search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணபதி"

    • தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் கணபதி பூஜை நடைபெற்றது.
    • இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் இன்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    • கிரேக்க நாட்டின் நெடுஞ்சாலையில் மைல்கற்கள் கணபதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
    • ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம் யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது.

    கம்போடியா

    கம்போடியாவில் விநாயகர் மூன்று கண்கள், பூணூல், ஒற்றைக்கொம்பு, கமண்டலம் ஆகியவற்றுடன் பிராசுஷேஸ் என்னும் பெயரில் இருக்கிறார்.

    எகிப்து

    எகிப்து நாட்டில் விநாயகர் கையில் சாவி இருக்கிறது.

    ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம் யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது.

    கிரேக்கம்

    கிரேக்க நாட்டின் நெடுஞ்சாலையில் மைல்கற்கள் கணபதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    ஆஸ்திரேலியா

    உலகின் பழமையான கண்டமான ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோவிலும் வடக்கு பகுதியில் சித்திவிநாயகர் கோவிலும் குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோவிலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் ஆலயமும் என நான்கு விநாயகர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

    • டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
    • நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.

    ஜப்பான்

    சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம்.

    கான்கிட்டன் ஹாயக்ஷா என்று விநாயகருக்குப் ஜப்பானில் பெயர்கள் உள்ளன.

    டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    தாய்லாந்து

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில் கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார்.

    நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.

    • கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விநாயகர் வழிபாடு சீனாவில் இருந்துள்ளது.
    • எந்திர வடிவில் வழிபடுகின்ற விநாயகர் சிலைக்கு குவன் ஹீபியின் எனப் பெயர் உள்ளது.

    சீனா

    கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விநாயகர் வழிபாடு சீனாவில் இருந்துள்ளது.

    சீனாவில் இருந்து இந்தியாவிற்கு குப்தர் காலத்தில் வருகை புரிந்த பாஹியான் தான் புத்தர் சிலையை சீனாவிற்குக் கொண்டு சென்றவர் என்று கூறுவார்கள்.

    எந்திர வடிவில் வழிபடுகின்ற விநாயகர் சிலைக்கு குவன் ஹீபியின் எனப் பெயர் உள்ளது.

    மலைசரிவுகளில் விநாயகர் வடிவம் காணப்படுகின்றது.

    துன்ஹவாங் குங்க்சியான் முதலிய இடங்களில் உள்ள குடவரை கோவில்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன.

    • அல்லல் தீர்த்த விநாயகர் - திருவண்ணாமலை
    • சித்தி விநாயகர் - மதுரை

    வெயிலுகந்த விநாயகர்

    நவபாஷாணம் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள உப்பூர் என்ற இடத்தில் விநாயகப் பெருமான் வெயிலுகந்த விநாயகர், என்ற திருப்பெயருடன் அருள் தருகிறார்.

    இவருக்கு எப்பொழுது கோபுரம் கட்ட ஆரம்பித்தாலும் எப்படியோ இடையூறு ஏற்பட்டு நின்றுவிடுமாம்.

    வெயிலிலும் மழையிலும் இவர் எப்பொழுதும் நனைவதால் இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாம்.

    விநாயகரது அறுபடை வீடு

    அல்லல் தீர்த்த விநாயகர்- திருவண்ணாமலை

    ஆழத்து விநாயகர்- விருத்தாசலம்

    கள்ள வாரணப் பிள்ளையார்- திருக்கடையூர்

    சித்தி விநாயகர்- மதுரை

    பொல்லாப்பிள்ளையார்- திருநாரையூர்

    துண்டிராஜபிள்ளையார்- காசி

    • வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.
    • மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.

    செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.

    சுக்ல சதுர்த்தசி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும்.

    வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.

    மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.

    நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.

    வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.

    சதுர்த்தியன்று அரிசி நொய்யை சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

    உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும்.

    நாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

    • தேவகோட்டையில் கலங்காத விநாயகர் உள்ளார். ஆவணி அமாவாசை உத்திர நட்சத்திரம் அன்று இவர் வீதி உலா வருவதைக்காணலாம்.
    • முன்பு, போருக்குச் செல்லும் அரசர்கள், இந்த விநாய கரை வணங்கி பூஜை செய்துவிட்டுதான் போருக்கு புறப்பட்டுப் போவார்கள்.

    தேவகோட்டையில் கலங்காத விநாயகர் உள்ளார். ஆவணி அமாவாசை உத்திர நட்சத்திரம் அன்று இவர் வீதி உலா வருவதைக்காணலாம்.

    முன்பு, போருக்குச் செல்லும் அரசர்கள், இந்த விநாய கரை வணங்கி பூஜை செய்துவிட்டுதான் போருக்கு புறப்பட்டுப் போவார்கள்.

    பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன் இந்த விநாயகரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

    நீதிமன்றத்தில் வழக்குத்தொடர விரும்புபவரும் வழக்கில் வெற்றிபெற விரும்புபவரும் இவ்விநாயகரைத் தரிசனம் செய்து வேண்டிக்கொள்வதைக் காணலாம்.

    இவரை பூஜித்து செல்பவர்கள் ஒருபோதும் தோல்வியைக் கண்டதில்லை என்கின்றனர்.

