என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்டார்டிகா"

    • கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் இருக்கும்
    • இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும்

    உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அறியப்படும் A23a சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது.

    லண்டனில் உள்ள கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் சுமார் ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை பனிப்பாறை, 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்தது.

    அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2020 இல் இந்த பனிப்பாறை வடக்கு நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    தெற்குப் பெருங்கடலுக்குள் அண்டார்டிக் சர்க்கம்போலார் என்ற நீரோட்டத்தை பின்தொடர்ந்து இந்த பனிப்பாறை நகரும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நீரோட்டம் பனிப்பாறையை ஜார்ஜியாவின் தெற்குப் பகுதியை ஒட்டி உள்ள துணை அண்டார்டிக் தீவை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அங்கு வெப்பமான நீருடன் சந்திக்கும் A23a பனிப்பாறை இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    • வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாறை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் அதிகரிக்கும்.

    உலகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. வெப்பம் அதிகரிப்பு காரணமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடையும் நிலையில் உள்ளது.

    கடந்த 1986-ம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து பனிப்பாறை உடைந்து பிரிந்தது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதற்கு ஏ23ஏ என்று பெயரிடப்பட்டது. சில வாரங்கள் கடலில் இந்த பாறை நகர்ந்தது. அதன்பின் வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் உறைந்தது.

    இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கும் நகராமல் உறைந்து இருந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைய தொடங்கி உள்ளது. தற்போது மீண்டும் உடைந்து அந்த பாறை நகர தொடங்கி உள்ளது.

    இந்த பனிப்பாறை அடுத்த ஒரு மாதத்திற்குள் உடைந்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாறை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ23ஏ பனிப்பாறை இனி இவ்வளவு பெரிதாக நீடிக்க முடியாது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக மேலும் உடையும். இதன் காரணமாக கடலில் நீர் மட்டம் உயரும். இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் அதிகரிக்கும்.

    புமியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் உருகும் வேகம் முன்பு இருந்ததை விட மும்மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
    பாரிஸ் : 

    அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகிறது. தற்போது பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் 3 ட்ரில்லியன் டன் பனி உருகியுள்ளது. அதனால் கடல் மட்டம் உயருவதற்கும் கடற்கரையோர சமூகங்கள் பாதிக்கப்படுவதற்குமான ஆபத்து அதிகரித்துவருவதாக 84 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    உருகிய 3 ட்ரில்லியன் டன் பனியின், ஐந்தில் இருமடங்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் உருகியுள்ளது. இது உலக வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த விடுக்கப்பட்டுள்ள மற்றுமொறு எச்சரிக்கை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 20 ஆண்டுகளாக செயற்கைக்கோள் மூலம் அண்டார்டிகாவின் வெவ்வேறு 24 இடங்களில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் மூலம், 6 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பனி உருகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுளது. இதனால் 1992-ம் ஆண்டு முதல் கடல்நீர்மட்டம் 8 மில்லிமீட்டர் உயர்ந்துள்ளது. 

    கடந்த 2012-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 76 பில்லியன் டன் பனி உருகிவந்தது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 219 பில்லியன் என உருகும் பனியின் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள் வெளியிடும் வெப்பத்தின் அளவு இதே நிலையில் நீடிக்கும் பட்சத்தில் இந்த நூற்றாண்டு முடிவில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.

    அண்டார்டிகாவில் இருக்கின்ற மொத்த பனியும் உருகினால் கடல்மட்டத்தின் அளவு 60 மீட்டர்(210 அடி) வரை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×