என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைதி"
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்ட சிறை தாலுகா அலுவலக சாலையில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் சோதனை பிரிவு குழுவினர் திண்டுக்கல் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 4 கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மற்றொரு கைதியிடம் சுமார் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உதவி சிறை அலுவலர் ராஜசேகர் அஜாக்கிரதையாக இருந்ததால் அவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் கைதிகளையும் எச்சரித்தனர்.
வேலூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன், திண்டுக்கல் சிறை துணை அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் சிறையில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் விதி மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் கைதிகள் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்