என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக தேர்தல்"

    • கர்நாடகத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜ.க. பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார். அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணிகளை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சித்த ராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் முதல் மந்திரி கனவில் இருந்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது. இரு தலைவர்களுமே தங்களுக்கு கிடைக்காத சி.எம். சீட்டுக்காக போராடி வருகிறார்கள்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களின் முக்கிய நோக்கம் அதிகாரமும், முதல் மந்திரி பதவியும் தான், கர்நாடக மக்களின் நலன் அல்ல என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை களமிறங்கியுள்ளது.

    அதேவேளை, கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அ.தி.மு.க பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது.

    இதை எதிர்த்து கர்நாடக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது. அ.தி.மு.க. பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் காந்திநகர் தொகுதியில் போட்டியிட தான் தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 17 துணை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த நான்கு சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்ய முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதர பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2பி பிரிவில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான பணிகளில் மாநில அரசு தற்போதைக்கு ஈடுபடாது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

     

    பிரிவு 1 மற்றும் பிரிவு 2-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அடங்கிய 17 துணை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையில் கர்நாடக அரசு மே 9 ஆம் தேதி வரை ஈடுபட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, "வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை இந்த விவகாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. நாங்கள் தான் உச்சநீதிமன்றத்தில், வழக்கை நீங்கள் முழுமையாக விசாரணை செய்யுங்கள். விசாரணை நிறைவுபெறும் வரை அதனை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறோம்," என்றார்.

    "இஸ்லாமியர்கள் இடையே- பிஞ்சார், டார்சி, சக்கர்பண்ட் உள்பட மொத்தம் 17 துணை சமூகங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு 1 மற்றும் 2ஏ கீழ் இருப்பவர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இன்னமும் இந்த பிரிவுகளில் உள்ளனர். நான்கு சதவீத இட ஒதுக்கீடு பெற்று வருவோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு பெறும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் யாருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை." என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். 

    • கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி ஓட்டலில் தோசை சுட்டார்.
    • அப்போது பிரியங்கா காந்தி, அதன் செய்முறையை கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் கலந்து கொள்ள கர்நாடகாவுக்கு வந்துள்ளார்.

    அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்நிலையில், சுற்றுப்பயணத்தின்போது மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரியங்கா காந்தி காலை உணவு சாப்பிட்டார். அப்போது இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்து வாங்கினார். அது நன்றாக இருந்தது எனக்கூறிய அவர், தோசை சுடுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன் என்றும் வெளியே காத்திருந்த நிருபர்களிடம் கூறியுள்ளார்.

    ஓட்டலின் சமையலறை பகுதிக்குச் சென்ற பிரியங்கா காந்தி, அவரே விரும்பி தோசையை கல்லில் வார்த்து, தோசை சுடும் முறையை கற்றுக்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    • பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பட்டீல் (வயது 68) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துர்விகால் களமிறங்கியுள்ளார். மேலும் இதே தொகுதியில் ஈஷப்பா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் தனது பெயரையும் ஈஷப்பா கவுடா பட்டீல் என மாற்றியுள்ளார். இவர் பிரதாப் கவுடா பட்டீல் போல் தோற்றத்தில் நெற்றியில் திருநீரு பூசி இருப்பதுடன் அவரை போல் மீசையும் வைத்துள்ளார்.

    பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரே தோற்றம் கொண்ட 2 வேட்பாளர்களால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
    • விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

    இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.

    உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

    விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

    ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

    அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.

    கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.

    மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

    • நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
    • பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் விஜயாப்புரா நகர தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால், காங்கிரஸ் சார்பில் அபிதுல் ஹமீது முஷ்ரிப், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் பத்தேனவாஸ் மகாபரி போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பத்தேனவாஸ் மகாபரி திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், விஜயாப்புரா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு அமைப்பு, நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லை. நான் பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

    நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் முழுக்க முழுக்க எனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.

    • கர்நாடக காங்கிரஸ் தலைவரின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தியது.
    • சோதனையின் போது வீட்டின் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் அசோக் குமார் ராயின் சகோதரர் சுப்ரமணிய ராயின் மைசூரு இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

    தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் சுப்ரமணிய ராயின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

     

    தேர்தல் நடத்தல் விதிகள் அமலில் உள்ளதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இதுவரை ரூ. 110 கோடியை அதிகாரிகள் ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 346 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 13 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    • ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.
    • வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாட்டிலேயே முதல் முறையாக 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதியில் இருந்து முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீடு தேடி வந்து வாக்கு சேகரிக்கும் தேர்தல் அதிகாரிகள் கொண்டு வரும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வாக்களித்து வருகிறார்கள்.

