என் மலர்
நீங்கள் தேடியது "கோட்"
- நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார்.
- நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார். விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.
நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
- தற்போது ’கிரிஷ் லைவ் இன் துபாய்’ என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.
- நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
பின்னணி பாடகரான கிரிஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர். நடிகை சங்கீதாவின் கணவன் ஆவார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களான வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, வேட்டைகாரன், வாரணம் ஆயிரம், என்றென்றும் புன்னகை, அயன் போன்ற படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியுள்ளார்.
தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.இந்நிலையில் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார்.
- "நமக்கு டஃப் காம்படிஷன் குடுப்பாங்க போலயே அமுதன் சார்" என்று இயக்குநர் அமுதனை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- காத்து கருப்பு கலை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்
இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற காத்து கருப்பு கலை. அவர் பதிவிடும் ரீல்ஸ்கள் பல லட்சகணக்கான வியூஸ்களை அள்ளும். இவர் சமீபத்தில் வெளியிட்ட சாமியாரை கலாய்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பிரபலமானது.
இந்நிலையில் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் படத்திற்கு "ரத்த பூமி" என தலைப்பு வைத்து இருக்கின்றனர். இப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா நேற்று நடைப்பெற்றது. படத்தின் இயக்குநர் பேசும் போது, காத்து கருப்பு கலை தான் அடுத்த தளபதி என்றும், ஆக்ஷன் ஹீராவாக வரும் அனைத்து தகுதிகளும் இவருக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய காத்து கருப்பு கலை "நான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகிட்டதுக்கு ஒரே ஒரு சீன் தான் காரணம். நான் என் கையால ஓடிகிட்டு இருக்குற ரயில நிறுத்துறன்' என்று மிக சீரியசாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு "நமக்கு டஃப் காம்படிஷன் குடுப்பாங்க போலயே அமுதன் சார்" என்று இயக்குநர் அமுதனை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் அமுதன் "நாம் ஒருபோதும் நமது இடத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உழைச்சிகிட்டே இருந்தா தான் இவங்களோட களத்துல இருக்க முடியும்…" என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.
- விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
- இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, பார்வதி நாயர் என்று நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் இப்படத்தின் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் வரும் மே மாதம் வெளியிடுவதாகவும், படத்தில் இன்னொரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
- விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
- நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிகிறது. விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்று முதுமை தோற்றமும் மற்றொன்று இளமை தோற்றம் ஆகும்.
நடிகர் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி என்று பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மே மாதம் படத்தை வெளியிடுவதற்காக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திரிஷா கோட் படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு நாட்கள் இப்படத்திற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்திற்கு அடுத்து நடிகை திரிஷா மீண்டும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது
- த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 'GOAT' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது.
இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.

அதைதொடர்ந்து விரைவில் மாஸ்கோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. விஜய்-யின் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது.
'GOAT' படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாகவும், வில்லனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதில் ஒரு முழு பாடலுக்கு விஜயும், பிரபுதேவாவும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள். 'GOAT'படம் ஒரு அறிவியல் புனை கதையை தழுவியதாக அமைகிறது.
- 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்
லியோ வெற்றியை அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். முதுமை தோற்றத்திலும், இளமைத் தோற்றத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.
பிரஷாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். படக்குழுவினர் தாய்லாந்து, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.
- விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.
லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். முதுமை தோற்றம், இளமைத் தோற்றம் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக, 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் நேற்று கேரளா சென்றார். கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.
நேற்று விஜய் ஏறிய காரில் மக்கள் அலை போல திரண்டு தங்கள் அன்பை பொழிந்தனர். விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.
விஜய் அனைவரிடமும் சிரித்தபடியே ரசிகர்களின் அன்பை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் கை அசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் இண்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் GOAT படத்தின் காட்சியை படமாக்கவுள்ளனர். ஸ்டேடியத்தை சுற்றி சி.எஸ்.கே. கிரிக்கெட் அணியின் போஸ்டர்களையும் தோனி பட போஸ்டர்கலையும் ஒட்டி இருக்கின்றனர் படக்குழுவினர். ஆதலால், படத்தில் தோனி கேமியோ ரோல் செய்வதாக தகவல் பரவி வருகிறது.
