என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் வாகனம்"

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உள்ளது.
    • டாடா நெக்சான் EV சீரிஸ் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய விற்பனையில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் டியாகோ EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருக்கும் டாடா மோட்டார்ஸ், தனது வாகன உற்பத்தியை இருமடங்கு அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் 50 ஆயிரம் யூனிட்களை கடக்க இருக்கிறது.

    அந்த வகையில், அடுத்த சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபரத்தின் மூலம் பில்லியன் டாலர் வருவாய் எட்டி விடும். நெக்சான் மற்றும் டிகோர் EV மாடல்களின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆண்டிற்கு 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனிட்கள் வரை எட்டியிருக்கிறது. தற்போது 2024 நிதியாண்டு வாக்கில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த 12-இல் இருந்து 18 மாதங்களுக்குள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஒரு லட்சமாக அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவகதாக தகவல் வெளியாகி உள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை சீராக வைத்திருக்கும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் கோடிகளை வருவாயாக ஈட்ட முடியும்.

    இது மூன்று ஆண்டுகளுக்கு முன் கார் வியாபாரத்தில் இருந்து கிடைத்த வருவாய்க்கு இணையானது ஆகும். டியாகோ EV மாடலின் விலை அறிவிக்கப்பட்ட பத்தே நாட்களில், இந்த காரை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர். இதுதவிர 50 ஆயிரம் பேர் டியாகோ EV மீது விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 23 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆவர்.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
    • புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் ஹீரோ கூட்டணி அமைக்கிறது.

    இந்திய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் ஜீரோ நிறுவனம் பவர்டிரெயின்களை உருவாக்குகிறது. உற்பத்தி, உதிரிபாகங்கள் மற்றும் விளம்பர பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் மேற்கொள்ள இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக குழு ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 60 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 491 கோடியை முதலீடு செய்ய அனுமதி அளித்தது.

     

    எனினும், இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் வாகனங்கள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சர்வதேச வலைத்தளத்தில் ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மாடல்களை பட்டியலிட்டுள்ளது. இவற்றில் ரோட்ஸ்டர், ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் அட்வென்ச்சர் பிரிவு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இடம்பெற்றுள்ளன.

    இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வினியோகம் செய்யும் பணிகளை துவங்கிவிட்டது. இதுதவிர பொது சார்ஜிங் உள்கட்டமைப்புகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் சார்ஜிங் சேவைகள் பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் செயல்படுகிறது.

    தற்போது பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிட்டத்தட்ட 300 சார்ஜிங் பாயிண்ட்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு இருக்கிறது. 

    • மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
    • இந்திய பயணத்தின் போது தன்னுடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த பில் கேட்ஸ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.

    இருவரின் சந்திப்பின் போது குழுக்களும் உடனிருந்தனர். ஐடி மற்றும் வியாபாரம் கடந்து இருவரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பில் கேட்ஸ் இந்திய பயணத்தின் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் காட்சிகள் உள்ளன.

     

    இன்ஸ்டாகிராம் பதிவில், "புதுமைகளை படைப்பதில் இந்தியாவின் ஆசை எப்போதும் ஆச்சரியப்படுத்தாமல் இருந்தது இல்லை. நான் ஒரு எலெக்ட்ரிக் ரிக்ஷாவை ஓட்டினேன், அது 131 கிமீ (சுமார் 81 மைல்கள்) ரேன்ஜ் கொண்டிருப்பதோடு, அதிகபட்சம் நான்கு பேருடன் பயணம் செய்ய உகந்தது. போக்குவரத்து துறையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மஹிந்திரா போன்ற நிறுவனங்களை பார்ப்பது ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கிறது. " என குறிப்பிட்டுள்ளார்.

    இதே போன்று இருவரின் சந்திப்பு குறித்து ஆனந்த் மஹிந்திராவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "பில் கேட்ஸ்-ஐ மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. மேலும், வரவேற்கும் வகையில் எங்களது குழுக்கள் இணைந்து பேசிய விவகாரங்களில் ஐடி மட்டுமின்றி எந்த வியாபாரத்திலும் எப்படி ஒருங்கிணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதை சார்ந்தே இருந்தது. (தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த சந்திப்பு லாபகரமாக இருந்தது, எனக்கு அவர் கையொப்பம் இட்ட புத்தகம் இலவசமாக கிடைத்தது)," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • 2017 ஆம் ஆண்டு ஒகினவா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் முன்னணி இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒகினவா உற்பத்தி ஆலையில் இருந்து 2.5 லட்சமாவது வாகனம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் 2.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது.

