என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு சட்டசபை"
- சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.
- வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.
இதைத் தொடர்ந்து 2025-26 வேளாண் பட்ஜெட் கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், சபாநாயகர் மீது அ.தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடைபெறுகிறது.
- நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
- 2025-26 பட்ஜெட் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார்.
மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார். தமிழ்நாடு பட்ஜெட் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்..
மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள்:
ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1 சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும்.
மகளிருக்கு 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் முனைவோர் கடன் வழங்கப்படும்.
பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்க 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் உரிமை தொகைக்கு ரூ.8,597 கோடி வழங்கப்படும். சமூக நலன் மகளிர் உரிமை தொகைக்கு ரூ.8,597 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்திற்கு மானியமாக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கருப்பைவாய் புற்று நோயை தடுக்க 14 வயது சிறுமிகள் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் செயல் படுத்தப்படும். இதற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்:
அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2000 கோடியில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
சமக்ரசிக்சா திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக மாணவர்களின் கல்வியில் ஒரு துளிகூடபாதிப்பு இருக்காது.
அண்ணா பல்லைக்கழகத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் சார்ந்த புதிய பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படும். திறன்மிகு வகுப்பறை, நூலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பை ஏற்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.550 கோடி ஒதுக்கப்படும். உயர்க்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் தேர்ச்சி பெறுவதை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பள்ளிப்பாடத்தில் சதுரங்கத்தை சேர்த்து உடற்கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் குன்னூர், நத்தம், சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர் உள்ளிட்ட 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
மருத்துவத் துறை முக்கிய அறிவிப்புகள்:
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறைக்கு ரூ.21,906 கோடி நிதி ஒதுக்கீடு.
நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் புற்று நோய், இருதய நோய் சோதனை மேற்கொள்ள ரூ.40 கோடி ஒதுக்கீடு.
புற்று நோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகளை வாங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்று நோய் மருத்துமனையை தரம் உயர்த்த ரூ.120 கோடி ஒதுக்கப்படும்.
தொழிற்துறை முக்கிய அறிவிப்புகள்:
புதிய 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.152 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
செமி கண்டக்டர் உயர்திறன் தொழில் மையம் ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்படும்.
ஒசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும். விருது நகரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.
மதுரை, மேலூர், கடலூரில் காலணி தொழிற்பூங்கா ரூ.250 கோடியில் அமைக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கரில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
தொழில் முதலீடு ஊக்கு விப்பு துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.
10 லட்சம் சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்க ளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்படும்.
விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்கப் படும்.
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,918 கோடி ஒதுக்கப்படும்.
நீர்வளம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:
கோவை, திருச்சி, மதுரை சேலம், நெல்லையில் துணை திறன்மிகு மையங்கள் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த நீர் மேம்பாட்டு திட்டம் ரூ.2 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.
வெள்ள நீரை சேமிக்கும் வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில் ரூ.350 கோடியில் 3010 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
நீர்வளத் துறைக்கு ரூ.9,460 கோடி ஒதுக்கப்படும்.
திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரன்பட்டினம், சாமியார்பேட்டை, கீழ்புதுப்பட்டு கடற்கரைக்கு நதி நீலக் கொடி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதர முக்கிய அறிவிப்புகள்:
தமிழ்நாட்டில் வெள்ளி மலை, ஆழியாறு பகுதிகளில் ரூ.11,721 கோடி மதிப்பீட்டில் புதிதாக 2 புனல்மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கப்படும்.
வேட்டை பறவை வாழிடங்களை பாதுகாக்க ரூ.1 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து சென்னையில் அறிவியல் மையம் ரூ.100 கோடியில் அமைக்கப்படும்.
சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையம் உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.
ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் தற்சார்பு தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
அரசு அலுவலர்களின் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டு 15 நாட்களாக நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சம் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பண பலன் பெறலாம்.
- எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- உதய குமார் தர்மலிங்கம் என்ற தமிழர் வடிவமைத்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 2025-26 பட்ஜெட் லோகோ நேற்று வெளியிடப்பட்டது. வீடியோ வடிவில் வெளியிடப்பட்ட லோகோவில் "ரூ" என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவில் பட்ஜெட் லோகோவாக "ரூ" இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வீடியோவில் "ரூ" நீக்கப்பட்டு இந்திய ரூபாயை குறிக்கும் "₹" சின்னம் இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில், இந்திய ரூபாயை குறிக்கும் "₹" என்ற சின்னத்தை வடிவமைத்தவர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த "₹" ரூபாய் சின்னத்தை உதய குமார் தர்மலிங்கம் என்ற தமிழர் வடிவமைத்தார்.
தற்போது உதய குமார் தர்மலிங்கம் ஐ.ஐ.டி. கவுகாத்தியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை என். தர்மலங்கம் அரசியல் பின்னணி கொண்டவர் ஆவார். மேலும், இவர்தமிழ்நாட்டின் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இந்திய ரூபாய் சின்னம் சர்வதேச அளவில் இந்தியாவை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
ஐ.ஐ.டி. பாம்பேயில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள உதய குமார் இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஒருவர் ஆவார். எனினும், மத்திய அரசு உதயகுமார் வடிவமைத்த லோகோ தேர்வு செய்யப்பட்டது. இதற்காக மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் போட்டி நடத்தப்பட்டது.
- தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
- தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார்.
மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார்.
2021-ம் ஆண்டு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்புள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
- தமிழ்நாடு பட்ஜெட் சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடு.
தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பாண்டி பஜார் சாலை, டைடல் பார்க் சந்திப்பு, கிண்டி பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் 100 பகுதிகளில் பட்ஜெட் நேரலை செய்யப்பட இருக்கிறது.

மேலும், பழம்பெரும் அரசியல்வாதியான ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ராமசாமி படையாச்சி, தமிழகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும், திண்டிவனம் மக்களவை தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #TNAssembly
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:-
இன்று, ஜுன் 5, “உலக சுற்றுச்சூழல் தினம்”. சமுதாயம் நலமாக வாழவும், வளமுள்ள நாடு உருவாகவும் இன்றியமையாததாக விளங்குவது சுற்றுச்சூழல். இத்தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் உறுதி எடுப்போம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாக புரட்சிகரமான திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா நிறைவேற்றினார். அவர்கள் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு தொடர்ந்து அதனை பின்பற்றி வருகிறது.
“பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு” என்ற சிறப்புக் குழுவினை அம்மா அமைத்தார். இந்த வல்லுனர் குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருட்களை தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது.
இவற்றில், அன்றாடம் மக்களுக்கு தேவைப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் போன்ற பொருட்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும் போது, நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் நீரின் போக்கு மாறி, நீர் தேங்கி விடும் நிலை உருவாகிறது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம்.
இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது. எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது.
மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினை நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறு பாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்ய அம்மாவின் அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் தடை செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், 2019, ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அம்மாவின் தொலை நோக்குத் திட்டமான ‘மழை நீர் சேகரிப்புத் திட்டம்’, பொதுமக்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், வெற்றிகரமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் பெரிய அளவில் செறிவூட்டப்பட்டது.
அதே போன்று, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், அம்மாவின் அரசு செயல்படுத்த இருக்கும் “பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை” நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம் ! என்று கூறி அமர்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #EdappadiPalanisamy #WorldEnvironmentDay #noplasticfrom2019