என் மலர்
நீங்கள் தேடியது "டி இமான்"
- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான்.
- இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

டி. இமான்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், இசையமைப்பாளர் இமான் புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். ஒரு நிமிடம் உள்ள இந்த பாடலின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இசையமைப்பாளர் டி.இமான் பல படங்களின் பணிகளில் பிசியாக இருக்கிறார்.
- இவர் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. இப்படி பல படங்களில் பிசியாக இருக்கும் டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

மாணவி அமுதா- டி.இமான்
இந்நிலையில், சேலம், கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். மொத்த குடும்பத்தையும் இழந்த அமுதா தன் படிப்பிற்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து விவரங்களை பகிருமாறு கேட்டுள்ளார். இந்த செயலைத் தொடந்து ரசிகர்கள் டி.இமானை பாராட்டி வருகின்றனர்.
- மாணவி அமுதா பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
- இவரது குடும்பம் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர்.
சேலம், கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். மொத்த குடும்பத்தையும் இழந்த அமுதா தன் படிப்பிற்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மாணவி அமுதாவிற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து விவரங்களை பகிருமாறு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- இப்படம் ஜூன் 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஜூன் 26-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில், 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவுபெற்றதையடுத்து இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் "கழுவேத்தி மூர்க்கனை" பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்
ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்.." என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் தற்போது இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுஷ்மிதா அன்புசெழியன், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், மனோபாலா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் சந்தானம் தொடங்கியுள்ளார். இதனை சந்தானம் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
With all your blessings, started dubbing for my next with @gopuram_films' ProdNo5 ??
— Santhanam (@iamsanthanam) October 14, 2023
Extremely happy to be associated with Prestigious @Gopuram_Cinemas Produced by G.N. Anbuchezhian sir!
Directed by @dirnanand, An @immancomposer Musical.#GNAnbuchezhian… pic.twitter.com/2fitU7ojag
- தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
- சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குழந்தைகளின் எதிர்காலம் தான்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி. இமான். இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக டி.இமான் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், "இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.

ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குழந்தைகளின் எதிர்காலம் தான்" என்று கூறினார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்', 'சீமராஜா', 'நம்ம வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட படங்களுக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணி இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான் ஐந்து பாடல்களை உருவாக்கியுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "வா'வென
வாய் பிளந்து
வரவேற்று
வாய் நனைய முத்தமிட்டு
இறுதிவரை இருக்க விரும்பி
இறுக அணைத்தாலும்…
திட்டமிட்டபடி
சட்டென விட்டு
வி ல கி
சென்றுவிடும்
சென்ற வினாடிகள் !!!
தும்பைப் பூவின் மீது
தூய்மையான
பனித்துளி படர்ந்து
தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்
பூப்பதுமுண்டு!
இசையை விட தூய்மையானது எது?
சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்
வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.
இம்மான் …. இமான்!
அபார ஞானமும்
அயராத உழைப்புமாய்
அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார்.இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.
மைனா'வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை.அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.
இனி…
இனிமை
இசையாய்…
Ok!
Tittle ?
அறிவிப்போம் விரைவில்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
வா'வென
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 24, 2023
வாய் பிளந்து
வரவேற்று
வாய் நனைய முத்தமிட்டு
இறுதிவரை இருக்க விரும்பி
இறுக அணைத்தாலும்…
திட்டமிட்டபடி
சட்டென விட்டு
வி ல கி
சென்றுவிடும்
சென்ற வினாடிகள் !!!
தும்பைப் பூவின் மீது
தூய்மையான
பனித்துளி படர்ந்து
தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
மெலோடியாய்… pic.twitter.com/HMxUHClRZ9
- இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
- இவர் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. இப்படி பல படங்களில் பிசியாக இருக்கும் டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், ஏழை சிறுமி ஒருவர் அப்பா குறித்து பாடும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது. இதை பார்த்த டி.இமான் சிறுமிக்கு உதவி செய்யும் நோக்கில் அவரது பெயர் மற்றும் தொடர்பு விவரம் கேட்டு கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது கமெண்டை வைரலாக்கி வருகின்றனர்.
இதற்கு முன்பு விபத்தில் மொத்த குடும்பத்தையும் இழந்த மாணவிக்கு டி.இமான் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
- இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். பல படங்களில் பிசியாக இருக்கும் டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.
சமீபத்தில் சிறுமி தர்ஷினி அப்பா குறித்து பாடும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது. இதை பார்த்த டி.இமான் சிறுமிக்கு உதவி செய்யும் நோக்கில் அவரது பெயர் மற்றும் தொடர்பு விவரம் கேட்டு கமெண்ட் செய்திருந்தார்.

டி.இமான்- தர்ஷினி
இந்நிலையில், டி. இமான், சிறுமி தர்ஷினியின் தந்தையை தொடர்பு கொண்டு சிறுமியின் குரல் வளத்தை பாராட்டியதோடு சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் இமானை சமூக வலைதளத்தில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
- இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை (First look) குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை (20.01.2024) வெளியிடுவார்" என்று குறிப்பிட்டு போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
- இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பயோஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு காவேமிக்அரி ஒளிப்பதிவு செய்ய ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என பார்த்திபன் அறிவித்திருந்தார். அதன்படி இப்படத்திற்கு 'TEENZ' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்திபன் என்றாலே வித்தியாசம் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
- பார்த்திபனின் டீன்ஸ் படம் விரைவில் வெளியாகிறது.
- இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.

இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் . ஒளிப்பதிவு பணிகளை காவ்மிக் ஆரி மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் முதல் முறையாக இணைந்துள்ளார். இமான் மற்றும் காவ்மிக் ஆரியின் சிறந்த படைப்புகளில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார்.
இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முந்தைய படைப்பான 'இரவின் நிழல்' தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில் அவரது புதிய படம் 'டீன்ஸ்' புதிய முத்திரையை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.