search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணர்"

    • ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.
    • எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.

    ஒருவருக்கு நவராத்திரி நாட்களில் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவர் நவராத்திரி எட்டாவது தினமான அஷ்டமி தினம் அவசியம் பூஜிக்க வேண்டும்.

    ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.

    எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.

    அதுமட்டுமல்ல கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமி தினத்தன்று தான் மகா மாயையான துர்க்கையும் நந்தகோபாலன் இல்லத்தில் அவதரித்தாள்.

    ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது.

    சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும்.

    இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.

    நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.

    • வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும்.
    • குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

    சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர்.

    கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள்.

    மாக்கோலம்

    வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

    வீட்டின் வாயிற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சு சேவடிக் கமலங்களை மாக்கோலமாக இடுவார்கள்.

    கோகுலத்தில் கண்ணன் தனது தோழர்களுடன் கோபியர் இல்லந்தோறும் சென்று வெண்ணெயைத் திருடித் தின்னும்போது, வீடு முழுவதும் வெண்ணெய் சிதறிக் கிடக்கும்.

    அவனது கமலப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடுகள் முழுவதும் நிறைந்திருக்கும்.

    இந்த நினைவுச் சின்னமாகவே மாக்கோலத்தால் வரையப்பட்ட மாக்கோலங்கள் திகழ்கின்றன.

    • அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.
    • சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார்.

    உறி ஒன்றில் சட்ட ஒன்றைக் கட்டி வைத்து கயிற்றில் தொங்கவிட்டிருப்பார்கள். கம்பால், உறியில் உள்ள சட்டியைத் தட்டி உடைக்க வேண்டும்.

    அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.

    அப்போது பெண்கள், உறியை அடிக்க முயற்சி செய்யும் இளைஞர்களின் மீது தண்ணீரை ஊற்றித் தடை செய்ய முயற்சிப்பார்கள்.

    சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார். அவருக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

    விளையாட்டாகவும் பொழுது போக்காகவும் நடைபெறும். இது, கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடிய நிகழ்ச்சியை நினைவு கூறவே.

    • அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.
    • வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும்.

    கிராமங்களில், கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள்.

    அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.

    வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும்.

    இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது, பெண்கள் தண்ணீரை அவர்கள்மீது ஊற்றுவார்கள்.

    எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும்.

    தண்ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.

    • மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும்.
    • படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார்.

    பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. எட்டே நாட்களில் 700 கோடியைத் தாண்டி வசூல்  வேட்டை நடத்தி வருகிறது.

    நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர் பட்டாலமே நடித்துள்ளது. பேன்டஸி பிக்சனாக உருவாகியுள்ள இப்படத்தின் கதை மகாபாரதம், கிருஷ்ணர், கலியுகம், கல்கியின் பிறப்பு ஆகியவற்றை சுற்றி நிகழ்கிறது.

    இந்நிலையில் ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வரும் வேளையில் 90 ஸில் பிரபல தொடரான சக்திமான் தொடரின் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா கல்கி 2898 ஏடி படம் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

     

    கல்கி 2898 ஏடி குறித்து அவர் கூறியதாவது, இந்த படம் மேற்கத்திய ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அளவுக்கு மிகவும் அதிபுத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும். ஒடிசா, பீகார் மாநிலங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் இது புரியாது.

    அதுமட்டுமின்றி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார். பகவான் கிருஷ்ணர், அஸ்வத்தாமாவின் நெற்றியில் உள்ள கல்லை சாபம் காரணமாக நீக்குவார். ஆனால் படத்தில் வேறு மாதிரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க் க்ளிக் செய்யவும்.

    • வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.
    • பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும்.

    சத்தியவதன் என்ற அரசனின் வழியில் வந்தவன், சத்ரஜித். இவன் சூரிய பகவான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். சூரிய பகவானை தினமும் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுக்கு சூரிய பகவானும் அருள்புரிந்து வந்தார்.

