட்டா -- வாய்ஸ் & டேட்டா ஆப்ஷன்களில் 5ஜி ஆட்டோ மற்றும் 5ஜி Standalone ON ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் செட்டிங்ஸ் -- பேட்டரி -- லோ பவர் மோட்-ஐ ஆஃப் செய்ய வேண்டும்.

    தற்போது குஜராத், பூனே, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, மும்மை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன. டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ ஏற்கனவே அறிவித்து விட்டது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இரண்டு புது சலுகைகளும் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 899 மற்றும் ரூ. 349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரு புதிய ஜியோ சலுகைகளும் மைஜியோ செயலி, ஜியோ வலைதளம் மற்றும் இதர மூன்றாம் தரப்பு வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

    புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜியோ சலுகைகளில் அதிகபட்சம் 90 நாட்களுக்கான வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 2.5 ஜிபி டேட்டா மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகை தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதில் வேலிடிட்டி காலம் முழுக்க 75 ஜிபி டேட்டா கிடைக்கும்.

    இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதுதவிர அறிமுக சலுகையாக 5ஜி டேட்டாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 899 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்,தினமும் 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 349 சலுகை போன்றே ரூ. 899 சலுகையிலும் ஜியோ அறிமுக சலுகை பொருந்தும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை நாடு முழுக்க 100 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

    • ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ளூடூத் டிராகிங் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோடேக் என்று அழைக்கப்படும் புதிய சாதனம் பெயருக்கு ஏற்றார்போல் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக்ஸ் சாதனத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஜியோடேக் கொண்டு தொலைந்து போகும் பொபருட்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

    அனைவரும் அறிந்ததை போன்றே ஜியோடேக் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும். இனி டேக்-ஐ பொருளில் கீழே விழாத அளவுக்கு பத்திரமாக வைத்துவிட வேண்டும். ஜியோடேக் ஒட்டுமொத்த எடை 9.5 கிராம்கள் தான்.

    ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது ஜியோடேக் தொலைந்து போனதை ஜியோதிங்ஸ் செயலி மூலம் குறிப்பிட முடியும். இவ்வாறு செய்தபின் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் ஜியோ டிராக்கரை காணாமல் போன கடைசி லொகேஷனில் தேடிக் கொண்டே இருக்கும். ஜியேடேக் கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக பிளாக் செய்யப்பட்டு விடும்.

    ஜியோடேக் அம்சங்கள்:

    ஜியோடேக்-இல் CR2032 மாற்றக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கான பேக்கப் வழங்கும்.

    ஜியோடேக் ரேன்ஜ் கட்டிடங்களுக்குள் 20 மீட்டர்களும், வெளியில் 50 மீட்டர்கள் ஆகும். ஜியோடேக் ப்ளூடூத் 5.1 மூலம் இணைப்பை வழங்குகிறது.

    ஜியோடேக் கொண்டு காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

    ஜியோடேக்-ஐ இரண்டு முறை தட்டினாலே மொபைல் போனை கண்டறிய முடியும். போன் சைலண்ட் மோடில் இருந்தாலும், ரிங் ஆகும்.

    விலை விவரங்கள்:

    ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஜியோடேக் விலை ரூ. 749 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்டேக் ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரத்து 490 ஆகும்.

    ஜியோடேக் வாங்குவோருக்கு கூடுதலாக பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிள் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஜியோடேக்-ஐ தங்களது பொருட்களில் இணைத்துக் கொள்ளலாம். 

    • ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • இந்த மொபைலில் ஜியோ சினிமா ஆப் கொண்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்கலாம்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் போன் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது. இந்த பிரான்டிங்கில் ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க 250 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களை சென்றடைய ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    ஜியோ பாரத் போன் ஸ்மார்ட் ஃபீச்சர் போன் ஆகும். இதில் இண்டர்நெட் பயன்படுத்துவதோடு, யுபிஐ பேமன்ட் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

     

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய ஜியோ பாரத் போனின் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 4ஜி ஸ்மார்ட்போன் ஃபீச்சர் போன் மாடல் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ரிடெயில் தவிர இதர பிரான்டுகளும் ஜியோ பாரத் பிளாட்ஃபார்மில் இணைந்து ஜியோ பாரத் போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. ஜியோ பாரத் போன்களின் முதல் பத்து லட்சம் யூனிட்களுக்கான பீட்டா டெஸ்டிங் ஜூலை 7-ம் தேதி துவங்க இருக்கிறது.

    ரிசார்ஜ் சலுகை விவரங்கள்:

    ரிலையன்ஸ் ஜியோ பாரத் சலுகைகளின் விலை ரூ. 123 முதல் துவங்குகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோ பாரத் வருடாந்திர சலுகையின் விலை ரூ. 1234 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜியோ பாரத் போன் அம்சங்கள்:

    ஜியோ பாரத் போனின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த போன் வழக்கமான ஃபீச்சர் போன்றே காட்சியளிக்கிறது. இதில் சிறிய ஸ்கிரீன், கீபோர்டு மற்றும் ஏராளமான ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.

    இந்த மொபைல் கொண்டு யுபிஐ பேமன்ட் செய்ய முடியும். இதற்கு ஜியோ பே செயலியை பயன்படுத்த வேண்டும். இத்துடன் ஜியோ சினிமா ஆப் கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

    ஜியோ பாரத் போனுடன் ஜியோ சாவன் ஆப் சந்தா வழங்கப்படுகிறது. இதில் சுமார் எட்டு கோடிக்கும் அதிக பாடல்கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர எப்எம் ரேடியோ, டார்ச்லைட் போன்ற அம்சங்களும் உள்ளன.

    • ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது.
    • டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 19 மற்றும் ரூ. 29 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் பயனர்களுக்கு கூடுதல் டேட்டாவினை வழங்குகிறது. இவை முறையே 1.5 ஜிபி மற்றும் 2.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    இரு சலுகைகளுக்கும் எவ்வித வேலிடிட்டியும் இல்லை. எனினும், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகை நிறைவடையும் போது, இதற்கான வேலிடிட்டி நிறைவுக்கு வந்துவிடும். இந்த ஆட்-ஆன் டேட்டா பேக் சலுகையில் கிடைக்கும் டேட்டா, ஏற்கனவே உள்ள சலுகையில் வழங்கப்படும் டேட்டா தீர்ந்தால் தான் பயன்படுத்தப்படும்.

     

    ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவற்றை ரிசார்ஜ் செய்த வரிசையில் தான் பயன்படுத்த முடியும். முதலில் ரிசார்ஜ் செய்த வவுச்சர் தீர்ந்த பிறகு தான், அடுத்த வவுச்சரை பயன்படுத்தலாம். டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.

    புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இரண்டு சலுகைகள் தவிர ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ரூ. 15, ரூ. 25, ரூ. 61, ரூ. 222 மற்றும் ரூ. 121 விலைகளில் ஆட்-ஆன் சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றில் முறையே 1 ஜிபி, 2 ஜிபி, 6 ஜிபி, 50 ஜிபி மற்றும் 12 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகலும் ஜியோ வலைதளம் மற்றும் ஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    ×