என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாந்த்"

    • சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
    • திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.


    இந்நிலையில் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள `அந்தகன்' திரைப்படத்தின் குழுவிற்கு ஜூலை 24-ம் தேதி மிக பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது என்று படக்குழு கூறியுள்ளது. திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    • 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நாளை மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடப்போவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் , பிரசாத் மற்றும் பிரபு தேவா இடம் பெற்றுள்ளனர்.

    படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

    ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக பிரசாந்த் திகழ்ந்தார். பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாக்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

    தற்போது 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    நீண்ட நாட்களாக தள்ளிப்போன `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது..

    இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

    சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

    வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது கம் பேக் கொடுக்கும் வகையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    'அந்தகன்' படம் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 9-ந்தேதியே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 15-ந்தேதிக்கு தங்கலான், டிமாண்டி காலணி 2 வெளியாக உள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு அதற்கு முன்னரே 'அந்தகன்' படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வீடியோ வைரலான அளவுக்கு, பிரசாந்த் ‘ஹெல்மெட்' அணியவில்லையே... என்ற பேச்சும் வைரலானது.
    • கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன்.

    தமிழ் சினிமாவில் 90 களில் 'சாக்லேட் பாய்' ஆக வலம் வந்த நடிகர் பிரசாந்த், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 'அந்தகன்' என்ற படம் மூலமாக 2-வது இன்னிங்சில் நுழையவுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

    இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது. அதேவேளை பிரசாந்துக்கு வினையாகவும் அமைந்தது.

    காரணம், மோட்டார் சைக்கிளில் சுற்றியபடி பேட்டியளித்த நடிகர் பிரசாந்த், 'ஹெல்மெட்' அணியாதது தான். மேலும், பேட்டி கண்ட அந்த யூ-டியூப் சேனல் இளம்பெண்ணும் 'ஹெல்மெட்' அணியவில்லை. இதனால் வீடியோ வைரலான அளவுக்கு, பிரசாந்த் 'ஹெல்மெட்' அணியவில்லையே... என்ற பேச்சும் வைரலானது.

     

    நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாததையும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் காணலாம்.

    நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாததையும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் காணலாம்.

    இந்த வீடியோவை வைரலாக்கிய விவகாரம் பிடித்த இளைஞர்கள், ''நாங்களெல்லாம் ஹெல்மெட் போடாம போனா, துரத்தி பிடிக்கும் போலீசார், இதனை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை. இதை கேட்பார் இல்லையா...'' என்று கொந்தளித்தனர்.

    குறிப்பாக சென்னை போக்குவரத்து போலீசாரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், இந்த வீடியோவை 'டேக்' செய்து, நடவடிக்கை எடுக்குமாறு ஆதங்கப்பட்டனர்.

    கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தே அபராத வேட்டையில் இறங்கும் போலீசாருக்கு, லட்டு போல ஆதாரத்தை தந்தால் சும்மா விடுவார்களா... உடனடியாக மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' போடாமல் பயணித்த குற்றத்துக்காக நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    மேலும் தங்களை நோக்கி கேள்வி எழுப்பியோருக்கு பதில் அளிக்கும் விதமாக, பிரசாந்த் 'ஹெல்மெட்' போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய புகைப்படத்தையும், அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டனர்.

    வைரலாகும் என நினைத்த வீடியோ வினையாகி விட்டது, பிரசாந்த் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

    இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த் கூறியதாவது:

    கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு முழுக்க இலவசமாக ஹெல்மெட் வழங்கி இருக்கிறேன். நீங்களும் அந்த செய்தியை போட்டு இருக்கிறீர்கள்.

    நாகர்கோவில், திருச்சி, மதுரையில் ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். பாதுகாப்பாக ஓட்டுங்க, நிதானமாக ஓட்டுங்க என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

    இப்போது இந்த நிகழ்வு மூலமாக எனக்கு ஒன்மோர் பிளாட்பார்ம் கிடைத்து இருக்கிறது.

    தயவுசெய்து ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க. அது எனக்கில்லை உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் முக்கியம்.

    நீங்கள் வெளியே செல்லும்போது 5 நிமிடம் முன்பே கிளம்புங்கள். அவசரமாக வண்டி ஓட்டாதீர்கள்.

    உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஹெல்மெட் போடு ஓட்டுங்க. பாதுகாப்பாக இருங்க என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
    • ஹெல்மெட் அணியாமல் இர்பான் பைக் ஓட்டிய வீடியோன் வைரலானது.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வகையில், அண்மையில் ஹெல்மெட் அணியாமல் பிரபல யூடியூபர் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.

    அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "நடிகர் பிரஷாந்த் விட சக்தி வாய்ந்த youtuber இர்பான் தான். இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்" என்று விமர்சித்தனர்.

    இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது முறையான நம்பர் ப்ளேட் இல்லாதது உள்ளிட்டவைக்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது.

    இதனையடுத்து போக்குவரத்து போலீசார் நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

    விழாவில் தியாகராஜன் ,பிரசாந்த், சமுத்திரகனி, சிம்ரன், வனிதா விஜயகுமார், பெசன்ட் ரவி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சமுத்திரகனி பேசியதாவது:-

    நான் தியாகராஜனின் தீவிர ரசிகன். நான் தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த போதே மலையூர் மம்பட்டியான் படத்தை போட்டு பார்த்து ரசித்திருக்கிறேன்.

    அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு பயம் உண்டு. திடீரென நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தியாகராஜன் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று கூறினார்.

    ஏன் எதற்கு என்று கேட்பதற்குள் தியாகராஜனிடம் போனை கொடுத்து விட்டார். அவர் எடுத்ததும் நான் தியாகராஜன் பேசுகிறேன் சார் என்று கூறினார். அதைக் கேட்டதும் நான் உடனடியாக நேரில் வரட்டுமா என்றேன்.

    பின்னர் விஷயத்தை கூறி படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். உடனடியாக சம்மதித்து படத்தில் நடித்தேன்.

    அன்று முதல் பிரசாந்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ஐயா என்று தான் அழைத்துக் கொள்வோம்.

    படப்பிடிப்பில் ஒரு நாள் வனிதா விஜயகுமார் கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை சரமாரியாக திட்டினார். தாங்க முடியாமல் நான் தியாகராஜனிடம் வனிதா ஏன் என்னை இப்படி திட்டுகிறார்?என்று கூறினேன்.

    அவர் சிரித்துக் கொண்டே பதில் அளிக்கையில், நான் காட்சிக்காக கொஞ்சம் அவரை திட்டு என்றேன். அவர் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் எப்படியெல்லாம் பேச வேண்டுமோ அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார் என்று கூறினார்.

    இவ்வாறு சமுத்திரக்கனி கூறியதும் தியாகராஜன் உள்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

    இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த வனிதா விஜயகுமாரிடம் சமுத்திரக்கனியை திட்டும்போது யாரை மனதில் வைத்துக் கொண்டு திட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் அளித்த பதிலில், என் அப்பாவை மனதில் நினைத்துக் கொண்டேன். உடனடியாக என் மனதில் தோன்றியவற்றையெல்லாம் திட்டி தீர்த்து விட்டேன். என் தந்தையும் அந்த அளவுக்கு நடிப்போடு ஒன்றிப் போய் விடுவார். அவர்தான் என் முன்மாதிரி என்று கூறினார்.

    இந்த சம்பவத்தால் அந்தகன் பட விழா அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
    • படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று வெளியாகியது. பார்த்த மக்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்திற்கு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. சிம்ரன் மற்றும் ஊர்வசியின் நடிப்பு அபாரம்.

    அந்தாதூன் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தை சிறப்பாக அந்த உண்மை கதையின் சாயலை இழக்காமல் ரீமேக் செய்ததிற்கு படக்குழுவிற்கு பாராட்டுகள். படக்குழு இன்று காலை ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர்.

    அதன் பிறகு பிரசாந்த், சிம்ரன் மற்றும் படக்குழுவினர் கமலா திரையரங்கில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய பிரசாந்த் படத்தை காண வந்த அனைவருக்கும் நன்றி எனவும், படக்குழு மற்றும் நடிகை நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தன் அப்பாவும் படத்தின் இயக்குனரான தியாகராஜாவுக்கு நன்றி தெரிவித்தார்..

    எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் இருக்கும் நபர்களை அவரது குடும்பம் என்று சுட்டிக்காட்டினார். வரும் நாட்களில் திரைப்படம் வெகு மக்கள் வந்து பார்க்கும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது சினிமாத்துறைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

    அவர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அந்தகன் படம் வெளியானத்தை அடுத்து, சுதந்திர தினத்தன்று அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டர் வராதா? என்று நெட்டிசன்கள் இன்று மீம்ஸ்களை பறக்கவிட்டு வந்தனர்.

    ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போனாலும் சிறப்பு போஸ்டர் மட்டும் தவறாமல் விடும். இந்த சிறப்பு போஸ்டர்கள் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகின.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சிறப்பு போஸ்டரை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கோட் திரைப்படம் 3 மணிநேரம் ஓடும்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `கோட்' (Greatest of all time) திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், படம் ஓடும் நேரம் குறித்து நடிகர் பிரசாந்த், `கோட் படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம். கிட்டத்தட்ட மூன்று மணிநேர படம். இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் உள்ளது. இது முழு நீளப்படமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படாத வகையில் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

    மேலும் கோட் திரைப்படம் கர்நாடகா மற்றும் கேரளாவில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 7 மணிக்கு வெளியாகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
    • சுந்தர் சி பிறந்த நாளில் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

    இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியான படம் "வின்னர்." கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அதன் காமெடி காட்சிகளால் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக உள்ளது. இந்தப் படத்தில் வரும் வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.

    இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம் தான். இதுபற்றி இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், வின்னர் 2 குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு சமீபத்தில் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சமீபத்தில் முடிந்த இயக்குநர் சுந்தர் சி பிறந்த நாளில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வின்னர் பட கூட்டணி ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில், வின்னர் 2 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பலர் வின்னர் 2 திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 90-களின் காலக்கட்டத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகர் பிரசாந்த்.
    • இவர் நடித்து வெளியாகவுள்ள படம் அந்தகன்.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.

    பிரசாந்த்

    இந்நிலையில் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நடிகர் பிரசாந்த் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளதாக வாய்மொழி புகார் ஒன்றை சென்னை, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

    பிரசாந்த்

    இதனிடையே பிரஷாந்த் தரப்பில் இருந்து பொய் புகார் அளித்திருப்பதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது புகார் கொடுத்துள்ளார்கள். மேலும், இந்த இரு தரப்பு புகார் மனு மீதும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    ×