    ஒரு சமயம் சத்ரஜித்துக்கு, சூரிய பகவான் காட்சி கொடுத்தார். மிகுந்த ஒளியுடன் காணப்பட்டதால் சூரிய பகவானின் முழு உருவத்தையும் சத்ரஜித்தால் பார்க்க முடியவில்லை.

    அவன் சூரிய பகவானைப் பார்த்து, "இறைவா.. நீங்கள் மிகுந்த ஒளியுடன் இருக்கிறீர்கள். ஆகாயத்தில் பார்க்கும் பொழுது, உங்களின் முழு உருவத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் உங்களை தரிசனம் செய்ய முடியாத வருத்தம் எனக்கு ஏற்படுகிறது. உங்களின் திருவடி முதல் சிரசு வரை நான் தரிசிக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினான்.

    அதற்கு சூரிய பகவான், "என் கழுத்தில் உள்ள சியாமந்தக மணி அதிக ஒளியை வெளிப்படுத்துவதால்தான், உன்னால் என்னை பார்க்க முடியவில்லை" என்று கூறி, தன் கழுத்தில் இருந்த சியாமந்தக மணியை கழற்றி வைத்தார்.

    அதன்பிறகு சூரிய பகவானை முழுமையாக தரிசனம் செய்யும் பாக்கியம், சத்ரஜித்துக்கு கிடைத்தது. சூரியனின் கழுத்தில் கிடந்த சியாமந்தக மணி தனக்கு கிடைக்க வேண்டும் என்று சத்ரஜித் விரும்பினான். அவனது விருப்பத்தை அறிந்து கொண்ட சூரிய பகவானும், சியாமந்தக மணியை அவனுக்கு பரிசாக அளித்து விட்டு மறைந்தார்.

    இந்த சியாமந்தக மணி, ஒரு நாளைக்கு 8 பாரம் (ஒரு கழுதையால் சுமக்கக் கூடிய அளவு) பொன்னை அளிக்கக்கூடியது. இந்த மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு, சூரிய பகவானே நடந்து வருவது போல் துவாரகையை நோக்கி நடந்து சென்றான் சத்ரஜித். துவாரகை மக்கள் "சூரிய பகவானே வருகிறார்" என்பதாக பேசிக் கொண்டனர்.

    இதை அறிந்த கிருஷ்ண பகவான், 'இந்த ரத்தினம் நல்லவர்கள் கையில் இருக்க வேண்டியது, சத்ரஜித் கழுத்தில் இருப்பது தகாது. இது இருக்க வேண்டியது உக்கிரசேன அரசனின் அரண்மனை பொக்கிஷத்தில்தான்' என்று எண்ணினார்.

    இந்த எண்ணத்தை தெரிந்து கொண்ட சத்ரஜித், கிருஷ்ணரால் தனக்கு ஏதாவது துன்பம் வரலாம் என்று நினைத்து, சியாமந்தக மணியை தன்னுடைய தம்பி பிரசேனனிடம் கொடுத்து வைத்தான்.

    சியாமந்தக மணிக்கு ஒரு குணம் உண்டு. தகுதி இல்லாதவர், சுத்தமற்றவர் கையில் அது சென்றால், அது அந்த நபருக்கு கெடு பலன்களையே ஏற்படுத்தும்.

    பிரசேனன், சியாமந்தக மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு கம்பீரமாக காட்டில் வேட்டையாடச் சென்றான். ஒளி வீசும் அந்த மணியைக் கண்ட ஒரு சிங்கம், பிரசேனனையும், அவனது குதிரையையும் கொன்று விட்டு, சியாமந்தக மணியை ஏதோ ஒரு மாமிசம் என்று எண்ணிக் கொண்டு வாயில் கவ்விச் சென்றது.

    அந்த நேரத்தில் கரடிகளின் தலைவனான ஜாம்பவான் அங்கு வந்தார். அவர் சிங்கத்தின் வாயில் இருந்த சியாமந்தக மணியை கண்டதும், சிங்கத்தைக் கொன்று விட்டு, அதை எடுத்துச் சென்று தன் மகன் சுகுமாரன் விளையாடுவதற்காக அவன் தூங்கும் தொட்டிலில் கட்டி வைத்தார்.

