என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்"

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 சீரிசில் மூன்று ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழ் நாட்டின் கிருஷ்னகிரி மாவட்டத்தில் உள்ள பியூச்சர்பேக்டரி ஆலையில் இருந்து 1 லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வந்தது.

    தற்போது ஒரு லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய பாதி நேரமோ போதுமானது என ஒலா எலெக்ட்ரிக் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதும் இதற்கு காரணம் ஆகும்.

    பண்டிகை காலக்கட்டத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அதிக வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. அக்டோபர் 2022 மாதத்தில் மட்டும் ஒலா எலெக்ட்ரிக் வாகன விற்பனை 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர விற்பனை 60 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    மேலும் இந்தியாவில் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், ஒலா S1 ஏர் பெயரில் புது ஸ்கூட்டரை ஒலா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்து இருக்கிறது. ஒலா S1 சீரிசில் புது வேரியண்டாக இது அமைந்துள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. வினியோகம் ஏப்ரல் 2023 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அமேசான் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
    • கூட்டணியின் அங்கமாக ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அமேசான் தனது டெலிவரி பணிகளுக்காக பயன்படுத்த இருக்கிறது.

    அமேசான் இந்தியா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இடையே புது கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் படி அமேசான் இந்தியா நிறுவனம் டிவிஎஸ் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த இருக்கிறது.

    இந்திய சாலைகளில் 2025 வாக்கில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தம் மூலம் திட்டத்தை செயல்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. எனினும், டெலிவரிக்கு பயன்படுத்தப்பட இருக்கும் ஐகியூப் மாடல்களின் சரியான வேரியண்ட் எது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் அமேசான் நிறுவனம் எண்ட்ரி லெவல் ஐகியூப் மாடலை வாங்கலாம் என கூறப்படுகிறது. டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஸ்கூட்டரில் உள்ள எல்லா வசதிகளும் பயன்தராது. எனினும், இவ்வாறு செய்யும் போது ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்டவை கவலை அளிக்கும் பிரச்சினையாக இருக்கும்.

    இதனை எதிர்கொள்ள டிவிஎஸ் நிறுவனம் அமேசானுக்காக அதிக ரேன்ஜ் மற்றும் செயல்திறன் வழங்கும் ஐகியூப் வேரியண்டை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்க செய்யும் என்றே தெரிகிறது.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்த வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • கைதானவர்களிடம் இருந்து ஏராளமான மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கியதில் இருந்து ஏராளமான சர்ச்சைகளில் ஒலா எலெக்ட்ரிகி நிறுவனம் சிக்கித் தவிக்கிறது. வாகன முன்பதிவில் துவங்கி, வாகனங்களில் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் என ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை சுற்றி பரபரப்பு தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில், ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இம்முறை நடந்த பிரச்சினையில் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த டெல்லி சைபர் செல் பிரிவு அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் நாடு முழுக்க மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்து இருக்கிறது.

    பீகாரை சேர்ந்த ஒருவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க இந்த வலைதளத்தில் பணம் செலுத்தி இருக்கிறார். எனினும், அவருக்கு ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒலா எலெக்ட்ரிக் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி, மக்களை ஏமாற்றி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த மொபைல் நம்பரையும் கண்காணித்தனர். இதில் மோசடியில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெங்களூரை சேர்ந்த இரண்டு பேர் இந்த மோசடிக்கு தேவையான போலி வலைதளத்தை உருவாக்கி இருக்கின்றனர். போலி வலைதளத்தை நம்பி பலர் அதில் தங்களின் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    பின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களை கொண்டு பயனர்கள் ஒவ்வொருத்தருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக போலி வலைதளம் மட்டுமின்றி கால் செண்டர் ஒன்றும் நடத்தப்பட்டு இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க முயற்சித்த பயனர்கள் இந்த வலைதள விவரங்களை நம்பி அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை கட்டணமாக செலுத்தி உள்ளனர்.

    ஸ்கூட்டர் கட்டணம், போக்குவரத்து, காப்பீடு என பல்வேறு பெயர்களில் கட்டணம் செலுத்த வலியுறுத்தி, ஒவ்வொரு கட்டணத்தையும் தெளிவான ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் செய்ய இந்த மோசடி கும்பல் வலியுறுத்தி இருக்கிறது.