    வருகிற 6-ந் தேதி வரை வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 99 ஆயிரத்து 529 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர்.

    அவர்களிடம் இருந்து வாக்குகளை பெறும் பணிக்காக 250 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெற்றனர். நேற்று ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் சிக்கோடியை சேர்ந்த 103 வயது முதியவரான மகாதேவ மகாலிங்க மாலி என்பவர் வீட்டில் இருந்து வாக்களித்திருந்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றி அந்த முதியவருக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது 103 வயதிலும் வீட்டில் இருந்து ஓட்டளித்த அவரை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    அதுபோல் முதியவர் மகாதேவ மகாலிங்க மாலி, தன்னை போன்ற முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க அனுமதி வழங்கிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டையும், நன்றியையும் ராஜீவ்குமாரிடம் பகிர்ந்துகொண்டார். அத்துடன் இந்த நடைமுறை வருவதற்கு முன்பு தான் வீட்டில் இருந்து சிரமத்துடன் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தது பற்றியும், வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்?
    • வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மூத்த பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததை அடுத்து கேஎஸ் ஈஸ்வரப்பா இவ்வாறு செய்தார்.

    பஜ்ரங் தள் கட்சியை தேசப்பற்று கொண்ட அமைப்பு ஆகும், அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்? என்று கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கேஎஸ் ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையில் பொது மக்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிராக மதம் மற்றும் சாதி அடிப்படையில் வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

     

    "சட்டம் மற்றும் அரசியலமைப்பை புனிதமான ஒன்றாக நாங்கள் கருதுகிறோம். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் பஜ்ரங் தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி இதுபோன்ற அமைப்புகளை தடை செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுப்பபோம், " என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேஎஸ் ஈஸ்வரப்பா அது முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டார்.

    "ஒட்டுமொத்த ஒக்கலிகா சமூகமும் தனக்கு ஆதரவாக உள்ளது, இதனால் நான் தான் முதல்வராவேன் என்று டாக்டர் கே சிவகுமார் கூறுகிறார். பிற்படுத்தப்பட்டோர் சமூகம் தனக்கு ஆதவராக இருப்பதால், நான் முதல்வர் ஆவேன் என்று சித்தராமையா கூறுகிறார். இதில் இருந்தே இரு தலைவர்களும் சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடுவது அப்பட்டமாக தெரிகிறது," என்று கேஎஸ் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

    • பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார்.
    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார். பிரதமர் வாகன பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, அவருக்கு ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது..,

     

    "இதுபோன்ற அன்பை இதுவரை எங்கும் பார்த்ததில்லை. பெங்களூருவில் கிடைத்த வரவேற்புக்கு இணையில்லை. இன்று காலை நான் பொது மக்கள் தரிசனத்தை பெங்களூருவில் பெற்றேன். பெங்களூருவில் நான் பார்த்ததை வைத்து ஒன்றை தெரிந்து கொண்டேன்."

    "இந்த தேர்தலில் மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ அல்லது நம் வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. மாறாக இங்கு கர்நாடக மக்கள் தான் பாஜக வெற்றிக்காக போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தல் கட்டுப்பாடு முழுமையாக மக்கள் கையில் இருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது."

    "இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக பாகல்கோட் மக்களுக்கு மூன்று லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பகல்கோட்டை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்தமாக கான்கிரீட் வீடு பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட பலன்கள் பாகல்கோட் மக்களுக்கு சென்றடைந்துள்ளது," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது.
    • பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என முதல் மந்திரி தெரிவித்தார்.

    பெங்களூரு:

    முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

    கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். எங்கள் கட்சிக்கு அனைவரின் ஆசிர்வாதமும் உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதி. சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் தொலைக்காட்சி பேட்டியை பார்த்தேன். காங்கிரசில் எதுவும் சரியாக இல்லை என்பது தெரிகிறது.

    மக்களுக்கு ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் முயற்சி செய்துள்ளனர். இது போன்ற நாடகம் பா.ஜ.க.வில் நடக்காது. ஏனெனில் எங்கள் கட்சியில் ஒற்றுமை உள்ளது. எங்களுக்கு மக்களின் ஆதரவும் உள்ளது.

    மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயல்படுவது என்பது மிக முக்கியமானது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறேன். சிக்காவி தொகுதியில் எனது குடும்பத்தினருடன் வாக்களிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    ×