என் மலர்
நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா விவசாயிகள்"
மகாராஷ்டிரா விவசாயிகள் ஜூன் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டக் களத்தில் இறங்குகின்றனர். ஜூன் 10-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். #bharatbandh
மும்பை:
இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்துள்ளார். #MaharashtraFarmersstrike #bharatbandh