    "பாட்னாவில் போலி கால் செண்டர் நடத்தி வந்த கும்பலை கண்டுபிடித்து, இதுவரை 16 பேரை கைது செய்து இருக்கிறோம். இவர்களிடம் இருந்து 114 சிம் கார்டுகள், 60-க்கும் அதிக மொபைல் போன்கள், ஏழு லேப்டாப்கள், ரூ. 5 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் அடங்கிய 25 வங்கி கணக்குகளை மீட்டு இருக்கிறோம். இந்த மோசடியில் நாடு முழுக்க ஆயிரம் பேர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்," என டெல்லி வடக்கு பகுதிக்கான துணை போலீஸ் கமிஷனர் தேவேஷ் மஹ்லா தெரிவித்தார்.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
    • நாடு முழுக்க எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறக்கும் பணிகளில் ஒலா எலெக்ட்ரிக் தற்போது மும்முரம் காட்டி வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாட்டின் 11 நகரங்களில் 14 புதிய எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இவை வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட உள்ளன. பெங்களூருவில் மூன்று, பூனேவில் இரண்டு, ஆமதாபாத், டேராடூன், டெல்லி, ஐதராபாத், கோடா, போபால், நாக்பூர், ராஞ்சி மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் ஒன்று என்ற கணக்கில் புது எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    புதிய எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை சேர்க்கும் பட்சத்தில் தற்போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுக்க 50 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை இயக்கி வருகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 200-ஆக அதிகப்படுத்த ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    இந்த செண்டர்களின் மூலம் எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்கள் எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தை அனுபவிக்க செய்கின்றன. மேலும் இங்கு சென்று ஒலா S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் ரைடு செய்யலாம்.

    "ஒலா எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் எலெக்ட்ரிக் வாகன ப்ரியர்களுக்கு எங்களின் வாகனங்களை தொட்டு பார்த்து அனுபவித்தல், சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்வது, வாகனம் வாங்குவதற்கு முன்பும், பின்பும் எழும் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்வது என எல்லாவற்றுக்கும் ஏற்ற தளமாக விளங்குகின்றன," என்று ஒலா எலெக்ட்ரிக் நிறுவன மூத்த விளம்பர பிரிவு அலுவலர் அன்ஷுல் கந்தெல்வால் தெரிவித்தார்.

    "நாட்டில் ஆஃப்லைன் பிரிவில் எங்களின் கால்தடத்தை வேகமாக விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 200 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறக்க திட்டமிட்டு இருக்கிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • சிம்பில் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.
    • புதிய சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவு பற்றிய புது தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    சிம்பில் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது வாகனத்தின் உற்பத்தியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. ஜனவரி 19, 2023 முதல் சிம்பில் விஷன் 1.0 ஆலையில் இருந்து சிம்பில் ஒன் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கவுள்ளது.

    சமீபத்தில் தீன் சிம்பில் எனர்ஜி நிறுவனம் சுமார் 2 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் உற்பத்தி ஆலையை கட்டமைக்க துவங்கியது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி ஆலையை கட்டமைக்க சிம்பில் எனர்ஜி நிறுவனம் ரூ. 100 கோடிக்கும் அதிக தொகையை முதலீடாக செலவழித்து இருக்கிறது.

    "நாங்கள் திட்டமிடலில் இருந்து நிறைவேற்றுதல், ப்ரோடோடைப்பில் இருந்து உற்பத்திக்கு, கனவுகளில் இருந்து நிஜத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறுகிறோம்," என சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுகாஷ் ராஜ்குமார் தெரிவித்து இருக்கிறார்.

    இதுதவிர உற்பத்தியை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் சிம்பில் எனர்ஜி நிறுவனம் தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் மற்றொரு உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிக ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய முடியும். ஓசூரில் உள்ள முற்றிலும் புது ஆலையில் உற்பத்தி பணிகள் ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என சிம்பில் எனர்ஜி அறிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஏத்தர் 450X, ஒலா S1 சீரிஸ் மற்றும் இதர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக சிம்பில் எனர்ஜி உருவாக்கிய முதல் தயாரிப்பு சிம்பில் ஒன் என அழைக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள 4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4,5 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 105 கிமீ வேகத்திலும், முழு சார்ஜ் செய்தால் 236 கிமீ ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
    • இவற்றில் இரு ஸ்கூட்டர்களுக்கு ஒலா நிறுவனம் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவித்து இருந்த ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகையை நீட்டித்து இருக்கிறது. அந்த வகையில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி இந்த ஆண்டு இறுதிவரை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகை பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்து இருக்கிறது.

    இந்த சலுகையின் மூலம் ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ. 10 ஆயிரம் குறைந்த விலை, அதாவது ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும். சலுகையின்றி இந்த ஸ்கூட்டர் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சலுகை ஒலா S1 ப்ரோ மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    தள்ளுபடி மட்டுமின்றி மிக குறைந்த மாத தவணை முறை வசதி, முன்பணம் இன்றி வாங்கும் வசதி, குறைக்கப்பட்ட வட்டி, இதர கட்டணங்கள் முழுமையாக ரத்து, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகலுக்கு கூடுதல் தள்ளுபடி என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.