    இதற்கு இடையில் காட்டிற்குச் சென்ற பிரசேனன், பல நாட்களாக திரும்பி வராததால், சியாமந்தக மணிக்காக கிருஷ்ணன்தான், பிரசேனனைக் கொன்று விட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்த வீண் பழி, கிருஷ்ணனின் காதிற்கும் சென்றது.

    அவர் 'இதை இப்படியே விடக்கூடாது. தன் மீது விழுந்த பழியை நீக்க வேண்டும்' என்று நினைத்து, தன் யாதவ சேனைகளுடன் காட்டிற்குச் சென்று பிரசேனனை தேடினார். அப்பொழுது பிரசேனனின் குதிரையின் காலடி தடம் இருப்பதைக் கண்டார்.

    அதை பின்பற்றிச் சென்றபோது, பிரசேனனும், அவன் குதிரையும் ஒரு இடத்தில் கொல்லப்பட்டதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து ஒரு சிங்கத்தின் காலடித் தடம் இருப்பதைப் பார்த்தனர்.

    அந்த தடத்தை பின்பற்றி செல்கையில், ஓரிடத்தில் சிங்கம் இறந்து கிடந்தது. அதற்கு அருகில் கரடியின் காலடித் தடம் தென்பட்டது. அதை பின்பற்றிச் செல்கையில், அது ஒரு குகையின் வாசலில் போய் முடிந்தது.

    குகைக்குள் சென்று பார்க்க அனைவரும் தயங்கினர். உடனே கிருஷ்ண பகவான் தனியாக அந்த குகைக்குள் சென்றார். அப்பொழுது ஒரு பெண், ஜாம்பவானின் மகனை கையில் வைத்துக்கொண்டு, சியாமந்தக மணியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனை பார்த்தவுடன் பயந்து அலற, அந்த சப்தம் கேட்டு ஜாம்பவான் அங்கு ஓடி வந்தார்.

    கிருஷ்ண பகவானுக்கும், ஜாம்பவானுக்கும் யுத்தம் ஆரம்பமாயிற்று. அவர்கள் இருவரும் 21 நாட்கள் தொடர்ந்து யுத்தம் செய்தனர். ஒருவருக்கொருவர் கைகளால் அடித்துக் கொண்டு மல்யுத்தம் புரிந்தனர். இறுதியில் ஜாம்பவான் தன் மேல் விழும் அடி அத்தனையும் ராமபிரானின் அரவணைப்பு போல் தோன்றுவதை உணர்ந்தார்.

    வந்துள்ளது நாராயணனின் அவதாரம் என்பதை அறிந்து கொண்ட அவர், கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தார். கிருஷ்ணனும் ஜாம்பவானிடம் மகிழ்ச்சியாக பேசினார். ஜாம்பவான், சியாமந்தக மணியை கிருஷ்ண பகவானிடம் கொடுத்துவிட்டு, தன் வளர்ப்பு மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்த கதையை படிப்பவர்களுக்கு, வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.

    • பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
    • விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

    01. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    02. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

    03. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

    04. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

    05.தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

    06. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

    07.கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

    08.பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

    09.கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    10.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

    11.கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    12. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்பது, பகவான் கிருஷ்ணன் இப்பூமியில் மானிடராக அவதாரம் செய்த திருநாளாகும்.

    13.தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம்.

    14.கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று அவலை வைத்து நிவேதனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

    15. கண்ணனைக் காணாத கோபியர்கள் பலவிதமாகப் புலம்பினார்கள். அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.

    • இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும்.
    • வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொருவரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் லீலைகளை நிகழ்த்திவிட்டு, "பாண்டவ தூதப் பெருமாள்" என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டார்.

    அதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:

    பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார்.

    அவரை அவமானப்படுத்த நினைத்தார் துரியோதனன்.

    அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான்.

    கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது.

    கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அவர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.

    பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார்.

    அப்போது ராஜா, "கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும்" என வேண்டினார்.