இருப்பினும், ஐ.பி.எல். தொடரில் கவனம் செலுத்தி வரும் தோனி, GOAT படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Perfect song & edit??️❤️?❤️? @actorvijay#TheGreastestOfAllTimepic.twitter.com/SZu8tkDFzY
— கலை? (@kalai_Samyuktha) March 19, 2024
The way he love & care his fans ?????#VIJAYStormHitsKerala #Thalapathy #TVKVijay #TheGreastestOfAllTime pic.twitter.com/Ltx6R7e7A3
— Aishu Thalapathy ?? (@VjAishuuu) March 19, 2024
- விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்
ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது.
இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றார்.அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.
இநிலையில் தற்போது விஜய்யின் 'கோட்' படப்பிடிப்புகேரளாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.ரசிகர்கள் மத்தியில் விஜய் மலையாளத்தில் பேசி அசத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
மேலும் அந்த குழந்தையிடம் 'அங்கிளுக்கு' ஒரு 'உம்மா' கொடுங்க என நடிகர் விஜய் கேட்பது போன்ற காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து உள்ளது.
கேரள குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சிய போது அந்த குழந்தையின் அம்மா, " அங்கிளுக்கு உம்மா ஒன்னு கொடு" என சொன்னதும் அந்த குழந்தை க்யூட்டாக விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் விஜய்.
- பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டு இருக்கும் படம் GOAT. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
தற்பொழுது படக்குழுவினர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்ட் ஸ்டேடியத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். கேரள படப்பிடிப்பை அடுத்து ரஷ்யாவின் தலை நகரமான மாஸ்கோ நகரத்தில் இறுதிக் கட்ட படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர்.
9 வருடங்களுக்கு பிறகு விஜய் கேரள மண்ணில் படப்பிடிபிற்காக காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கேரள விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்தே ரசிகர்கள் அவரின் காரை சூழ்ந்து அன்பை வெளிப்படுத்தினர். அவர் படப்பிடிப்புத்தளம் செல்லும் வரை அவர் காரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
நேற்று ரசிகர்களை காண சென்ற விஜையை காண்பதற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரண்டனர். பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். விஜய் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் மாற்றுதிறனாளி ரசிகருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் விஜய்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது
- இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார்
கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய் 4 நாட்கள் படப்பிடிப்புக்காக 9 வருடங்களுக்கு பிறகு கேரளா சென்றார்.
கேரளாவில் அவர் இறங்கியதில் இருந்து ரசிகர்கள் அவரை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் பின் தொடர்ந்த் வண்ணம் உள்ளனர்.
கிடைக்கும் நேரத்தில் எல்லாம் விஜய் ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்துக் கொண்டு இருக்கிறார்.
கேரள ரசிகர்கள் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலின் வாசலிலும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் மணிக்கணக்காக இரவு பகல் பாராமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று ரசிகரின் குழந்தையை விஜய் தூக்கி கொஞ்சும் வீடியோ வைரலானது, மாற்றுத்திறனாளி ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோவும் வைரலாகியது.
இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார். கிளம்பும் முன் கேரள ரசிகர்களை சந்தித்து பேசினார். அவரைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். அவர் ரசிகர்களுடன் பேசும் பொழுது தமிழ்நாடும் கேரளாவும் என் இரு கண்கள் மாதிரி என குறிப்பிட்டுள்ளார். பின் கேரள ரசிகர்கள் காட்டிய அன்புக்கு மிகவும் நன்றி என வணங்கி கூறினார்.
பின் அவர் ரசிகர்களை சந்திக்கும் பொழுது போது வழக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பட்டையை கிளப்பியது. லியோ பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள சில நாட்களுக்கு முன்பு கேரளா வந்த நடிகர் விஜய்-க்கு அம்மாநில ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் படப்பிடிப்பு தளம் மற்றும் விஜய் தங்கியிருக்கும் இடங்களில் தினந்தோரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.

ரசிகர்கள் வருகையை அடுத்து நடிகர் விஜய், அவர்களை சந்தித்து வந்தார். ரசிகர்கள் விஜய்க்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். மேலும் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், கேரள ரசிகர்களுக்காக நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மலையாளிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை எக்ஸ் பதிவில் இணைத்துள்ளார்.
இந்த பதிவில், "எனது சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள்! எல்லா மலையாளிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.