search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷீலா"

    • சினிமா துறையை பொறுத்தவரை பாலியல் தொடர்பான பிரச்சனை இல்லாத காலக் கட்டங்களே இல்லை.
    • குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

    கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பாலியல் விவகாரம் குறித்து ஹேமா கமிட்டியில் உறுப்பினராக இருந்தவரும், மூத்த நடிகையுமான சாரதா கூறியதாவது:-

    மலையாள திரையுலகம் மட்டுமின்றி சினிமா துறையை பொறுத்தவரை பாலியல் தொடர்பான பிரச்சனை இல்லாத காலக் கட்டங்களே இல்லை. எனது காலக்கட்டத்தில் இதுபோன்ற பிரச்சனைகளில் நடிகைகள் மவுனம் காத்தனர். அவமானம், பயம், எதிர்காலம் குறித்தான சிந்தை காரணமாக பலரும் தமக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்லாமல் மவுனம் காத்தனர். கல்வி அறிவில் சிறந்த தற்போதைய தலைமுறைக்கு அவர்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல எந்த பயமும் இல்லை. ஆனால் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து நடிகர்களுக்கு எதிராக தற்போது நடிகைகள் வெளியிட்டு வரும் குற்றச்சாட்டுகள் வெறும் ஷோ மட்டுமே. சிலர் கூறுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. தற்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரே விஷயம் வயநாடு பேரிடர் பற்றி மட்டுமே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மலையாளத்தில் மூத்த நடிகையான ஷீலா கூறியதாவது:-

    நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக கூற முன் வரவேண்டும். எனக்கு அதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை. ஆனால் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் நடந்த மோசமான அனுபவங்கள் குறித்து சக நடிகைகள் கூறி இருக்கிறார்கள். அன்றைய காலக்கட்டத்தில் இதுபோல் வெளிப்படையாக கூற வேண்டிய வாய்ப்பு, தேவைகள் இல்லாமல் இருந்தது. எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்களது பெயர்களை மட்டும் குறிப்பிடுவது ஏன்? என்று தெரியவில்லை.

    குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். திரைப்பட துறையில் பெண்களுக்காக எத்தனையோ நல்ல செயல்களை நடிகைகளின் பெண்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள், அவர்களை பாராட்டுகிறேன். ஹேமா கமிட்டியை அமைத்து, நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக பேச வாய்ப்பு தந்த அரசுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் நடிகை ஷீலா நடித்துள்ள படம் ஜோதி.
    • இப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

    இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் "ஜோதி". எமோஷனல் கலந்த கிரைம் திரில்லரான இப்படத்தில் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரி க்ரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜா சேதுபதி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல் எழுதியுள்ளார்.

    ஜூலை திரையராங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது, "இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. முதல் பத்து நிமிட காட்சியை கண்டு மிரண்டு விட்டேன். இப்படத்தையும், பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

    ஜோதி

    ஜோதி

    மேலும், "போவதெங்கே" பாடலை பார்த்த மாணவர்கள் இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று வரிகள் ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×