    2015 ஆம் ஆண்டு இந்தியாவில் பணிகளை துவங்கிய ஒகினவா 2017 ஆண்டு சந்தையில் களமிறங்கி தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் ஒகினவா ரிட்ஜ் மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன்பின் ஒகினவா பிரைஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மாணியம் பெற்ற முதல் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் உள்ளது. ஒகினவா நிறுவனம் தற்போது ஐபிரைஸ் பிளஸ், ஐபிரைஸ் ப்ரோ, லைட் மற்றும் ஆர்30 போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 2020 வாக்கில் ஒகினவா நிறுவனம் இந்தியவின் முதல் கஸ்டமைசேஷன் வசசதி கொண்ட B2B எலெக்ட்ரிக் இருசக்கர வானத்தை 2020 வாக்கில் அறிமக செய்தது.

    2021 ஆண்டு இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த ஒகினவா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒகினவா கேலக்ஸி ஸ்டோர்களை திறந்தது. இந்திய சந்தையில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனம், விற்பனையில் இத்தனை இலக்கை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஒகினவா பெற்று இருக்கிறது.

    • இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.

    இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.

    ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் வாகன போர்டலில் இணையும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று தெலுங்கானா மற்றும் லக்ஷதீப் பகுதிகளுக்கான விவரங்கள் மத்திய அரசு முனையத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

     

    மத்திய அரசின் வாகன பதிவு முனையத்தில் உள்ள விவரங்களின் படி 2021 ஆம் ஆண்டு 3 லட்சத்து 29 ஆயிரத்து 808 யூனிட்கள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரத்து 679 யூனிட்கள் பதிவானது. இந்த வரிசையில், இந்த ஆண்டு துவங்கிய முதல் மூன்று மாதங்களிலேயே சுமார் 2.78 லட்சம் யூனிட்கள் பதிவாகி இருக்கின்றன.

    நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி மக்களைவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்களில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வெளியீடு பற்றிய அதிகராப்பூர்வ தகவல்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி ஹோண்டா நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக ஆக்டிவா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது வரும் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலின் பேட்டரியை கழற்றும் வசதி வழங்கப்படாது என்றே தெரிகிறது.

     

    இதுதவிர K4BA எனும் குறியீட்டு பெயர் கொண்ட எலெக்ட்ரிக் மொபெட் ஒன்றை ஹோண்டா உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும், இது ஹோண்டா நிறுவனத்தின் கழற்றி மாற்றக்கூடிய சேவையை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சேவையை ஹோண்டா நிறுவனம் 2021 வாக்கில் துவங்கியது.

    இதனை தற்போது எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக விளங்கும் ஹோண்டா எலெக்ட்ரிக் வாகன பிரிவில் சற்று தாமதமாகவே களமிறங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவங்கி இந்த பிரிவில் அதிக கவனம் செலுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இது பற்றிய முழு விவரங்கள் மார்ச் 29 ஆம் தேதி தெரியவரும். 

    • ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் கர்நாடகாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எலெக்ட்ரிக் மோட்டார்களை ஹோண்டா நிறுவனமே உருவாக்க இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றிய தகவல்களை தெரிவித்து இருக்கிறது. இதற்காக ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய இ பிளாட்ஃபார்மை அறிவித்துள்ளது. இது ஃபிக்சட் பேட்டரி, கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி மற்றும் மிட் ரேஞ்ச் பிரிவு என பல்வேறு விதமான எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    பிராஜக்ட் வித்யுட் எனும் திட்டத்தின் கீழ் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முதல் வாகனமாக மிட் ரேஞ்ச் எலெக்ட்ரிக் மாடல் இருக்கும். இரண்டாவது மாடல் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்கும். இது ஹோண்டா மொபைல் பவர் பேக் இ பயன்படுத்தும்.

     

    புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதோடு, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் நாடு முழுக்க சார்ஜிங் உள்கட்டமைப்புகளை கட்டமைக்க இருக்கிறது. இதற்காக நாடு முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிகமான நெட்வொர்க் டச்பாயிண்ட்களில் சார்ஜிங் மையங்களை இன்ஸ்டால் செய்ய இருக்கிறது.

    இதுதவிர பேட்டரி மாற்றும் மையங்களை பெட்ரோல் நிலையங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் மற்றும் இதர பொது இடங்களில் கட்டமைக்க ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள நரசபுறா ஆலை முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த இருக்கிறது.

    இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உபகரணங்களான பேட்டரிகள் மற்றும் பிசியுக்களை பயன்படுத்தவுள்ளன. மேலும் இந்த வாகனங்களுக்கான மோட்டாரை ஹோண்டா நிறுவனமே உருவாக்க இருக்கிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ் நாட்டின் செய்யாறு பகுதியில் புதிய உற்பத்தி ஆலை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் எலெக்ட்ரிக் மாடல்களும் அடங்கும். பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் களமிறக்கி வரும் ராயல் என்பீல்டு, எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன், எலெக்ட்ரிக் ஹிமாலயன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இது தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை பொருத்தவரை முதலில் அதிக விலை கொண்ட மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

     

    பின் இதைத் தொடர்ந்து பிரத்யேக மோட்டார்சைக்கிள், இறுதியில் குறைந்த விலை பைக் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இவை வரும் ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகமாகும். தற்போது இருக்கும் ராயல் என்பீல்டு மாடல்களின் அடிப்படையில், இந்த திட்டம் நிறுவன மாடல்களுக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு உருவாக்கி வரும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் L1A எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் மற்றொரு பிளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த பிளாட்ஃபார்ம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை.

    கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான ஸ்டார்க்-இல் ராயல் என்பீல்டு நிறுவனம் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இந்த திட்டம் அமலுக்கு வர அதிக காலம் ஆகும் என்றே தெரிகிறது.

    Photo Courtesy: Autocar 

    • எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
    • எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு.

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுவது சாதாரண காரியம் தான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளிலும் பயனர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் நிலையிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் சிக்காமல் இருக்கவும், எலெக்ட்ரிக் வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் மேற்கொள்ள வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    உடனே சார்ஜ் செய்ய வேண்டாம்:

    எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது பேட்டரி பேக் சூடாக அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக வாகனத்தை பயன்படுத்திய உடனே அதனை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, பேட்டரி ஆயுளும் மேம்படும்.

    நீண்ட நேர சார்ஜிங்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவுக்கு சார்ஜ் செய்வது பேட்டரி ஆயுளை பெருமளவு பாதிக்கும். மேலும் அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக வாகனம் தீப்பிடித்து எரிய அதிக வாய்ப்புகள் உண்டு.

    மழையின் போது சார்ஜிங்:

    நீரும், மின்சாரமும் ஒன்றாகும் போது ஏற்படும் விளைவு அனைவரும் அறிந்ததே. வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பான வாட்டர் ப்ரூஃபிங் வசதி வழங்கினாலும், சில சமயங்களில் சிறு ஓட்டை மூலம் மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் மழை பெய்யும் போது வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    சார்ஜர்களில் கவனம் அவசியம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய சான்றளிக்கப்பட்ட சார்ஜிங் மையத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் அதனை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

    பேட்டரி பயன்பாடு:

    எலெக்ட்ரிக் வாகன பேட்டரியை முழுமையாக தீர்ந்து போகும் வரை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கிற்கு அழுத்தம் அதிகரித்து, அதன் ஆயுளை குறைக்கும். இதோடு பேட்டரி பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கும். 

    • இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
    • தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத திறன், எளிய பயன்பாடு மற்றும் பராமரிப்பு மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

    உலகம் முழுக்க செகன்ட் ஹேண்ட் எனப்படும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை விலைக்கு வாங்கி, அதனை மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இதே வழக்கம் வாகன பயன்பாட்டிற்கு அதிகம் பொருந்தும். அந்த வகையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்க திட்டமிடுகின்றீர்களா? இவ்வாறு செய்யும் முன் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனையாகும் அளவுக்கு எலெகட்ரிக் வாகனங்கள் விற்பனையாவதில்லை. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையான விற்பனையை எலெக்ட்ரிக் வாகனங்கள் எட்டுவதற்கு மேலும் சில காலம் ஆகும்.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சீராக இருந்து வருகிறது. இதே போன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் துறை மீதான விருப்பமும் அதிகரித்து வருவதால், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் திட்டத்தை ஒத்திவைப்பது, தற்காலிகமாக ரத்து செய்வது போன்ற முடிவுகளை எடுக்கின்றனர்.

    பேட்டரி பேக் ஆயுள்:

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று இது. தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் உண்டு. சீரற்ற சார்ஜிங் பழக்கங்கள் இதனை வெகு விரைவில் ஏற்படுத்த செய்யும். பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் வாகனங்களில் என்ஜினில் ஏற்படும் விசித்திர சத்தம் கொண்டு என்ஜின் கோளாறை கண்டறிந்து விடலாம். எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை பேட்டரியை முழுமையாக தீர்ந்து போக செய்து அதன்பிறகு மீண்டும் முழு சார்ஜ் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது பேட்டரியை சார்ஜ் செய்ய, குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்ததை விட அதிக நேரம் ஆகும் பட்சத்திலோ அல்லது விரைவில் சார்ஜ் இறங்கும் பட்சத்திலோ பேட்டரி பாழாகி இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம். ஒருவேளை பேட்டரி பாழாகும் பட்சத்தில் அதனை எளிதில் சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ முடியும்.

