search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்லி"

    • இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
    • இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.

    தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் அட்லி.
    • ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் அட்லி. அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார். நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 வெற்றி படங்களை இயக்கினார்.

    பின் சிறு இடைவேளைக்கு பின் கடந்த ஆண்டு பாலிவுட்டில் அட்லி களம் இறங்கினார் . ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியானது ஜவான் திரைப்படம், இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் உச்சத்தை தொட்டது. இதுவரை ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் கவனம்  அட்லியின் மீது திரும்பியுள்ளது. அடுத்ததாக அட்லி அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில்  தற்பொழுது மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

    நமக்கு மாபெரும் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒன்றாக ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என பலரின் ஆசையாக இருக்கும், பாலிவுட்டை எடுத்துக் கொண்டால் ஷாருக்கான், சல்மான் கான் என்ற போட்டி எப்பொழுதும் இருக்கும், கோலிவுட்டை எடுத்துக் கொண்டால் ரஜின் ,கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் இடையே இருக்கும்.

    ஆனால் இயக்குனர் அட்லி புதுவிதமாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானையும் , கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தையும் ஒன்றாக வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு ட்யுவல் ஹீரோ கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பான அதிகாரப்பூர்வ சந்திப்புகள் அடுத்த மாதம் நடக்கும் எனவும், இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படம் மட்டும் சாத்தியாக நடைப்பெற்றால், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்கள் சிதறடிக்கப்படும், இச்செய்தி ரசிகர்களிடையே மாபெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
    • ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

    இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார். இவர் பிரபல இந்தி இயக்குனர் டேவிட் தவானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    2010 ஆம் ஆண்டு இயக்குனர் கரன் ஜோஹருக்கு உதவி இயக்குனராக பணிப் புரிந்தார். 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பல வெற்றி படங்களில் நடித்த வருண் தவான் ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி வருண் தவான் அப்பா ஆக போகிறார் என்ற செய்தியை இணையத்தில் பதிவிட்டார் . நேற்று வருண் தவான் மற்றும் நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    வருண் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
    • ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் ஈவண்ட் கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து தெற்கே செல்லும் சொகுசு கிருயூஸ் கப்பலில் கோலாகலமாக நடந்தது.

    ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

    ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் ஈவண்ட் கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து தெற்கே செல்லும் சொகுசு கிருயூஸ் கப்பலில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துக் கொண்டனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் இத்தாலிய கடலோர கிராமமான போர்டோபினோவில் [Portofino] நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் விழாவில் கலந்துக்கொண்ட அட்லி மற்றும் சல்மான் கானின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லி, ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் ஈவண்டிற்கு ஃப்ரான்ஸ் செல்வதற்காக மும்பை ஏர்போர்டில் சில நாட்களுக்கு முன் வந்தார். அப்பொழுது அவரை தொடர்ந்து சல்மான் கானும் அவரது காரில் ஏர்போர்டிற்கு வந்தடைந்தார். அங்கிருந்த செக்கியூரிட்டி கார்டுகள் சல்மான் கான் முதலில் செல்ல வேண்டும் என இயக்குனர் அட்லியை காக்க வைத்தனர்.

    ஆனால் சல்மான் கான் , அட்லியை பார்த்து சிரித்துவிட்டு ஏர்போர்ட் செக்யூரிடிடம் அவர் என்னோடு தான் வருகிறார் என்று கூறி அட்லியை முன்னாடி செல்லும்படி கை அசைக்கிறார். அட்லி சிரித்துக் கொண்டே உள்ளே செல்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சல்மான் கான் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் `சிகாந்தர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.
    • கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.

    இந்தி திரையுலகிலும் தற்போது அறிமுகமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்  இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக அவர் நடித்த ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர இருக்கிறது. சினிமா மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டவர் கீர்த்தி சுரேஷ். உடற்பயிற்சி செய்வதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் கீர்த்திசுரேஷ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தலை கீழாக நின்று யோகாசனம் செய்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கும் பக்கத்தில் அவரின் நாய் குட்டி அழகாக நின்றுக் கொண்டு இருக்கிரது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது.
    • அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

    பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகரும் தீபிகா படுகோனே கணவருமான ரன்வீர் சிங், இயக்குனர் அட்லி, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மற்றும் மகன் ஆகியோர் குத்து நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அவர்கள் ஆடிய நடனத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை அதிதி ஷங்கர் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சய்யும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
    • விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

    அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

    ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

    இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

    ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

    இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

    அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறந்த நடிகைக்கான விருது ஜவான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.
    • ஜவான் படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

    2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகை விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

    இதே போன்று சிறந்த நடிகர் விருது ஜவான் படத்தில் நடித்த ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆக்ஷன் மற்றும் திரில்லிங் காட்சிகளை கொண்டிருந்தது. 

     


    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

    இந்த படத்தில் ஷாருக் கான், நயன்தாரா மட்டுமின்றி விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    • ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது.
    • இயக்குநர் அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு பாடல் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். இவர்கள் தங்களுடைய ஒருமித்த ஒத்துழைப்பால் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் வரலாற்றை தொடர்கிறார்கள்.

    பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'ஜவான்' திரைப்படத்தில் ஷாருக் கான் - தீபிகா படுகோன் இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். இவர்களின் தீவிர ஆதரவாளர்களை மகிழ்விக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் 'பட்டாசா..' எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    'ஜவான்' திரைப்படம் இந்திய திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்தெறிந்திருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

    • ஜவான் படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.
    • ஜவான் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

    பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லி இயக்கி இருக்கும் இந்த படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அட்லி, "என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணான் சொன்னாரு," என்று தெரிவித்தார்.

    செப்டம்பர் 7-ம் தேதி ரிலீசாக இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.

    • ஜவான் படம் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது.
    • ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஜவான் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் நேரில் கலந்து கொள்ளவில்லை. மாறாக வீடியோ மூலம் தோன்றி படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    அட்லி இயக்கி இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்து இருக்கும் ஜவான் படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

    • நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.
    • இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.


    ஷாருக்கான் - அட்லி

    அதில், அட்லி இயக்கும் ஜவான் படம் குறித்து அவர் பேசுகையில், " அட்லியின் படங்களை அனைவரும் பார்த்திருப்பார்கள். இது போன்ற படங்கள் நான் இதுவரை செய்யாத ஒன்று. நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நடிகனாக ஜவான் போன்ற படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    ×