search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 205025"

    சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் துணை ராணுவ முகாமின் அருகே இன்று மாலை அரசு பேருந்தை வழிமறித்த நக்சலைட்கள் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். #Naxalstorchbus #bustorchedinBijapur
    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், ஜகதல்பூரில் இருந்து பசகுடா பகுதியை நோக்கிச் சென்ற பேருந்தை பிஜப்பூர் மாவட்டம், திமாபூர் அருகே இன்று மாலை 6 மணியளவில் சுமார் 25 நக்சலைட்கள் வழிமறித்தனர்.

    பயணிகளை அனைவரையும் கீழே இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் துணை ராணுவப்படை முகாம் உள்ளது குறிப்பிடத்தக்கது. #Naxalstorchbus #bustorchedinBijapur
    சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டாபாட் மற்றும் டோக்கான்பல்லி இடையிலான காட்டுப்பகுதியில் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் நேற்றிரவில் இருந்து நக்சல் ஒழிப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, காட்டுக்குள் நக்சலைட்கள் ரோந்துப் படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த நக்சலைட்கள் தப்பியோடி விட்டனர்.
    சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டான். #Naxalcommanderkilled
    ராய்ப்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜாரமோங்கியா காட்டுப்பகுதியில் இன்று நக்சல் ஒழிப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சுமார் 30 நக்சலைட்கள் ரோந்துப் படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மோட்டி ஃபார்ஸா(28) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #tamilnews ##Naxalcommanderkilled
    ஒடிசா மாநிலத்தில் தலைக்கு 9 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 9 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். 

    இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஒடிசா மாநில அரசின் சார்பில்  தலைக்கு 9 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த  சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில நக்சல் ஒழிப்பு சிறப்புப் படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
    ×