    • திருவாரூரில் கமலாலயத் தீர்த்தக் குளத்தின் கீழக்கரையில் அமர்ந்துள்ள பிள்ளையார் இங்க் பிள்ளையார் என்று அழைக்கப்படுகின்றார்.
    • பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகருக்கு வெளிய மருத மரத்தடியில் வீற்றிருப்பவர் பாஸ்போர்ட் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

    இங்க் பிள்ளையார்

    திருவாரூரில் கமலாலயத் தீர்த்தக் குளத்தின் கீழக்கரையில் அமர்ந்துள்ள பிள்ளையார் இங்க் பிள்ளையார் என்று அழைக்கப்படுகின்றார்.

    தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் இந்த பிள்ளையார் முன் பிரார்த்தனை செய்தவாறு இங்கை (மையை) விநாயகர் மீது உதறி விட்டு சென்றால் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவி வருகின்றது.

    பாஸ்போர்ட் பிள்ளையார்

    பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகருக்கு வெளிய மருத மரத்தடியில் வீற்றிருப்பவர் பாஸ்போர்ட் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

    வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் வைத்து அவரை வேண்டினால் சீக்கிரம் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைப்பதனால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

    • விநாயகர் துதிக்கை இடம் சுழித்திருப்பின் இடம்புரி விநாயகர் எனவும் வலம் சுழிந்திருப்பின் வலம்புரி விநாயகர் எனவும் கூறுவர்.
    • வலம்புரி விநாயகர் வெற்றியைத் தரும் வடிவமாகும்.

    டிரான்ஸ்பர் விநாயகர்

    கோவை நகரில் அமைந்துள்ள பல்வேறு விநாயகர்களுள் டிரான்ஸ்பர் விநாயகர் மிகவும் பிரசித்தம்.

    தங்களுக்கு விருப்பமான ஊர்களுக்கு மாறுதல் வேண்டும் பணியாளர்களுடைய கோரிக்கையினை இவ்விநாயகர் நிறைவேற்றி வைப்பதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகின்றது.

    வலம்புரி விநாயகர்

    விநாயகர் துதிக்கை இடம் சுழித்திருப்பின் இடம்புரி விநாயகர் எனவும் வலம் சுழிந்திருப்பின் வலம்புரி விநாயகர் எனவும் கூறுவர்.

    வலம்புரி விநாயகர் வெற்றியைத் தரும் வடிவமாகும்.

    துதிக்கை வலம் சுழிக்கப்பெற்ற வலஞ்சுழி விநாயகரை திருவலஞ்சுழியிலும் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும், பிள்ளையார்பட்டியிலும் காணலாம்.

    சர்ப்ப விநாயகர்

    பாபநாசம் நகரின் மையப்பகுதியில் ஐந்துதலை சர்ப்ப விநாயகர் உள்ளார். இவர் நாகதோஷங்களை நீக்கியருளுகின்றார்.

    • நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களை கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.
    • விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையவர்.

    நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களை கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.

    விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையவர்.

    ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார்.

    இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார்.

    நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் ஒரே நேரத்தில் நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும்.

    • இத்திருக்கோவில் சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேசுவரர் கோவிலின் இணைக் கோயிலாக உள்ளது.
    • இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    எமனை எதிர்க்கும் விநாயகர், திருப்பைஞ்லி

    திருச்சி மணச்சநல்லூரிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் இருக்கும் திருப்பைஞ்ஞீலியில் உள்ள எமன் கோவிலின் நுழைவாசலுக்கு முன்பாக உள்ள விநாயகர் தெற்கு திசையை நோக்கிய வண்ணம் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.

    இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி உதைக்கும் நிலையில் காணப்படுகிறார்.

    அதாவது தெற்கு திசையில் உள்ள எமன் இங்கு வந்தால் எதிர்ப்புத் தெரிவிக்க உதைக்கும் நிலையில் இந்த தோற்றம் என்கிறார்கள்.

    நோய் நொடியின்றி வாழ இவர் அருள்பாலிக்கிறார்.

    ராஜகணபதி, சேலம்

    அவ்வையார், பூத உடலோடு திருக்கைலாயத்துக்குச் செல்லும் போது இத்தலத்து ராஜ கணபதியைத்தான் வணங்கிச் சென்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.

    இத்திருக்கோவில் சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேசுவரர் கோவிலின் இணைக் கோயிலாக உள்ளது.

    இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது.
    • அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை.எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூட்டி வழிபடலாம்.

    வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேரைத் தேர்ந்தெடுத்து சாஸ்திர முறைப்படி மஞ்சள் காப்பு கட்டி, மந்திரம் கூறி, எடுத்து வடித்த விநாயகர் திருவுருவத்துக்கு சக்தி அதிகம்.

    சென்னைக்கு அருகில் உள்ள ஓரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது.

    கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது.

    அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை.

    எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூட்டி வழிபடலாம்.

    அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் பொருள்களைச் சாத்தலாம்.

    வெள்ளெருக்கு விநாயகர் எழுந்தருளிய வீட்டில் செல்வம் பெருகும். பீடைகள் அகலும்.

    மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.

    ×