     

    தேய்மானம்:

    பிரீமியம் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விரைந்து தேய்மானம் ஆகிவிடும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரீமியம் மாடலாகவே கருதப்படுகின்றன. இதன் காரணமாகவே பயன்படுத்தப்பட்ட எலெர்க்ரிக் வாகனத்தை வாங்க விரும்புகின்றனர்.

    பராமரிப்பு:

    பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரித்தல் மிகவும் எளிமையான காரியம் ஆகும். இதன் பவர்டிரெயினில் அசையும் பாகங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். இதன் காரணமாக பராமரிப்பு கட்டணம் பெருமளவு குறைவு ஆகும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணம் அதிகம் ஆகும்.

    எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதால், ஏற்படும் மின் கட்டண செலவு குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்.

     

    சார்ஜிங் உள்கட்டமைப்பு:

    எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது சார்ஜிங் உள்கட்டமைப்பு மிகவும் அத்தியாவசியமானது ஆகும். ஏத்தர் 450 போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஃபாஸ்ட் சார்ஜர்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குவோர், வீட்டில் ஃபாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்து வைப்பது அதிக பயனுள்ளதாக இருக்கும்.

    பயன்பாடு மற்றும் பராமரிப்பு கட்டணம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரிப்பது மிகவும் எளிய காரியம் ஆகும். இதற்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் மிகவும் குறைவு ஆகும். தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் கட்டணம் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உபயோகிப்பாளர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள தொழில்நுட்பம் முன்பு இருந்ததை விட பெருமளவு அதிநவீனமாக மாறிவிட்டன. இவற்றில் எளிதில் மென்பொருள் அப்டேட் வழங்கும் நிலை வந்துவிட்டது. சமீபத்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பழைய மாடலை விட பல விஷயங்களில் மேம்பட்டவைகளாகவே இருக்கின்றன. 

    • புதிய தலைமுறை பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
    • டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமும் செய்ய இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் பேட்டரி தொழில்நுட்பங்கள் சார்ந்த திட்டங்கள் பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இவை 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் அதே வேளையில், டொயோட்டா நிறுவனம் தனது லித்தியம் நிக்கல் கோபால்ட் மங்கனீசு (NCM) பேட்டரியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை பேட்டரி பேக்குகள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    அதிக ரேன்ஜ் மட்டுமின்றி இவை தற்போதைய பேட்டரிகளை விட கட்டணத்தை 20 சதவீதம் வரை குறைக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பேக் அதிக திறன் வெளிப்படுத்துவதோடு, bZ4X மாடலில் உள்ளதை விட மேம்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

    புதிய தலைமுறை NCM பேட்டரிகள் தவிர, டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பைபோலார் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இவை எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் ரேன்ஜ்-ஐ 20 சதவீதம் அதிகப்படுத்துவதோடு, தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களை விட 40 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கும் என்று டொயோட்டா நிறுவனம் கருதுகிறது. 

    • கடந்த மே மாதம் 1 லட்சத்து 05 ஆயிரம் யூனிட்கள் விற்பனையானது.
    • இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிய தொடங்கி உள்ளது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை கடந்த சில மாதங்களாக விற்பனையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. இனி வரும் மாதங்களில் இந்த நிலை முழுமையாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர். மத்திய அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கி வந்த மானியம் குறைக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

    ஜூன் 2023 மாதத்தில் மட்டும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை 60 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. 2013 ஆண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை 2 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 7.4 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், தான் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை சரியத் தொடங்கி உள்ளது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    கடந்த மே மாதம் 1 லட்சத்து 05 ஆயிரம் யூனிட்கள் விற்பனையான நிலையில், ஜூன் மாத விற்பனை 35 ஆயிரத்து 464 ஆக சரிந்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 57 சதவீதம் குறைவு ஆகும். ஏப்ரல் மாதத்தில் 66 ஆயிரத்து 724 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்த நிலையிலேயே உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பலர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க ஆரம்பித்தனர்.

    விற்பனை கணிசமாக அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கி வந்த மானிய தொகையை குறைத்து விட்டது. ஜூன் 1-ம் தேதி மானிய குறைப்பு அமலுக்கு வந்த நிலையில், எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை குறைய தொடங்கி இருக்கிறது. 

    ×