search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டிப்பட்டி"

    ஆண்டிப்பட்டி அருகே பாலீஸ் போடுவதாக பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வட மாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சிவக்குமார். குடும்பத்துடன் ஆண்டிப்பட்டி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி பிரீத்தியிடம் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் நகையை பாலீஸ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். இதற்காக தனது வெள்ளி கொலுசு மற்றும் தாலி சங்கிலியை அவர்களிடம் பிரீத்தி கொடுத்துள்ளார்.

    நகை பாலீஸ்போட்டு அந்த வாலிபர்கள் அவரிடம் திருப்பி கொடுத்தனர். அப்போது தாலி சங்கிலி அறுந்த நிலையில் இருந்தது. இதனால் பிரீத்தி சத்தம் போட்டார்.

    2 வடமாநில வாலிபர்களும் நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி 2 பேரையும் மடக்கி பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சதீஷ்குமார்ஷா (வயது32), முல்முல்குமார் (22) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே பெற்றோர் கண்டித்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் 2-வது மகன் குமரேசன் (வயது 26). இவர் போதைக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    எனவே பெற்றோர் இவரை கண்டித்தனர். மனமுடைந்த குமரேசன் தற்கொலை செய்வது என தீர்மானித்தார். அதன்படி டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்தார். அதில் வி‌ஷத்தை கலந்து குடித்து குமரேசன் மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிக் கொண்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×