    சலுகை தவிர ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் 11 நகரங்களில் புதிதாக 14 எக்ஸ்பீரின்ஸ் செண்டர்களை துவங்கி இருக்கிறது. இவற்றில் மூன்று பெங்களூரு நகரிலும், பூனேவில் இரண்டு மற்றும் ஆமதாபாத், போபால், டேராடூன், டெல்லி, ஐதராபாத், கோடா, நாக்பூர், ராஞ்சி மற்றும் வதோதரா போன்ற பகுதிகளில் ஒன்று என்ற வீதத்தில் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 31 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்கூட்டரில் ரைடு மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் என ஏராளமான அம்சங்கள் உள்ளன.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது 2023 S1000RR மோட்டாகர்சைக்கிளுடன் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லாங் சைடு பேனல்கள், எல்இடி ஹெட்லைட், டிசைன் பிட்கள் உள்ளன. ஒற்றை பீஸ் இருக்கை, மஸ்குலர் பாடிவொர்க் கொண்டிருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் பீக் பவர் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்ர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. வழக்கமான சார்ஜர் மூலம் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 4 மணி 20 நிமிடங்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1 மணி 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திடலாம்.

    பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் கொண்டிருக்கஇறது. பிரேக்கிங்கிற்கு 265mm முன்புற சிஸ்ர், பின்புற டிஸ்க் 15 இன்ச் வீல்களில் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரின் முழன்புறம் 120 பின்புறம் 160 டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் நேவிகேஷன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீடு பற்றி பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    • லோன்சின் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மத்தியில் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    சீனாவை சேர்ந்த இருசக்கர வாகன பிராண்டு, லோன்சின் மோட்டார்சைக்கிள்ஸ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லோன்சின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரியல் 5T என அழைக்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் F 850 GS மற்றும் F 900 R மாடல்களுக்கான என்ஜின்களை லோன்சின் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது.

    புதிய லோன்சின் ரியல் 5T மாடல் தோற்றத்தில் ஸ்போர்ட் டிசைன் மற்றும் மேக்சி ஸ்கூட்டர் போன்று காட்சியளிக்கிறது. இதில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், ஸ்மோக்டு வைசர், பாடிவொர்க் முழுக்க ஷார்ப் கட், கிரீஸ் கொண்டிருக்கிறது. இதன் மத்தியில் வழக்கமான மேக்சி ஸ்கூட்டரில் உள்ளதை போன்ற ஸ்பைன் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த இ ஸ்கூட்டர் 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையானதாக இருக்கும்.

    இந்த ஸ்கூட்டரின் மத்தியில் எலெக்ட்ரிக் மோட்டார் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. இது 15 ஹெச்பி பவர் கொண்டிருக்கிறது. புதிய லோன்சின் ரியல் 5T மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இதனுடன் 1.84 கிலோவாட் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை இரண்டு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.

    எல்இடி இலுமினேஷன் கொண்டிருக்கும் ரியல் 5T மூன்று விதமான ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் வார்னிங் லைட்கள், சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் கியர் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ஆஃப்செட் ரியர் ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் சிங்கில் டிஸ்க், பின்புறம் டிரம் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    தற்போது லோன்சின் பிராண்டு சர்வதேச சந்தையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாடலின் இந்திய வெளியீட்டை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு அந்நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருந்தது.
    • தற்போது ஒலா S1 ஸ்கூட்டருக்கு புதிய கேஷ்பேக் சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று ஒலா S1 மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த சலுகைகளில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் நிலையில், கேஷ்பேக் சலுகை டிசம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 97 ஆயிரத்து 999 என மாறி விடும், அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இவை தவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் போது மிக குறைந்த மாத தவணை முறை வசதி, முன்பணம் இன்றி வாங்கும் முறை, குறைக்கப்பட்ட வட்டி, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மாத தவணைகளில் தள்ளுபடி, பிராசஸிங் கட்டணத்தில் முழு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சலுகைகள் மட்டுமின்றி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் மூவ் ஒஎஸ் 3 அப்டேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்க இருக்கிறது. தற்போது இந்த ஒஎஸ் பீட்டா முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இறுதி வெர்ஷன் OTA முறையில் வழங்கப்பட இருக்கிறது. புதிய மூவ் ஒஎஸ் 3.0 ஸ்கூட்டரை ஓட்டும் போது சவுண்ட்-டிராக், ஹில் ஹோல்டு, ரிஜெனரேடிவ் பிரேக்கிங் மற்றும் சில அம்சங்களை ஸ்கூட்டர்களில் வழங்க இருக்கிறது.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு இம்மாத இறுதி வரை அசத்தல் சலுகைகளை வழங்குகிறது.
    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கூடுதல் அம்சங்களை வழங்க தொடர்ந்து புது ஒஎஸ் அப்டேட்களை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் வழங்கி வருகிறது. மென்பொருள் அப்டேட்களின் மூலம் ஸ்கூட்டர்களின் செயல்திறன், ரேன்ஜ் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதோடு புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் புது அப்டேட் மூவ் ஒஎஸ் 3 ஆகும். இந்த அப்டேட் தீபாவளி சமயத்தில் வெளியாக இருந்த நிலையில், திடீரென வெளியீடு தாமதமானது.