    ரிஷி கூறிய அறிவுரையின்படி இத்தலத்தில் தவம் செய்து, கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை அவர் கண்டார்.

    இந்த கிருஷ்ணரின் பெயர் "தூதஹரி" எனப்படும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வருப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.

    25 அடி உயரம் உடைய அவரது சிலை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறது.

    இந்த பிரமாண்ட சிலை சுதையால் செய்யப்பட்டது. எனவே இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    ஆண்டுக்கு ஒரு தடவை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது.

    இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும்.

    வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொருவரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள்.

    ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

    எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்த பிரச்சினைகள், துயரங்கள் இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி "விஸ்வபாத யோக சக்திகளை" கொண்டு அருள்கிறார்.

    எனவே இங்கு அடிப்பிர தட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும்.

    சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.
    • அதை உணர்த்தும் வகையில் தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது.

    உயரமான வழுக்கு மரம்!

    தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோவில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில் தான்.

    இங்குள்ள வழுக்கு மரக்கம்பத்தின் உயரம் 30 அடி.

    ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக, இரண்டு வாரங்களுக்கு முன் சோற்றுக் கற்றாழையுடன் விளக்கெண்ணை கலந்து இந்த வழுக்கு மரத்தில் பூசி, கோவில் வாசலில் நடுவார்கள்.

    இந்த வழுக்கு மரத்தில் ஏறி பண முடிப்பு பெறுவதை இந்த பகுதி மக்கள் கவுரவமாக கருதுகின்றனர்.

    திருக்கண்ணமங்கை

    திருவாரூர் மாவட்டத்தில் கண்ணனின் பெயரால் திருக்கண்ணமங்கை என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள மூலவரை 'பத்தராவிப் பெருமாள்' என்பர்.

    பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார்.

    பக்தர்கள் மீது குழந்தை போல அன்பு காட்டுவதால் 'பக்தவத்சலன்' என்றும் பெயர் உண்டு.

    இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

    அதை உணர்த்தும் வகையில் தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது.

    இங்கு ஒருநாள் தங்கி, பக்தியுடன் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.
    • அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள்.

    கண்ணனுக்கு சனிக்கிழமை

    கிரகங்களில் சனீஸ்வர பகவானுக்குரியது சனிக்கிழமை.

    அந்த தினம் கண்ணனை வணங்குவதற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.

    அனைத்து கிரகங்களும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டவையே.

    எனவே, கண்ணனை வணங்கினால் எந்த கிரகமும் துன்பம் தராது.

    கதவே இல்லாத கண்ணன் கோவில்

    கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார்.

    வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் வெண்ணையும் ஏந்தியுள்ளார்.

    தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.

    அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள்.

    அந்த விக்கிரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை.

    ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு.

    கர்ப்பகிரகத்தின் நுழைவு வாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும்.

    மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.

    • அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த “ராஸ லீலை’யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார்.
    • இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும்.

    இதை வைத்தே கண்ணன் வெண்ணை திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம்.

    இருப்பினும், கோபப்பட மாட்டார்கள். கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.

    செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணையினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ-வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான். அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

    அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராஸ லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார்.

    இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    "இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக் குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது.

    அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும். அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.

    • இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது “கோ” என்றால் ‘பசு’ இந்தா’ என்றால் வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும்.
    • கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல “பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்”.

    "பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் "கோவிந்தா" என்றுதான் சொல்லும். "கோவிந்தா" என்று சொன்னால் போனது வராது' என்று அர்த்தமாகும்.

    இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு.

    இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது "கோ" என்றால் 'பசு' இந்தா' என்றால் வாங்கிக்கொள்' என்று பொருள் வரும்.

    கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல "பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்".

    எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் நமக்கு பூரணமாகக் கிடைக்கும்.

    கோவிந்தா என்ற சொல்லுக்கு "பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்", "பூமியை தாங்குபவன்" என்று பொருளாகும்.

    எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

    ×