    முன்னதாக மூவ் ஒஎஸ் 2.0 வெளியீடும் பலமுறை தாமதமானது. புதிய மூவ் ஒஎஸ் 3 ஒலா S1, S1 ஏர் மற்றும் S1 ப்ரோ என மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்கூட்டர்கள் வரிசையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. புதிய மூவ் ஒஎஸ் 3 ஸ்கூட்டர்களுக்கு 50 புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.

    இதில் ஹில் ஹோல்டு, மூட்ஸ், ரிஜென் வி2, பிராக்சிமிட்டி லாக், கீ ஷேரிங், காலிங், ஹைப்பர் சார்ஜிங் உள்ளிட்டவை ஒலா எலெக்ட்ரிக் ஏற்கனவே அறிவித்து தற்போது வழங்கி இருப்பவை ஆகும். புது அம்சங்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் ஸ்கூட்டரின் செயல்திறன் மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவைகளை மேம்படுத்தி இருப்பதாக ஒலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. இந்த அப்டேட் ஆக 4.5 நொடிகள் ஆகும்.

    புது அப்டேட்டை தொடர்ந்து ஒலா ஸ்கூட்டர்களை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இதோடு ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த ரேன்ஜ் இரண்டில் இருந்து அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை சிறப்பாக அதிகரித்து இருக்கிறது. இவை தவிர இந்த அப்டேட் ஸ்கூட்டரில் ஏராளமான அம்சங்களை வழங்கி இருக்கிறது.

    • கைனெடிக் நிறுவனத்தின் புதிய லூனா மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • இதற்காக இரு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    லூனா பிராண்டு இந்திய சந்தையில் ரி எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்முறை லூனா மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கைனெடிக் நிறுவனம் எலெக்ட்ரிக் லூனா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்காக இரு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. கைனெடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யுஷன்ஸ் சார்பில் இந்த ஸ்கூட்டர் வெளியிடப்பட இருக்கிறது. இதனை அசெம்பில் செய்யும் பணிகளை கைனெடிக் என்ஜினியரிங் லிமிடெட் மேற்கொள்ள இருக்கிறது. புது எலெக்ட்ரிக் வாகனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் நடைபெறும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் லூனா மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இது மொபெட் போன்ற மாடலாக இருக்கும் என்றும் இது குறைந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் லூனா பிராண்டு மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கியது.

    எனினும், இந்த மாடல் நிலை நிறுத்தப்பட்ட பிரிவு பெருமளவு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. அந்த வகையில் இந்த மாடலின் வெற்றி பெறுமா என்பது எதிர்கால நடவடிக்கைகளை பொருத்தே அமையும்.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க ஏத்தர் பல்வேறு விஷயங்களில் விலை குறைப்பு செய்திருப்பதாக தெரிகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜனவரி 7, 2023 அன்று கம்யுனிட்டி டே நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் புது வாகனத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி அதிக தகவல்கள் வெளியாகவில்லை. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தர் 450X மாடலின் குறைந்த விலை வெர்ஷனாகவோ அல்லது முற்றிலும் புது வெர்ஷனாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தற்போது ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் 450 பிளஸ் மற்றும் 450X என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களும் சற்றே அதிக விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏத்தர் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் மிக எளிய உகபரணங்கள், அதாவது டியுபுலர் ஸ்டீல் பயன்படுத்தப்படலாம்.

    சமீபத்தில் தான் ஏத்தர் நிறுவனம் புது வாகனத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. அதன்படி புது வாகனம் மேக்சி ஸ்கூட்டர் போன்று காட்சியளித்தது. சவுகரிய அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபிளாட் சீட் வழங்கப்படலாம். முந்தைய 450X மாடலில் ஸ்டெப்டு யூனிட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏத்தர் அறிமுகம் செய்யும் வாகனம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    அந்த வகையில், குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது முற்றிலும் புதிய ஸ்கூட்டர் தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 பிளஸ் அல்லது 450X மாடல்களின் புது நிறங்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இவை தவிர 450X சீரிஸ் 1 போன்றே புதிதாக லிமிடெட் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    Photo Courtesy: Autocarindia

    ×